கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]

None

4.27/5 · 11 ratings

ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்கு தந்திருக்கிறார் நாடோடிக் கதைகளைதிரட்டி தொகுத்திருக்கிறார் கயத்தார் சந்தன ஆசாரி என்பவருடன் …

Reviews

user_21678

★ 5/5
Hilarious. Lovely collection of rural, folk tales.

user_21677

★ 5/5
கிராமியக் கதைகள் - கி.ராஜநாராயணன் =================================== 2001இல் முதற்பதிப்பு கண்ட புத்தகம்.174 பக்கங்களில் 94 நாட்டுப்புற கதைகளை உள்ளடக்கியது. ஒரு சில கதைகள் பாதி பக்கமே உள்ள அளவிலும் , சில கதைகள் 3-4 பக்கங்கள் கொண்டவையாகவும் இருக்கின்றது. திருநெல்வேலி ஒட்டிய பகுதிகளில், தான் செவி வழி கேட்ட கதைகளையும், தாம் அறிந்த நாடோடி கதைகளையும், தனக்கே உரிய எள்ளல் பாணியிலும் வட்டார வழக்கிலும் சிறு குறு கதைகளாக கூறியிருக்கிறார், திரு கி.ரா. எல்லா கதைகளிலுமல்லாது, கரிசல் வட்டார வழக்கை ஆங்கங்கே சிற்சில கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். இக்கதைகளில் பல வகைகள் உண்டு. 1. சபை நடுவே நாலுபேர் கூடியிருக்கிற இடத்தில் சொல்லுகிற கதைகள். 2. இருவர் மட்டும் தனியாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் சொல்லி அனுபவித்துக்கொள்ளும் கதைகள். 3. ஆணும் பெண்ணும் தனியாக கூடி மகிழும் காலங்களில் சொல்லிக்கொள்ளும் கதைகள். 4. குழந்தைகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் கதைகள். இதில் பல கதைகள், துணுக்கு நகைச்சுவைகளாக பல திரைப்படங்களில் இடம்பெற்றதை அறியமுடிகிறது. மேலும், இதிலுள்ள பல கதைகளை, தந்து உதவியவர்களாக, நண்பர் வீர-வேலுசாமி, தோழர் பி.குமாரிமங்கை வீ.என்.கலாவதி , வீ.என்.கிருஷ்ணமூர்த்தி, என நன்றியறிவித்துள்ளார் திரு கி.ரா. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லா, மென்போக்கு வாசிப்பிற்கு ஏற்ற புத்தகம். புத்தகத்தில் திரு நா.வானமாமலையின் அணிந்துரையிலிருந்து... // நாட்டுக் கதைகளின் கருப்பொருள் மனித வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களாயினும், குடும்ப வாழ்க்கையின் பிரச்சினைகளும், அண்டை அயலார்களோடு பழகும்போது ஏற்படும் பிரச்சினைகளுமே முக்கியமானதாக இருக்கின்றன. இதற்கு காரணம் நமது நாட்டுப்புற மக்களுக்கு கடந்த 1000 ஆண்டுகளில் வீடும், ஊருமே உலகமாக இருந்தது. அதற்கப்பால் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு நேரடி தொடர்பில்லை. ஆகவே அரசியலும், தத்துவமும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தாக்கவில்லை சுயதேவைப் பூர்த்தி நோக்கமாகக் கொண்ட கிராம வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளே அவர்களுடைய பிரச்சினைகள். எனவே, நாட்டு கதைக்களும் இவற்றை பொருளாக கொண்டன //
Shelves
கி. ராஜநாராயணன் book

More like this


மாயமான்

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

4.27/5 · 11 ratings

தாத்தா சொன்ன கதைகள்

இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது...

4.27/5 · 11 ratings

காதில் விழுந்த கதைகள்

இங்கே சொல்லப்பட்டிருக்கும் கதை, முதன் முதலில் பெண் எப்படி பொய் சொல்லத் தொடங்கினாள்; ஒழுங்காக இருந்த அவளை இப்படிச் சொல்ல வைத்தது எது; காரணம் யார்? என்பதை விவரிக்கிறது. பெண்க…

4.27/5 · 11 ratings

கி.ரா பக்கங்கள்

ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். [6] இவர் ஸ்ரீகிர…

4.27/5 · 11 ratings

முரண்பாடுகள்

மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான …

4.27/5 · 11 ratings

குழந்தைப்பருவக் கதைகள்

குழந்தைப்பருவக் கதைகள் என அமைந்த இந்தத் தொகுப்பைப் படித்துப் பார்க்கும்போது பல நினைப்புகள் வந்து போயின. இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளோடு மட்டும் முடிந்து போய்விடவில்லை, குழ…

4.27/5 · 11 ratings

கி. ராஜநாராயணன் நாட்டுப்புறக் கதைகள்

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்…

4.27/5 · 11 ratings

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது

கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்…

4.27/5 · 11 ratings

கி.ரா. நாட்குறிப்பிலிருந்து...

மனிதரில் பதினாயிரம் பேரில் ஒருத்தர் வேண்டுமானால் சுயமோகியாக இல்லாமல் இருக்கலாம் ஒருத்தரை சுயமோகியா என்று பார்க்க ஒருசுலப வழியிருக்கிறது. முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடிக்…

4.27/5 · 11 ratings

லீலை

அன்னத்தின் பயணத்தில் கி.ராவின் பங்கு வரலாற்று சிறப்பு மிக்கது. ஒரு எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையில் எப்படிப்பட்ட 'உறவு' நிலவ வேண்டும் என்பதற்கு கி.ராவும் அன்னமும் ஒ…

4.27/5 · 11 ratings