Reviews for கோபல்ல கிராமம்
30 reviews total
user_5223
★ 5/5 Feb 02, 2026சிறு வயதில் என்னுடைய கிராமத்தில் சந்தித்த, ரசித்த பல மனிதர்களை இந்தப் புத்தகத்தில் மீண்டும் சந்தித்தேன். அப்படியே நம்மைக் கோபல்ல கிராமத்தின் குடிமகனாக வாழ வைக்கிறார் கி.ரா. இன்னும் இரண்டு முறையாவது மறுவாசிப்பு செய்தால் தான் இந்தப் புத்தகத்தை முழுமையாகச் சுவைக்க முடியும்.
user_5222
★ 5/5 Feb 02, 2026சாதாரண புத்தகங்களில் ஒரு கதையும் சில பாத்திரங்களும் இருக்கும். ஆனால் கோபல்ல கிராமம் மிகவும் வித்தியாசமானது. ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த மக்களின் கதையைச் சொல்கிறது. அவர்கள் எப்படி ஒரு கிராமத்தை உருவாக்கினார்கள், எப்படி விவசாயம் செய்தார்கள், வீட்டு விலங்குகளை வளர்த்தார்கள் என்பதை விவரிக்கிறது.
பல்வேறு நிகழ்வுகளை ஒன்றோடொன்று பின்னிக் கதையை முன்நகர்த்தும் விதம் புத்தம்புதிய வாசிப்பு அனுபவம். 1976ல் எழுதப்பட்ட இந்த நாவலின் புதுமையான கதைசொல்லல் ஆச்சரியப்படுத்துகிறது.
கி.ராஜநாராயணன் என் வீட்டின் பின்புறத்திலேயே வசித்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தலைக்கு மேலே இருந்த வைரத்தை நான் பார்க்காமல் போனேன்.
user_5221
★ 3/5 Feb 02, 2026வேறு தேசத்திலிருந்து குடிபெயரும் மக்கள், எப்படி ஒரு கிராமத்தை உருவாக்கி அதில் குடியேறுகிறார்கள் என்பதை சுவாரசியமான நிகழ்வுகளுடன் விவரிக்கும் நாவல். ஒரு கிராமம் பிறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை அப்படியே நம் கண் முன்னே நிறுத்துகிறார் கி.ரா. கிராம வாழ்க்கையின் ஆழமான விவரிப்பு மிக அருமை. குறிப்பாக அக்கையா பண்ணும் குறும்புகள் ரசிக்க வைத்தன.
ஆனால் ஒரு பெரிய குறை — நாவலில் கதை நகரும் விதம் மிகவும் சிதறலாக இருந்தது. தொடர்ச்சியாக பல அத்தியாயங்கள் கதாபாத்திரங்களை விவரிப்பதிலேயே போகும். திடீரென்று சில அத்தியாயங்கள் கதையை நகர்த்தும். கதையின் போக்குக்கு அதிகம் பங்களிக்காத பகுதிகள் இன்னும் கதையோடு நன்றாகக் கலந்து புனையப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சுவாரசியமான நாவல் தான். இருந்தாலும் கி.ராவுக்காகப் படிக்கலாம்!
user_5220
★ 4/5 Feb 02, 2026இது ஒரு நாவல் என்பதை விட, ஒரு கிராமத்தின் வாழ்க்கையை — அல்லது ஒரு கிராமத்தின் வாழ்வையே — மானுடவியல் ஆவணமாகப் பதிவுசெய்த படைப்பு.
தெலுங்கு நாயக்கர் குழு ஒன்று, அவர்களின் அரசன் குடும்பத்தின் இளைய மகளைத் திருமணம் செய்ய விரும்பியதால், தென் தமிழ்நாட்டின் ஒரு காட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து, அதை திருத்தி குடியேற்றம் அமைக்கிறார்கள். 1858 வரையிலான ஐந்து தலைமுறைகளின் கதை.
கதையின் ஓட்டத்திலும் பாணியிலும், இது வாய்வழிக் கதையாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட உண்மைக்கதையாக இருக்கலாம் என்று உணரமுடிகிறது. கோபல்ல கிராமத்துக்கு வெளியே நடக்கும் ஒரு கொலை, கதையின் தளர்வான கட்டமைப்பாக அமைகிறது. அதைச் சுற்றி கிராமத்தின் வரலாறு, ஒவ்வொரு பாத்திரத்தின் கதை என முன்னும் பின்னுமாகப் பயணிக்கிறோம்.
user_5219
★ 5/5 Feb 02, 2026ஓர் அசாதாரணமான கிராமியக் கதை!
