Reviews for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

30 reviews total

user_4983

★ 3/5 Feb 02, 2026

சிந்திக்கவைக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட நாவல். எல்லா கதாபாத்திரங்களும் நல்லவர்களாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!

user_4982

★ 5/5 Feb 02, 2026

கிருஷ்ணராஜபுரம் ஊரையும் அதில் வாழ்ந்த மனிதர்களையும் பப்பா சபாபதி பிள்ளை சொன்ன கதைவழியே அறிந்தவன் ஹென்றி. சபாபதி மறைந்தபின் "மகனே" என்று ஆசையோடு இனி யார் அழைப்பார்கள் என்று அவர் நினைவில் ஆழ்ந்தவன், அவர் வாழ்ந்த ஊருக்குச் சென்றான்.

அந்த ஊரில் அவன் சந்தித்த துரைக்கண்ணு, பாண்டு, தேவராஜன், நாகம்மா, கிளியாம்பா, அக்கம்மா, மண்ணாங்கட்டி, மணியக்காரர், போஸ்ட் நடராஜன் — இவர்களுக்கு அவன் ஒரு அந்நியன். இவன் எதற்காக வந்தான் என்பதற்கான விடையே இந்தக் கதை.

கவர்ந்த சில வரிகள்: மண்ணாங்கட்டி என்ற பெயருக்கு ஆங்கில இணையாக ராக், ஸ்டோன் என ஹென்றி நினைக்குமிடம் ஆச்சரியமளிக்கிறது. "சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்!" — இப்படிப்பட்ட வரிகள் மனதில் தங்குகின்றன.

user_4981

★ 5/5 Feb 02, 2026

கதைமாந்தர்கள் பலரும் அவர்களுக்கே உரித்தான பாணியில் நம்மை வசீகரிக்கிறார்கள். கதையின் நாயகன் ஹென்றி பிள்ளை போல ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

user_4980

★ 3/5 Feb 02, 2026

இது ஒரு விசித்திரமான புத்தகம். வெறுக்கவில்லை, ஆனால் என்ன சொல்ல வருகிறார் என்றும் முழுமையாகப் புரியவில்லை. விமர்சனங்கள் எல்லாம் ஹென்றி என்ற கதாபாத்திரத்தைப் பற்றியே — அதுதான் கதையின் மையம் என்பது புரிகிறது. ஆனால் ஏதோ ஒன்று குறைவாக உணர்கிறேன்.

user_4979

★ 4/5 Feb 02, 2026

இந்தத் தலைப்புக்காகவே இந்த நாவலைப் படிக்கலாம். இது ஒரு அருமையான நாவல். இதில் வரும் ஹென்றி கதாபாத்திரம் போல இந்த நாவலையும் குதூகலத்துடனும் சுவாரசியமாகவும் ரசிக்க முடிகிறது.

இந்த நாவலைப் படித்து முடிக்கும்போது ஒரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் புத்தகம் இது.

user_4978

★ 5/5 Feb 02, 2026

ஹென்றி — சபாபதி பிள்ளையின் வளர்ப்பு மகன். தன் உண்மையான பெற்றோர், மதம், மொழி, இனம் எதுவும் தெரியாது. வளர்ப்பு பெற்றோரின் அரவணைப்பில் வளர்கிறான். இருவரும் இறந்தபின் தன் வளர்ப்புத் தந்தையின் சொந்த ஊருக்கு வருகிறான். அவரது உறவினர்கள் இவனை ஏற்றுக்கொண்டார்களா? பப்பாவின் சொத்துக்கள் என்ன ஆகின? ஹென்றி அவற்றை வைத்து என்ன செய்கிறான் என்பதே கதை.

ஜெயகாந்தன் இதை மிக எளிய நடையில் படைத்திருப்பது ஒரு அழகு. ஹென்றி அனைத்தையும் அனுபவித்து ரசித்து வாழும் அழகான கதாபாத்திரம். ஹென்றி-பப்பாவின் உரையாடல்கள் எல்லாம் சிலாகித்துக் கொண்டே இருக்கலாம்.

