அங்கே படுக்கையில் வெற்று மார்புடன் அமர்ந்து அறைக்குள் நுழைந்தவளை வேட்கையுடன் பார்த்தான் உத்தமன். அவனது பார்வையில் கால்கள் இரண்டும் பின்னிக் கொள்ள பெரும் அவஸ்தைப் பட்டுப் போனாள். “இப்படி பார்த்து வச்சா நான் எப்படி இயல்பா இருப்பேன்...” என்று முணகியவள், தன் உடன் கூட வந்த தன் அத்தையை அவஸ்தையுடன் பார்த்தாள். அவர் அவளுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து அந்த அறையில் வைத்துக் கொண்டு இருந்தார்.
தன்னவனின் பார்வையில் இருந்த குறும்பும் மோகமும் அவளை மூச்சு முட்ட வைத்தது...! கைக்கால்கள் லேசாக நடுங்கவே ஆரம்பித்தது...! புது பெண்ணுக்கு உரிய அத்தனை உணர்வுகளும் அவளை ஆட்டிப் படைக்க, உதடு கடித்து தன் உணர்வுகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. படுக்கைக்கு எதிரில் தான் நிலை கண்ணாடி இருந்தது...!
அங்கு தான் டேபிளும் இருந்தது. எனவே அங்கு நின்று தான் தலை அலங்காரம், மற்றும் நகைகளை கழட்ட முடியும்... அது அப்படியே அவனது கண் பார்வைக்கு படும். அதை நினைக்கும் பொழுதே உமைக்கு அடி வயிற்றில் ஒருவித பிரளயம் எழுந்தது.
இரு கரங்களையும் தூக்கி தலையில் இருந்த பின்களை எல்லாம் கழட்ட தொடங்க, கை தூக்கும் பொழுது இடையில் இருந்த புடவை சற்றே விலகி அவளின் இடைப் பகுதி அவனுக்கு தரிசனம் கொடுக்க முகம் சிவந்துப் போனாள்.
ஓரளவு பூக்களை எல்லாம் அகற்றியவள், தலையில் குத்தி இருந்த சில பின்களை அவளால் எடுக்க முடியவில்லை. தன் அத்தையை கூப்பிட்டாள்.
“இதோ வரேன் பாப்பா...” என்றவர் அவளுடைய பொருட்களை எடுத்து வைப்பதிலே இருக்க, கண்ணாடி வழியாக தன்னவளை பார்த்துக் கொண்டே வந்தவன், அவளது அனுமதி இன்றி அவளுடைய தேவையை செய்ய மனம் சிலிர்த்துப் போனாள்.
அதோடு அவன் விடுவான் என்று பார்க்க, அவள் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் அவளுக்கு நோகாமல் கழட்டி விட,
“எங்கே ஒரு சத்தத்தையுமே காணோம்..” என்பது போல அவளின் அத்தை திரும்பி பார்க்க, உமைக்கு அவன் நகைகளை கழட்டி விட்டுக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவருக்கு முகம் சிவக்க, அறையை விட்டு போக பார்க்க, அவரின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தவன், சட்டென்று அவளை விட்டு விலகி,
“நீங்க இருங்க ம்மா... அவ உங்களை தான் கூப்பிட்டா நீங்க கொஞ்சம் வேலையா இருக்கவும் நான் உதவி பண்ணினேன்.. இனி நீங்களே அவளை கேர் பண்ணிக்கோங்க...” என்றவன் மீண்டும் படுக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
அவன் அவளை விட்டு நீங்கிய பிறகே மூச்சு வந்தது.. அத்தை இருக்கிறார்கள் என்று கூட பாராமல் நகையை கழட்டுகிறேன் என்று பேர் பண்ணிக்கொண்டு அவனின் இதழ்களால் கொக்கி கழட்டி விடுகிறேன் என்று சொல்லி, கழுத்தில் உள்ள முடிகள் எல்லாம் சிலிர்க்கும் வண்ணம் முத்தம் வைத்து லேசாக கடித்தும் வைத்தவனின் சேட்டையில் உச்சி முதல் பாதம் வரை கூசி சிலிர்த்தாள்.
அதோடு அத்தை எங்கே பார்த்து விடுவாரோ என்று பயம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது..! கிடைக்கும் இந்த சின்ன கேப்பில் கூட உத்தமன் அவளை விட்டு நீங்காமல் சேட்டை செய்ய உதடு கடித்து கன்னம் சிவந்தாள்.
அவிழ்ந்த கூந்தலை அவளின் இட பக்கமாய் போட்டுவிட்டு வலக் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசனையை நுகர்ந்தவனின் கரம் அவளின் இடையை இறுக்கிப் பிடித்து அவளின் அவஸ்த்தையை கூட்ட, அதற்கு மேல் தாங்க மாட்டேன் என்பது போல அவளின் நிலை இருக்க நல்ல வேளை அவளின் அத்தை அவள் அருகில் வந்தார்.
அதுவரை இழுத்து வைத்த மூச்சுக் காற்றை வெளியே விட்டவள் தன்னவனை முறைத்துப் பார்த்தாள் ஆடி வழியாக. கட்டிலில் போய் அமர்ந்தவன் குறும்புடன் கண்ணடித்து “எப்படி...?” என்பது போல சீண்டல் பண்ண,
“அடி விழும்...” என்று ஒற்றை விரல் காட்டி அவனை எச்சரித்தாள் உமை. அவளுக்கு மீதமிருந்த நகைகளை கழட்டி விட்டவர்,
“நீ போய் குளி பாப்பா...” என்று அவளை குளியல் அறைக்குள் விட, அவரை சங்கடமாக பார்த்தாள். ஏனெனில் புடவை கொடுத்து இருந்தார். அதை எப்படி குளியல் அறையில் கட்ட முடியும். அதுவும் அறையில் வேறு உத்தமன் இருக்க... வெட்கம் பிடுங்கி தின்றது ..