படைவீடு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

படைவீடு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.08/5 · 26 ratings

தமிழகத்தை ஆண்ட கடைசி தமிழ்ப் பேரரசு யாருடையது... ஒரு நூற்றாண்டுக்கு நிலையான ஆட்சி நடத்திய அவர்களின் ராச்சியம் எப்படி சரிந்தது? 14-ம் நூற்றாண்டில் கோலோச்சிய அந்தப் பேரரசைத் தேடி வீரகாவியமாக உருவாக்கியிருக்கிறேன். பிற்கால சோழர்களுக்குப் பிறகு விஜயநகரத்தின் தெலுங்கு பேரரசர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்றே வரலாற்றுப் புரட்டு நடந்துகொண்டிருக்கிறது. பிற்கால சோழர்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையில் சுமா…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19218

★ 5/5
தன்மான தமிழன் அருமை , தமிழன் யார் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டும். வாழ்க தமிழ் வெற்றி வேல் வீரவேல் தமிழ் மகன், வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் சிறந்த படைப்பு

user_19217

★ 2/5
நான் படித்த நாவல்களில் முதல் முறையாக எங்கள் ஊரின் பெயர் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இரவில் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் இளவரசர் இமைகளை ஒரு வினாடி மூடி திறந்து சைகை செய்தார்? பல நாவல்களில் இரவில் செய்யும் இது போன்ற செயல்கள் இரவு அவ்வளவு கருமையாக இருக்காதோ என்ற எண்ணத்தை தருகிறது. சமயம், சாதி இரண்டும் கடவுளோடு சம்பந்தமுள்ளவை? தொலைந்துப் போன ஈசன் வாளை கண்டுபிடிக்க வேண்டும் என்றதும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் சுலபமாக கண்டுப்பிடித்தது போலிருந்தது. படையப்பா படத்தை போல படைவீட்டின் இளவரசரை மணந்துகொள்ள ஆசைப்படும் நட்பு நாட்டை சேர்ந்த இளவரசி பழிவாங்க, சம்புவராயர் சாதி பாகுபாட்டை நீக்க முயல்கிறார் என்று கோபம் கொள்ளும் ஒரு பிராமணரை இருபது வருடம் கழித்து சிந்திப்பது, ஒரு தெலுங்கு அரசரை மணந்துக் கொள்வதோடு அந்த கதாப்பாத்திரம் காணாமல் போகிறது. அரசர்களைப் பெருமைப்படுத்தி காரியம் சாதிப்பதற்கு அந்தணர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை, இடங்கை வலங்கை பிரிவினர்களின் சாதிச் சண்டை, மாரியம்மன், சோலையம்மன் போன்ற குல தெய்வங்களை வேத தெய்வங்கள் ஓரங்கட்டின என்று சாதி அரசியலை ஆவணப்படுத்துவது தான் நோக்கம் போல தெரிகிறது. கதை ஈர்க்கவில்லை. களப்பிரர்களின் பிராமண எதிர்ப்பினால் அந்த வரலாறு முழுவதுமாக அழிக்கப்பட்டதெனில் வெளிநாட்டினர் யாரும் அக்காலத்தில் தமிழ் நாட்டிற்கு பயணம் செய்யவில்லையா? அவர்களிடம் எந்த குறிப்பும் இல்லையா? பிராமணர்களுக்கு பதிலாக ஓதுவார்களை ஆதரித்த, காந்தளூர் சாலையை தரை மட்டமாக்கிய ராசராச சோழனை பிராமண விசுவாசி என்கிறார்கள் என்பது என்னவோ சரிதான்.