கிடையின் சாயல் ஆங்காங்கே இருந்தபோதும், ஒரு கிராமத்தின் ஆச்சரியம் மிக்க மற்றொரு முகத்தைக் கண்டேன். நகரத்திலேயே வாழ்ந்து வளர்ந்த எனக்கு ராஜநாராயணன் அவர்கள் விவரிக்கும் கிராமம் மிக வசீகரமாகவும், சிந்தனைக்கு உள்ளாகும் விதமாகவும் இருக்கிறது.
கோபல்ல கிராமத்தின் அன்றாட வாழ்க்கை, அக்கையாவின் குறும்புகள், சென்னாதேவியின் கதை, தீவட்டிக்காரன்களின் பயம் கொள்ள வைக்கும் கொள்ளைகள், ஊர்கூட்டத்தின் பிரமுகர்களின் பெயர்களும் பெயர்காரணங்களும் எனக் கூறிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் இவைகளையும் தாண்டி மனதில் அதீத தாக்கத்தை உண்டாக்கியது: நாயகர்கள் ஊர் விட்டு ஊர் பெயர்ந்து கோபல்ல கிராமத்தைப் புதிதாக உருவாக்கிய விதமும் விவரங்களுமே. அயராத உழைப்பு, பிள்ளைக் காடு, பாம்பு நெய், காட்டுப்பசு, இறுதியாக விளைச்சல், கம்மாய், ஒரு குடும்பத்திற்கு ஒரு மரம் நடுதல், வணிகம் எனக் கிராமத்தை ஒவ்வொரு கல்லாய் செதுக்கிய விவரங்கள் மனதைக் கவர்ந்தன!
கோபல்லபுரத்து மக்களை சீக்கிரமாகவே வாசிக்கத் தூண்டுகிறது கோபல்ல கிராமம்.
user_5218
★ 3/5 Feb 02, 2026நலிந்த நிலையில் காணப்படும் நாயக்கர் வீட்டில் தொடங்கி, அவர்களின் மூதாதையர்கள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்த வரலாற்றை உரைத்து, நாடோடி வாழ்க்கையின் பலவித கோணங்களை அலசி, ஒரு கிராமம் உருவாகித் தழைப்பதன் சுவாரசியத்தைச் சுமந்து, இறுதியில் ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட கசப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக, அதை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழும் புள்ளியில் கதை நிறைவடைகிறது.
இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் நூலுக்கான அடித்தளமாகவே இக்கதை இருப்பினும், வழக்கத்திற்கு அப்பாற்பட்ட கதைசொல்லலாலும் ருசியான பல கிளைக்கதைகளாலும் நம் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது.
வயதான மங்கத்தாயாரு அம்மாள் பிரதான பங்கு இக்கதையில் வகித்தாலும், ஏழு ஆண்மக்கள் நிறைந்த நாயக்கர் வீட்டில் உள்ள பெண்களில் ஒருவரைக்கூட கதையில் குறிப்பிடாமலிருப்பது பெரும் குறையாகவே படுகிறது. அக்கால வாழ்வின் அசல் பிரதிபலிப்பாக, வரலாற்றை ஆவணப்படுத்தும் பொக்கிஷமாக இருப்பினும், கதையில் தென்படும் பிற்போக்கு பழக்கவழக்கங்கள் சில சோர்வடையச் செய்கின்றன.
user_5217
★ 5/5 Feb 02, 2026கதைக்குள் கதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஓர் கதைக்குள் இத்தனை கதை வைக்க முடியுமா என்றால் முடியும் என்று காட்டியுள்ளார் ஐயா கி.ரா.
