நான் கிருஷ்ணதேவராயன், பாகம் 1 [Naan Krishna Devarayan, Part 1]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நான் கிருஷ்ணதேவராயன், பாகம் 1 [Naan Krishna Devarayan, Part 1]

None

4.32/5 · 38 ratings
4.3/5 - Amazon.com

இந்திய வரலாற்றில் ஒப்பரும் மேதைகளில் சிறந்த அரசன் கிருஷ்ணதேவராயர். தோல்வி என்பதையே அறிந்திராத தீரன். சமயத்துக்கும், கலைக்கும், அரசியல் பண்புக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இம்மாமன்னன் செய்துள்ள பணி மகத்தானது. அவனது புகழைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் அவனது சிறப்பைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவனைப்பற்றி வெளிநாட்டார்கள் வியந்து எழுதிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவனது உருவச்…

Reviews

user_18891

★ 5/5
Nice The story line was very nice. Could not decide whether this is a true story or a fiction Well paced

user_18890

★ 3/5
நான் கிருஷ்ண தேவராயன் 472 பக்க நூல். வரலாற்று கதையெல்லாம் இல்லை. சின்னா தேவி என்கிற நடனமாடும் பெண்மீது கிருஷ்ண தேவராய மன்னருக்கு காதல், அவளை அடைய அவர் படும்பாடுதான் கதை. இதற்கு நடுவில் அவருக்கு திருமலாதேவி என்ற பெண்ணுடன் திருமணமும் நடந்து குழந்தையும் பிறந்துவிடுகிறது. 'நான் போகின்ற இடமெல்லாம் வெற்றி..' அவ்வளவுதான் போர் பற்றிய வர்ணனைகள்.. தெனாலிராமனே கதையில் இரண்டு வரிகள்தான் வருகிறார். கிருஷ்ண தேவராயரே தன்கதையை சொல்லும் முறையில் எழுதப்பட்ட நூல். அதனால், பெரிய திருப்பங்கள் சூழ்ச்சிகள் இல்லாத கதைப் போக்கு.. மன்னனின் மனம் பேசும் காதல் கதை.. புக் உள்ளே நாவலுக்கு துணை செய்த நூல்கள்ன்னு 40Books பேரு போட்டுயிருக்காரு.. ரா.கி.ரங்கராஜன் நிறைய புக்குல இருந்து எடுத்த தகவல்கள் அடிப்படையில்ன்னு போட்டா, புக் விக்கும்ன்னு போட்டுயிருப்பாரு போல😊 அப்படி எதையுமே குறிப்பா சொல்லலை.. அந்தக் காலத்து அண்ணாமலை 200000 புத்தகங்கள் டெக்னிக்..🤭 போல.. முதல்ல இது வானதி பதிப்பகத்தில வெளியிட்டாங்க அப்பறம் அல்லயன்ஸ் பதிப்பகத்துக்கு மாறிச்சி அங்கதான் வாங்கினேன். ஆனா உள்ள பூம்பாவை பதிப்பகம்ன்னு இருக்கு. படு மட்டமான தாள் படு மட்டமான அச்சு பஸ்ஸ்டாண்டில் விற்கும் ராஜேஷ் குமார் பாலகுமாரன் நாவல், பேப்பர் எப்படி இருக்குமோ அந்த தரம்.. ₹450 வாங்குகிற புத்தகத்துக்கு கொஞ்சமாவது தரம் இருக்கனும்..🤦 எள்ளும் தண்ணீயும் தெளிச்சிட வேண்டியதுதான்.. நான் கிருஷ்ண தேவராயன் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. குமுதத்தின் ஆஸ்தானவித்வான் ரா.கி.ரங்கராஜன், ஆனந்த விகடனில் எழுதியது. இரண்டு பாகமும் சேர்ந்தது..

