அழிவற்றது [Azhivatradu]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அழிவற்றது [Azhivatradu]

None

4.29/5 · 17 ratings

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன். துல்லியமும் தீவிரமும் குன்றாமல் வாழ்வைப் பதிவுசெய்கிறார். இதுவரை எந்தத் தொகுப்பிலும் இடம்பெறாத இந்த கதைகள் அ…

Reviews

user_21403

★ 5/5
I liked these short stories. These are with layers. Must read book.

user_21402

★ 4/5
பக்கங்கள்: 120 எளிய மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் கையாலாகாத நிலையை, பரிதவிப்பை வெகு இயல்பாக சொல்லிச் செல்வதில் அசோகமித்திரனுக்கு நிகர் யாருமில்லை. இச்சிறுகதைத் தொகுப்பிலும் அத்தகைய கதைகள் உண்டு. கூடுதலாக புராண / மாய எதார்த்த கதைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். அவரது பதின்கால செகந்தராபாத் அனுபவம், சென்னை தண்ணீர் திண்டாட்டம், இலக்கிய கூட்டத்திற்கு அமெரிக்கா சென்ற அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முறையே 18ஆம் அட்சக்கோடு, தண்ணீர், ஒற்றன் ஆகிய சிறந்த நாவல்களை படைத்திருக்கிறார். அதன் பாதிப்பில் உருவான சிறுகதைப் பிரதிகளையும் இத்தொகுப்பில் காண முடிகிறது. படிக்கலாம்.

user_21401

★ 5/5
அழிவற்றது கதைகள் உண்மையிலேயே அழிவற்றவை எனவே எண்ணுகிறேன். காரணம், ஒவ்வொரு கதையும் ஒரு வரலாற்றையோ அல்லது நமக்கு நன்கு அறிமுகமான ஆனால் நாம் கவனம் செலுத்தாத ஏதோ ஒன்றையோ பேசுகின்றன. கோவிலின் இருண்ட கருவறையில் இருக்கும் இறைவனின் சிலையை மனதார உணர முடிந்தாலும் கண்ணார கண்டு பரவசமடைய காட்டப்படும் தீபம் போன்றதாகவே இக்கதைகளை உணர்கிறேன். இன்றைய Facebook,blog பதிவுகளைப் போன்றதொரு எளிமையான எழுத்து நடை மூலம் கதை சொல்லி தன் கதைகளுக்கான பாதையை வழுவாக கட்டமைத்து நம்மை சிரமமின்றி பயணிக்கச் செய்கிறார்.

user_21400

★ 5/5
அசோகமித்திரன் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக எல்லோராலும் அடையாளப்படுத்தப்படுபவர்.அசோகமித்திரன் கதைகள் மிக எளிமையான அன்றாடத்தின் நிகழ்வுகளையும் சாதாரண மனிதர்களின் வாழ்வின் பாடுகளையும் பேசக்கூடிய கதைகள். சென்னையின் அடித்தட்டு மக்களின் வாழ்வை மிக அதிகமாக பதிவு செய்தவர். இவரது கதைகள் உணர்ச்சி கொந்தளிப்பு இல்லாமல் வாழ்வை ஒருவித உலகம் தன்மையோடு கதையாக்குகிறார். இவருடைய கதை என் கருப்பொருள் மிக மிக சிறிய அன்றாட செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக மின்சார துண்டிப்பு தண்ணீர் பிரச்சனை போன்றவை. சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தண்ணீர் என்ற நாவலாகவே அசோகமித்ரன் எழுதி இருக்கிறார் இதில் ஒரு சிறுகதை இருக்கிறது.(முழு நாள் வேலை) மொத்த வாழ்க்கையையும் நிலை உடைய செய்யும் சம்பவங்கள் உடைய சில கதைகளும் இதில் இருக்கிறது. ( புது மண வாழ்க்கை) எளிமையை இவரின் கதையில் முக்கிய அம்சமாக இருந்தாலும் மிக தீவிரமான கதைகள் எழுதி இருக்கிறார். புது மண வாழ்க்கை என்ற சிறுகதையில் ஒரு ராணுவ வீரன் தன் குழந்தையை ஒரே அடியில் அடித்து கொன்று விடுகிறான் ஆனால் அது குறித்து அவருக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லை அதேபோல அவன் மனைவிக்கும் அதுகுறித்து எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை இந்த குழந்தை போனால் என்ன அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு ஈவு இரக்கமற்ற மனிதர்களும் இருப்பார்களா ?
Shelves
book Ashokamitthiran

More like this


இன்று [In̲r̲u]

N/A

4.29/5 · 17 ratings

அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

Appavin Snegidhar (அப்பாவின் சிநேகிதர்) is a collection of short stories written by Asokamithiran. He won the Sahitya Academi Award for this book

4.29/5 · 17 ratings

18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…

4.29/5 · 17 ratings

பயாஸ்கோப் [Bioscope]

அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். …

4.29/5 · 17 ratings

Still Bleeding From The Wound

BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.

4.29/5 · 17 ratings

ஒற்றன் [Ottran]

The fictional events narrated in Mole an English translation of Otran, a novel by Ashokamitran take place within a period of seven months, nearly …

4.29/5 · 17 ratings

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.29/5 · 17 ratings

ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி …

4.29/5 · 17 ratings

அசோகமித்திரன் சிறுகதைகள்: 1956 - 2017

தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017வரை அறுபத்தோராண்டுகளாக எழுதிய கதைக…

4.29/5 · 17 ratings

பிரயாணம்

அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று ’பிரயாணம்’. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்…

4.29/5 · 17 ratings

Na Pichamurthy

77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந.பிச்சமூரத்தி தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

4.29/5 · 17 ratings

Fourteen Years with Boss

Reminiscing of a time long lost, Fourteen Years with Boss gives a delightful insight into the workings of the Gemini Studios of Madras—one of the …

4.29/5 · 17 ratings