உலகத்தை நம்ம எல்லாருமே ஹென்றி கண்ணு வழியாப் பார்க்கணும். அனைவருமே நல்லவர்களாகவும், அனைத்துமே அழகாகவும் இருக்கும்!

"சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்!" — 1973இலேயே சாதி மத வேறுபாடின்றி கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். அன்பால் நிறைந்து வழிகிறது இந்தப் புத்தகம்!

user_4977

★ 5/5 Feb 02, 2026

ஹென்றிக்கும் பப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தன. முற்றிலுமாக ஒரு புதுவித அனுபவம்.

user_4976

★ 4/5 Feb 02, 2026

அனாதையாக விடப்பட்ட ஹென்றி என்ற மனிதனின் கதை. யாரோ ஒரு புண்ணியவானால் எடுத்து வளர்க்கப்பட்டு, பின்னாளில் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நட்புகொள்கிறான்.

அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே இந்த நாவல். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல்!

user_4975

★ 5/5 Feb 02, 2026

மூச்சடைக்கும் அளவு அற்புதமான, உலகத்தரம் வாய்ந்த இலக்கியம்! இது உண்மையா என்று வியக்கவைக்கும் பக்கங்களுக்கும், இது உண்மையாக இருக்க வேண்டுமே என்று ஏங்கவைக்கும் பக்கங்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்லும் இந்த நாவல், வாசகர் நினைவில் என்றும் பசுமையாக நிற்கும் அற்புதமான தருணங்கள் நிறைந்தது.

கதாபாத்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதும், கதையோட்டம் ஒருபோதும் திசை மாறாமல் இறுக்கமாக இருப்பதும் வியப்பூட்டுகிறது. இலக்கியத்தின் குணமாற்றும் சக்திக்கு எடுத்துக்காட்டான, ஆறுதலளிக்கும் நாவல் இது.

user_4974

★ 5/5 Feb 02, 2026

சில புத்தகங்கள் நம்மை விட்டு என்றும் பிரியாமல் நமக்குள்ளே ஒரு அங்கமாகவே ஆகிவிடும். இந்தப் புத்தகத்தை முதன்முதலில் வாசித்தது 5 வருடங்கள் முன். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வாசிக்க நேர்ந்தேன். ஆனால் அதுவே வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகும் என்று எதிர்பார்க்கவில்லை.

இப்போது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது மீண்டும் இந்தப் புதினத்தைப் படிக்க ஆவல் கொண்டேன். முடிவெடுக்கும் தருணத்தின் முன் ஹென்றியுடன் அவன் ஊருக்குச் சென்று வருவோம் என்று நினைத்தேன்.

துரைக்கண்ணுவுடன் லாரியில் ஆரம்பமாகும் கதை, கிருஷ்ணராஜபுரத்தில் ஹென்றி கொள்ளும் நட்புகளுடன் விரிகிறது. தேவராஜ் என்ற ஆசிரியர் அவனிடம் நெருக்கமாகிறார். ஹென்றியின் வெள்ளந்தி சுபாவத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறான்.

ஹென்றியிடம் காணும் தன்னிறைவுதான் என்னை மிகவும் கவர்ந்தது. கிராம வாழ்க்கையை ஏளனமாக நினைக்கும் தேவராஜுடன் சேர்ந்து ஹென்றி அந்த ஊர் வாழ்க்கையைக் கண்டு சந்தோஷமடையும்போது நாமும் மகிழ்கிறோம்.

மனக்குழப்பம் அடையும்போதெல்லாம் ஹென்றியுடன் கிருஷ்ணராஜபுரம் சென்று வருவதுண்டு. ஒவ்வொரு முறையும் மனதில் தெளிவு கிடைக்கிறது. அன்பைக் கொண்டாடும் ஒரு படைப்பே இந்தப் புதினம்.