user_18889

★ 4/5
நான் கிருஷ்ண தேவராயன்... வெகு நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம். கிண்டில் புத்தகமாக கிடைத்த உடன் வாங்கி வாசிக்க தொடங்கினேன். வழக்கமான வரலாற்று புதினங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட் வகையில் விழுந்து விடும். கதையின் நாயகன் மிக முக்கியமான அரசியல் பிரதானியாக இருப்பார். உதாரணாமாக அரசன், இளவரசன், படைத்தலைவன் என்பவர்களுள் இருப்பர். கதை நாயகியும் அதே போல் அரசி, இளவரசி, சிற்றரசனின் புதல்வி ஆகியோரில் ஒருவராக இருப்பர். கதை பெரும்பாலும் ஒரு போரை ஒட்டியோ அல்லது இரு நாடுகளுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை பற்றியோ இருக்கும். காதல் ரசம் ஆங்காங்கே பன்னீர் துளிகள் போல தூவப்படும். நாயகனின் எதிராளி பெரும் அறிவாளி போல் சித்தரிக்கப்பட்டு, பின்பு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல் அலங்கரிக்கப்படுவார். ஒரு சில விதிவிலக்குகளை தவிர, ஒரு வரலாற்று புதினத்தின் நடைமுறை வழக்கம் இதுவே. நிறைய சரித்திர புதினங்களை படிக்கும் சந்தர்ப்பங்களில், சிற்சில சமயங்களில் தோன்றுவதுண்டு. அரசன், இளவரசன், படைத்தலைவர் இவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்கள் தானே. இவர்களுக்கும் சராசரி மனிதனுக்கு தோன்றும் ஆசைகள், கோபங்கள், இச்சாதாபங்கள் இருக்காதா என்று.நம் ஆசிரியர்கள் வரலாற்று புத்தகங்களில் எதில் கவனமாக இருக்கிறார்களோ இல்லையோ கதை நாயகன் எந்தவிதத்திலும் தவறு செய்யாதவனாக, மிகவும் நல்லவனாக, அறிவில் சிறந்தவனாக, சிறந்த முடிவுகள் எடுப்பவனாக சித்தரித்து இருப்பார்கள். இந்த இடத்தில தான் இப்புத்தகம் சற்றே வேறுபடுகிறது. கிருஷ்ணதேவராயரின் பார்வையில் அவரே கூறுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அரசன் தன்னுடைய காதலை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது, என்னென்ன பரிதவிப்புகளை அவன் மேற்கொள்கிறான், எதையெல்லாம் மக்களுக்காக விட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது, சமுதாயத்தில் நிலவும் சில கொடிய பழக்க வழக்கங்களை சீர்திருத்த நினைத்தாலும் சமுதாயமே அதற்கு தடையாக இருப்பது என்று பல விஷயங்கள் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது போல் இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வரலாற்று நாவல்களிலும், வில்லன் மொக்கையாகவே இருப்பதனால், ஒரு கட்டத்தில் எப்பொழுது முடியும் என்று தோன்றி விடும். இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்றைய காலகட்டத்தில் பின்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்களாக புத்தகத்தில் வருபவை என்னை மிகவும் திடுக்கிட செய்தன. 1. உழவு அறுவடை சிறப்பாக இருந்தால் கை விரல்களை வெட்டி தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வது. 2. உடன் கட்டை 200 ஆண்டுகள் முன்பு வரை கூட நடைமுறையில் இருந்திருந்தாலும், கணவன் பிணத்துடன் மனைவியை உயிருடன் குழியில் தள்ளி மூடி அதன் மேல் பெரிய கல்லை வைத்து வருவது. படிக்கும் பொழுதே மிகவும் அருவருப்பாகவும் சக மனிதர்கள் மேல் வெறுப்பாகவும் இருந்தது. 3. இன்னும் ஒரு படி மேலே பொய், கணவன் உயிர் விட்ட பின், மனைவி முதல் சில நாட்கள் வழக்கமான உணவும், பிறகு சிறிது நாட்கள் திரவ உணவும், பிறகு சுடுநீர் அருந்தியும், பிறகு எதுவும் சாப்பிடாமல் உயிர் விட வேண்டுமாம். 4. கடன் வாங்கியவன் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என்றால் கடன் கொடுத்தவன் கடன் வாங்கியவனை ஒரு சிறு வட்டத்தை வரைந்து அவனை அங்கேயே நிற்கும் படி செய்யலாம். சோறு தண்ணீர் இல்லமால். வழக்கமான டெம்ப்ளேட் இல்லமால் சற்றே வித்தியாசமாக உள்ளதால் நன்றாகவே இருக்கிறது.

user_4099

★ 5/5

The story line was very nice. Could not decide whether this is a true story or a fiction Well paced

user_4098

★ 5/5

Excellent narration and story telling from great author. Everyone should read. Simple Tamil and very interesting way Tamil has been used in historical novel. New way and path breaking adaption.

Shelves
Ra. Ki. Rangarajan Audiobook book

More like this


Moovirandu Ezhu (Tamil Edition)

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் …

4.32/5 · 38 ratings
4.0/5 - Amazon.com

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.32/5 · 38 ratings

சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]

ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…

4.32/5 · 38 ratings
4.3/5 - Amazon.com

புரொபசர் மித்ரா [Professor Mithra]

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் …

4.32/5 · 38 ratings

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

Author: Kalki

The Moving Finger writes; and, having writ, Moves on: nor all thy Piety nor Wit Shall lure it back to cancel half a Line, Nor all thy Tears wash o…

4.32/5 · 38 ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.32/5 · 38 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

4.32/5 · 38 ratings

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Author: Jeyamohan

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.32/5 · 38 ratings

பெண் ஏன் அடிமையானாள்?

Author: Periyar

"ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மத…

4.32/5 · 38 ratings

மீண்டும் ஜீனோ [Meendum Jeeno]

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.32/5 · 38 ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.32/5 · 38 ratings