user_19216

★ 5/5
பிற்கால சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு இடையே நூறு ஆண்டுகளை விட்டுவிட்டு அடுத்து விஜயநகர பேரரசின் ஆட்சி தொடங்குவதாக ஒரு வரலாற்று திரிபு இங்கே நடந்து கொண்டிருக்கிறது அதற்கு எதிராகவே எழுதப்பட்ட நூலாக இதை கருதலாம். சோழ பேரரசின் முடிவிற்கு பிறகு சோழர்களிடம் ஒரு சிற்றரசாக இருந்த சம்புவரையர்கள் தனி அரசாக மாறி சில சிற்றரசுகளை இணைத்துக் கொண்டு சிறப்பான ஆட்சியை 100 ஆண்டுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்பு போருக்கும் அவர்கள் செல்லவில்லை. போர் என்றால் பாதிக்கப்படுவது மக்கள் தான் அதை நாம் வீனே செய்ய கூடாது என்கிறார் அரசர்.அதேபோல வடக்கில் இருந்து வரும் சுல்தானிய ஆட்சியாளர்களும் சம்புவராயர்கள் மீது படை எடுக்க தயங்கி இருக்கிறார்கள் இதிலிருந்து அவர்களின் வலிமையை நாம் புரிந்து கொள்ளலாம். சாதிய சிக்கலுக்கு தீர்வு சொல்லி இடங்கை வலங்கை பிரச்சினை தீர்ந்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மாலிக் கபூர் படையெடுப்பை எதிர்கொள்ள தனக்கு கீழ் இருக்கும் சிற்றரசுகளை படை திரட்ட இளவரசர் ஏகாம்பரநாதர் கிளம்புகிறார் இதில் தொடங்கி விஜயநகர பேரரசின் போரில் முடியும் நாவல் பல்வேறு தமிழ் பெருமைகளை ஆதாரத்துடன் சொல்கிறது. வீரமும் அறம் கொண்டு போரிடுபவர்கள் தமிழர்கள் ஆனால் வெற்றிக்காக குமார கம்பணன் தாசிகளை படை வீட்டிற்கு அனுப்பி வீரர்களை மயக்கி போரில் வெற்றி அடையலாம் என்பது எல்லாம் கேவலமாக உள்ளது. அந்த பெண்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லும் போது தமிழ் அரசர்கள் பெண்களை தண்டிக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.தமிழர்கள் சைவத்தை பின்பற்றி சாதிய எதிர்ப்பவர்கள். பிராமணர்களை அவர்களின் சாதி பிரிவினைக்காக கடுமையாக எதிர்த்தனர். கந்தளூர் சாலை அழிப்பு, பிராமணர் ஊர் எரிப்பு என்று கடுமையானது ஆனால் விஜயநகர அரசு ஆதி சங்கரர் உருவாக்கிய அத்வைதம் மூலம் சாதியை பின்பற்றுபவர்கள். ஆக விஜயநகர படையெடுப்பால் தான் இங்கே சாதி இன்றும் இவ்வளவு பெரிய தீர்க்க முடியாத சிக்கலான இருக்கிறது. மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த நூல் எழுதபட்டு உள்ளது.
Shelves
Tamilmagan book தமிழ்மகன்

More like this


எட்டாயிரம் தலைமுறை

படைப்புக்கென்றொரு வித்தியாசமான முகத்தை அணிந்துகொள்ளாதவர் தமிழ்மகன் . எல்லாவற்றையுமே புரட்டிப் போட முனையும் 'கலகக்கார 'ப் பாவனையேதும் அவரிடம் கிடையாது. இன்றைய வாழ்க்கையி…

4.08/5 · 26 ratings
Check Price

மீன் மலர்

ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து மற்ற…

4.08/5 · 26 ratings
Check Price

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெ…

4.08/5 · 26 ratings
Check Price

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது... இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி …

4.08/5 · 26 ratings
Check Price

நான் ரம்யாவாக இருக்கிறேன்

பேரலல் யூனிவர்ஸ் எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெ…

4.08/5 · 26 ratings
Check Price

எட்டாயிரம் தலைமுறை (தமிழக அரசு விருது பெற்ற நூல்)

புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சி…

4.08/5 · 26 ratings
Check Price

தாரகை

இது ஒரு நடிகையைப் பற்றிய கதை என்றாலும் நடிகைகளின் கதை அல்ல. ஆண்களால் ஆளப்படும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் இருக்கும் அதே தர்க்கங்கள்தான் சினிமாவிலும் இருக்கின்றன. எல்லா துறை…

4.08/5 · 26 ratings
Check Price

அமில தேவதைகள்

தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கி.பி.2000 மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதிணார். புதுமைப்பித்தன் ஒரு வகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் …

4.08/5 · 26 ratings
Check Price

வெட்டுப்புலி [Vettuppuli]

Author: Tamilmagan

ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டி…

4.08/5 · 26 ratings
Check Price