தலைப்பு -உயிரழகே என்னருகே..
தலைவன் - உதயாதிபன்
தலைவி - வராளி
புத்தம்புது அமேசான் நேரடி கதை..
“என்ன சார் கால் டேக்சி புக் பண்ணேன்... நீங்க பாட்டுக்க போறீங்க... கஸ்ட்டமரை இப்படி தான் ஓட விடுவீங்களா?” என்று மூச்சு வாங்கியபடியே கேட்டாள் கையில் குழந்தையுடன்.
“எது கால் டேக்சியா?” கார் ட்ரைவர் புரியாமல் கேட்டார்.
“இங்க பாருங்க” என்று அவள் புக் பண்ணி இருந்ததை காட்டினாள்.
“எம்மா நம்பரை ஒழுங்கா பார்க்க மாட்டியா? முதல்ல போய் நம்பரை பாரும்மா” என்று எரிச்சலில் கேட்டார்.
“அதே நம்பர் தானே சார்...” என்று இவள் நம்பர் பிளேட்டை பார்க்க ஏழு என்று இருந்த என் ஒன்று என மாறி இருந்தது. தூரத்தில் இருந்து பார்த்ததால் இந்த சிக்கல் என்று புரிந்துக் கொண்டவள்,
“சாரி சார்...” என்று சொன்னவள் காரை விட்டு நகர்ந்துக் கொள்ள பின்னால் இருந்த கண்ணாடி மெல்ல இறங்கியது.. அதை பார்த்தவள்,
“தேவையில்லாம இவங்களை தொந்தரவு பண்ணிட்டோம் போலையே...” என்று உணர்ந்து, “சாரிங்க... உங்களை தொந்தரவு பண்ணதுக்கு... நான் வேணும்னு செய்யல... அவசர.... த்துல” என்று முடிக்கும் முன்பே அவளின் வாய் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது. மின்சார கம்பியின் மீது கால் வைத்தது போல அத்தனை சாக் அடித்தது அவளுக்கு.
வெள்ளை சட்டையில் கூர் பார்வையுடன் முறுக்கிய மீசையில் போர் வீரனுக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு இருந்த உதயாதிபனை கண்டு மூச்சு முட்டியது அவளுக்கு. அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்திப்பு..
“சா...ரி சாரி.. சார்...” என்றவள் சட்டென்று அந்த காரைவிட்டு விலகி பாட்டி இருந்த இடத்துக்கு ஓடி வந்து விட்டாள்.
“என்ன ஆச்சு பாப்பா... ஏன் இப்படி ஓடி வர? நாம புக் பண்ண கால் டேக்சி தானே” என்று அவர் கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
பெரும் அதிர்ச்சி... தடுமாற்றம்... இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது ஏனிந்த சந்திப்பு என்று தவித்துப் போனாள். அந்த கார் நிற்காமல் போக, போகும் அந்த காரையே வெறித்துப் பார்த்தாள் சில கணங்கள். நிச்சயம் அவனுக்கு தன்னை நினைவு இருக்காது என்று நம்பினாள். இல்லை என்றால் அந்த காரை வைத்தே தன் மீது ஏற்றி இருந்தாலும் ஏற்றி இருப்பான் என்று பெருமூச்சு விட்டாள்.
ஆனால் அவளை மூச்சு விட முடியாமல் வேகமாய் போன கார் ரிவேர்சில் வர அதிர்ந்துப் போனாள். அதுவும் அவளுக்கு மிக அருகில் வந்து நின்றது அந்த கார்.
“எதுக்காக கார் மறுபடியும் வருது” என்று யோசித்துக் கொண்டே நின்ற இடத்தில் இருந்து விலகி நிற்க,
அதற்குள் காரின் டிரைவர் “மேடம் நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க... நாங்களே உங்களை கொண்டு போய் விடுறோம்.. இந்த இடம் சேப் இல்ல... வாங்க” என்று அந்த கார் டிரைவர் சொன்னார். அவர் சொன்னதும் சரிதான். நடு காடு... உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல், யோசனையுடன் இருந்தவள் “அதுக்கு அவசியம் இல்ல சார், என் டேக்சி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும். தேங்க்ஸ் பார் யுவர் கைண்ட்நெஸ்” என்று சொன்னவள் மறந்தும் உதயாதிபனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
--
அந்த நேரம் உதயாதிபன் பிள்ளையை தொட வர பட்டென்று அவனது கையை தள்ளி விட்டாள் வராளி.
“சாரி சார்... இவன் என்னோட மகன்... இவனை தொட யாருக்கும் உரிமை இல்லை.. குறிப்பா உங்களுக்கு... டைவேர்ஸ் தான் ஆகிடுச்சுல்ல. பிறகு எதுக்காக எனக்கு உங்க கருணை மழையை பொழியணும்... இனி இன்னொரு முறை உங்களை என் வாழ்க்கையில் நான் பார்க்க வேணாம்னு நினைக்கிறேன்” என்றவள் அவனது கையை தள்ளி விட்டாள். அதில் உதயாதிபனுக்கு கட்டுக் கடங்காமல் கோவம் வர வேகமாய் அவளின் இடையோடு இழுத்து தன்னோடு இறுக்கியவன்,
“என்னடி எல்லாம் மறந்து போச்சா?” என்று அவளின் காதில் உறுமினான். அதில் கொஞ்சம் பயந்துப் போனாலும்,
“இப்படி அடுத்த பெண்ணை தொட்டு பேசுறீங்களே இது தான் உங்க நாகரீகமா? முதல்ல கையை எடுங்க சார் என் மேல இருந்து” என்று அடிக்குரலில் சீறியவள் அவனை விட்டு விலக பார்த்தாள்.
“யாருடி நீ அடுத்த பெண்ணா?” என்று கேட்டவன் அவள் கொஞ்சமும் எதிர்பாரா நேரம் அவளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வெளியே விட்டான். அதில் திகைத்துப் போனவள் வேகமாய் அதை மறைக்கப் பார்த்தாள். அவளது கையை பற்றி அவளது செயலை தடுத்தவன்,
“இந்த தாலியை கட்டியது யாருடி?” என்றான் கோவமாக. அவள் பதிலே பேசவில்லை. ஏனெனில் ஊர் உலகத்தில் இது போல ஒரு தாலியை யாரும் போட்டு இருக்க மாட்டார்கள். இவள் மட்டும் தான் அப்படி போட்டு இருக்கிறாள்.