Reviews for கடலோரக் குருவிகள் [Kadalora Kuruvigal]

15 reviews total

user_20084

★ 5/5 Feb 02, 2026
மிக அருமையான புத்தகம். வாழ்க்கையின் தத்துவங்களைக் கதைகளின் மூலம் மிக அருமையாகச் சொல்லி இருக்கிறான். உண்மையாகவே, நன்றாக இருந்தது. அனைவரும் படிக்க வேண்டும். சில வாக்கியங்கள் மனதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.

user_20083

★ 5/5 Feb 02, 2026
கடலோரக் குருவிகளைப் பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிந்து கொண்டேன், எனது கணித ஆசிரியர் அதிலிருந்து சுருக்கங்களை மேற்கோள் காட்டினார். பல ஆண்டுகளாக கவனிக்காமல் போன பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கினேன் மற்றும் கடந்த வாரம் படிக்க நேர்ந்தது. அற்புதமான எழுத்து! கற்பனை மற்றும் தத்துவம் ஒன்றாக இணைந்து 30, 31 மற்றும் 32 ஆம் அத்தியாயங்களில் உச்சத்தை அடைகிறது. கடுமையான கொச்சை மொழி ஆரம்பத்தில் சிறிது அச்சமளித்தாலும், புத்தகம் அதற்கு அப்பால் சென்று படிக்காமல் இருக்க முடியாதவகையில் உள்ளது.

user_20082

★ 5/5 Feb 02, 2026
நிரந்தரமாய் சந்தோஷப்பட்டவனுமில்லை.நிரந்தரமாய் துக்கப்பட்டவனுமில்லை.உங்கள் பிரச்னைக்குத் தீர்வைப் பிறரிடம் கேட்காதீர்கள்.நீங்களே தேடுங்கள்.இன்று தீர முடியாத பிரச்னை நாளை சுலபமாய் தீர்ந்து போய்விடும்.நாளைக்கு வேறு பிரச்னை தீர்க்கச் சொல்லி முளைக்கும். புத்தகம், சினிமா, இசை மிகவும் பிடிக்கக் காரணம் அவை என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் தான். ஒவ்வொரு முறை பாலகுமாரன் கதைகள் படிக்கையில் ஏன் இத்தனை ஆண்டுகள் இவர் புத்தகங்களை வாசிக்காமல் போனேன் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. வாழ்க்கைப் பாடத்தை இவரைப் போல் கற்ப்பிக்க யாராலும் முடியாது. மாதவன், மீனாட்சி பற்றிய கதை. மாதவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் தவிக்கிறது. அவனின் அப்பா புரோகிதம் செய்பவர். கோயில் பட்டை சாதத்தில் தான் அவர்கள் வாழ்கிறார்கள். அத்தனை வறுமையில் அறம், தர்மம் காக்கும் மாதவனின் தந்தை கதாபாத்திரம் பல நேரங்களில் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மீனாட்சி - பணக்கார வீட்டுப் பெண், சொடக்குப் போட்டால் அத்மனையும் விரல் நுனியில் நிற்கும். மாதவனுக்கும் மீனாட்சிக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை - இருவர் வாழ்விலுமே நிம்மதி இல்லை என்பது தான். அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் கதை. ஒவ்வொரு வசனமும் class! மாதவனின் அப்பா பேசும் எல்லாமே கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டியவை. முயற்சி, கடவுள், ஆசை, வாழ்க்கை, வெற்றி பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயங்களை முற்றிலும் மாற்றும் வல்லமை இந்த புத்தகத்திற்கு உண்டு. மனதோடு பேசு என்று மாதவன் அப்பா சொல்வது வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் பொருந்தும். நம் மனதை கண்ணாடிப் போல் பிரதிபலிக்கிறது பல பக்கங்கள். மிக மிக சாதரண கதை, ஆனால் ஆழமான படைப்பு. கடைசி 3 அத்தியாயம் போதும் - எந்த motivation/self-help books/ted talks என எதுவுமே தேவையில்லை வாழ்க்கையை கற்றுக்கொள்ள. இது படித்தப் பின் மனதில் வரும் அமைதி நிரந்தரமானது. நம்மை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நம் நிறை, குறைகள் நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு நாம் மனதோடு பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

user_20081

★ 4/5 Feb 02, 2026
பாலகுமாரனின் எழுத்து அனைவருக்கும் புரிந்து விடுவதில்லை. அவருடைய புத்தகங்களை இதுவரை படித்தவரையில் எல்லாம் ஒரு கதை போல் ஆரம்பிக்கும் ஆனால் இறுதியில் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். இந்த கதையை படித்தபின் மாதவனின் அப்பாவை போல் நமக்கும் வாழ்க்கையை கற்று தர ஒருவர் வேண்டுமென ஆசை வரும். அத்தனை ஞானம், பொறுமை மற்றும் வாழ்க்கையை பற்றிய புரிதல். மனதோடு பேசு: எல்லா சூழ்நிலைகாண பொதுவான மற்றும் உயர்ந்த பாடம். இந்த கதையில் குறிப்பாக 31வது பகுதி மிகவும் அருமை. ஒரு முறைக்கு மேலாக படிக்க வேண்டிய பாகம்.

user_20080

★ 5/5 Feb 02, 2026
பாலகுமாரனின் முதல் புத்தகம் இதுவாகும்... அம்மா தான் பரிந்துரைத்தார்... உங்கள் அகமுடிப்பைப் புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது... கதையை அனுபவியுங்கள்...