இந்தக் கோபல்ல கிராமத்தை வாசிக்கத் தொடங்கியதும், ஏதோ கதை சொல்ல வருகிறார் இது தான் மையம் என நினைப்போம். ஆனால் அந்தக் கதையை அங்கேயே கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு கதையைத் தொடர்கிறார். இத்தனை கிளைக் கதைகளைக் கொண்டிருந்தாலும், இன்னது தான் கதையென்று யூகிக்க இயலாவிட்டாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
புலம்பெயர் மக்களின் நிலையினை வலிகளை வேதனைகளை இந்த நூலின் அளவுக்கு நுட்பமாகக் காட்ட இயலுமா என்று தெரியவில்லை. அவ்வளவு தத்ரூபமாக நம்மையும் அவர் கூடே அழைத்துச் செல்லும் விதம் பிரம்மிப்பு. கி.ரா அவர்கள் கதை சொல்லும் விதம் கேட்டுக்கொண்டே போகலாம், கரிசல் வாழ்வை அனுபவிக்கலாம்.
user_5216
★ 4/5 Feb 02, 2026தெலுங்கு தேசத்திலிருந்து இங்கு குடியேறிய ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், எப்படி அவர்களுக்கான கிராமத்தை அமைத்துக் கொண்டனர் என்பதைக் கூறுகிறது.
நூற்றாண்டைக் கடந்த கதை என்பதால், மங்கத்தாயரு என்னும் பூட்டியைப் பாலமாகப் படைத்திருக்கிறார். மங்கத்தாயருவின் பாத்திரம் மட்டுமில்லாமல் சென்னாதேவி, துளசி, கோவிந்தப்ப நாயக்கர், அக்கையா என்று அனைத்து மனிதர்களும் வெவ்வேறு குணத்தில் இருந்தாலும் கதையில் முக்கிய மனிதர்களே.
சென்னாதேவியின் அழகில் மயங்கி துளுக்க ராஜா ஒருவன், அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைபடுகிறான். அவளின் குடும்பம் அவனிடமிருந்து தப்பித்து நெடுந்தூரம் பயணப்படுகிறார்கள். இப்போது கிராமம் இருக்கும் இடத்தில் பெரிய காடு இருந்தது. அதை எவ்வாறு மாற்றிக் கிராமமாக மாற்றினார்கள் என்பதை அழகாகக் கூறியிருக்கிறார். ஒரு நாள் காட்டிலிருந்து பசு இந்தக் கிராமத்திற்கு வந்தது. அன்றிலிருந்து பசு மாடுகள் நிறைய வந்துவிட்டன. கோபல்ல என்று பெயர் வந்தது அதனால் தான்.
கோபல்லபுரத்து மக்களின் கதை என்று நூலின் முதல் பாகமே இந்தப் புத்தகம்.
user_5215
★ 5/5 Feb 02, 2026பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வருவதற்கு முன்னுள்ள காலகட்டக் கதை இது. இருநூறு பக்கங்கள் கூட இல்லாத சிறிய நாவல், சிறு சிறு அத்தியாயங்களாக அமைந்தது.
அக்காலத்திலேயே எவ்வளவு பெரிய கதையை முடிந்தவரை குறைவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் மீது கொள்ளையன் ஒருவன் தாக்குதல் நடத்துகிறான், அவளைக் கொன்று நகைகளைக் கொள்ளையடிக்கும் நேரத்தில் பிடிபடுகிறான். அந்த ஊரே கோபாலபுரம்.
அந்த ஊருக்கே ஒரு கடுமையான வரலாறு இருக்கிறது. முஸ்லிம் படையெடுப்பாளர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக்கொள்ள ஓடிவந்த குழு நிலைகொண்ட இடம் அது. இதைப் படிக்கும்போது தேவனூர் மஹாதேவாவின் குசுமபாலே நினைவுக்கு வருகிறது.
user_5214
★ 4/5 Feb 02, 2026ஒரு கொலையில் ஆரம்பித்து இன்னொரு கொலையில் கிட்டத்தட்ட முடியும் கதை. இரு கொலைகளுக்கு மத்தியில் இந்த நாவல் நகர்ந்தாலும் எந்தப் பரபரப்பும் இன்றி கிழித்த கோட்டில் செல்லும் நீர் போல சுவாரசியத்துடன் நகரும் கதையாடல்.
ஓர் இனக்குழு சில காரணங்களுக்காகச் சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்கிறது. நடுவில் சில துயரங்கள் நம்பிக்கைகள் கதையை நகர்த்துகின்றன. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு புலம்பெயர்ந்ததின் எந்தச் சுவடும் இன்றி வாழும் இடத்தின் இயல்போடு பின்னிப்பிணைந்த வாழ்வியலே நாவலின் அடிநாதம்.
கதையில் நாயகன் இல்லை, நாயகி இல்லை, அதிரடிகள் இல்லை, ஆரவாரம் இல்லை. உணர்வதற்கு இலகுவாகப் பக்கங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கிறது கோபல்ல கிராமம்.