கம்பரசம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கம்பரசம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.94/5 · 35 ratings

நாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வாழ்க்கை, அரசியல் வாதிகளுக்கும் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் நல்வழி காட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எளிய முறையில் சுவையாகவும், கருத்து செறிவு மிக்கதாகவும் எழுதப்பட்டது "கம்பரசம்!"என்னும் இந்நூல்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19610

★ 5/5
Anna is a great writer.

user_19609

★ 4/5
கம்பரெழுதிய கம்பராமாயணதில் உலகம் காணாத ஆபாசங்கள் அனைத்தையும் தோளுரித்து காட்டுகிறார் அறிஞர் அண்ணா. அவரின் எழுத்து நடையும்,அவர் சாடும் முறைமையும், எழுத்தின் அழகியலையும், நூல் பொம்மை போல அவர் இழுத்த இழுப்பிற்கு வரும் சொல் நயங்களையும் முதல் முறை வாசிக்க கண்டு வியந்து போகிறேன். மேலும் தேடி வாசிக்க தூண்டுக்கிறது அண்ணாவின் எழுதுச்சுவை

user_19608

கம்பர் எழுதியுள்ளது இராம கதை என்று உலகம், கம்ப இராமாயணத்தைப் போற்றிக் கொண்டிருக்க, அறிஞர் அண்ணாவோ கம்பன் செய்த அந்த நூல் இராம கதை மட்டுமன்று அது காமக்கதையும் கூட என்று சான்றோடு நாட்டுகிறார். அதற்குச் சான்றாக, அந்நூலுள் கம்பர் இயற்றிய பாக்களையே எடுத்துவருகிறார். கம்பர் எழுதப் புகுந்ததோ, உலகளந்த மாலவன், உலகத்து உயிர்களை உய்விக்க, மாந்த உரு எடுத்து, மண்ணுலகில் பிறந்து, தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டிய கதை. அந்த நூலோ, படிப்போர்க்கும், ஒருவர் படிக்கப் பக்கம் நின்று கேட்போர்க்கும் தம் வாழ்வின் தீவினைகள் அறுபட்டு, உள்ளம் தெளிந்து, நல்வாழ்வெய்தி, பிறப்பறுபட்டு, இம்மையின் இறுதியில் வீடுபேறு அடைய வழிகாட்டி அருளும் என்று நம்பப்படும் நூல். அத்தகைய நூலில், காலம் நேரம் கதையின் சூழல் கதை மாந்தரின் மனநிலை என்று எதையும் பாராமல் இயன்ற இடத்தில் எல்லாம் காமச்சுவையை அள்ளி இறைத்துள்ளார் கம்பர் என்று குற்றம் சாட்டுகிறார் அறிஞர் அண்ணா. மகிழ்ச்சியோ துயரமோ எதுவாயினும் அங்குக் கம்பர் பெண்களின் உடலமைப்பையும் கலவியையும் விவரிக்கப் புகுந்துவிடுகிறாராம். தெய்வமாக்கதை செய்யும் கம்பருக்கு இது தேவையா? இச்சுவை இல்லாவிட்டால் தெய்வத்தின் கதை நிறைவுபெறாதா? இவற்றை விளக்காவிட்டால் மாந்த இனம் உய்வதற்கு இராமன் காட்டும் வழியை விளக்கமுடியாதா? இச்சுவையை இழைத்து இழைத்து எழுத இராமனின் கதை தான் கம்பருக்குக் கிடைத்ததா? என்ற தன் ஆற்றாமையை நூல் நெடுகிலும் கூறியுள்ளார் அறிஞர் அண்ணா. இப்படியெல்லாமா கம்பர் எழுதியுள்ளார் என்று முகம் சுழிக்கச் செய்கின்றன சில பாடல். இராமன் அனுமனிடம் சீதையின் அடையாளங்களைக் கூறும் இடத்தில் கம்பர் எழுதியுள்ள பாடல்கள் இராமன் வாயால் அனுமனிடம் சீதையைத் துகிலுரித்துக் காட்டுவது போல் உள்ளன. சீதையோ அல்லது வேறு ஒரு பெண்ணோ கம்ப இராமாயணத்தின் இத்தகைய பாக்களைப் படித்தால் கட்டாயம் கம்பரைக் கொண்டாடமாட்டாள். அறிஞர் அண்ணாவின் இந்நூலைப் படித்தபின், மாற்றான் மனைவியின் மீது விருப்பம் கொண்டு சீதையைத் தூக்கிச் சென்றது இராவணன் செய்த மன்னிக்க இயலாக் குற்றமே ஆயினும் இராமனின் கணைக்குத் தகுந்த இரை, மனமிணங்காத சீதையை நெருங்காத இராவணன் அல்லன், மாறாக மங்கையரின் மாண்பை உலகம் உள்ளவரை நிலைநின்று கெடுக்கும் கம்பரின் இத்தகைய காமப்பாக்களே இராம கணைக்குத் தகுந்த இரை என்றே என் போன்ற பாமரர்க்கும் தோன்றும். இதற்கு மேலும் கம்பரைப் போட்டுடைக்க மனமின்றி இத்துடன் நிறுத்துகிறேன். அடுத்த பதிவில் கம்பரைப் போற்றும் நூல் ஒன்றை எடுத்து வருகிறேன். நன்றி மக்களே!

user_19607

★ 3/5
கம்பர் இயற்றிய இராம காதையில் உள்ள ஆபாசங்களை அறிஞர் அண்ணா இந்நூலில் பரதன் என்ற பெயரில் விளக்கங்களுடன் சாடுகிறார். பெரியார் என்கிற "ராமசாமி"யின் தம்பி ஆகையால் (கொள்கை ரீதியாக) அண்ணா அவர்களை பரதன் என்றழைக்கும் ஓர் அறிஞரை கேலி செய்யும் விதமாக இந்நூலில் தம்மை பரதன் என்றே முன்னிலைப் படுத்துகிறார் அறிஞர் அண்ணா‌.
Shelves
C.N. Annadurai book

More like this


Sivaji Kanda Hindu Rajiyam | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (Tamil)

*** சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்.- நாடகம். வைர வாள்வீச்சு வசனங்கள் உள்ளே!.... *** ஆண்டி : குளத்துலதான் குளிச்சேன் அது புண்ணிய தீர்த்தமாம். அடிச்சே கொல்றாங்க! பச்சை : குளத்…

3.94/5 · 35 ratings
Check Price

ஆரிய மாயை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…

3.94/5 · 35 ratings
Check Price

ஓர் இரவு [Or Iravu]

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு ஓர் இரவில் ஏற்படும் சம்பவங்களும், திருப்பங்களுமே கதை. பல வருடங்களாக மறைக்கப்பட்ட இரகசியத்தால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கிறது…

3.94/5 · 35 ratings
Check Price

இந்தி எதிர்ப்பு ஏன்?

1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூல முழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டி…

3.94/5 · 35 ratings
Check Price

வெள்ளை மாளிகையில்

அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலி…

3.94/5 · 35 ratings
Check Price

ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்

அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் சார்பில் பட்டமளிப்பு விழாவில் “நிலையும் நினைப்பும்” என்ற தலைப்பில் 23-00-1947ல் ஆற்றிய சொற்பொழிவு மற்றும் ஏ, தா…

3.94/5 · 35 ratings
Check Price