உயிரின் யாத்திரை [Uyirin Yathirai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உயிரின் யாத்திரை [Uyirin Yathirai]

None

3.69/5 · 13 ratings

அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானே என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய மு…

Reviews

user_18873

★ 4/5
உயிரின் யாத்திரை மனித வாழ்க்கையை ஒரு உடல் பயணமாக அல்ல, ஆன்மாவின் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயணமாகக் காட்டும் சிந்தனையூட்டும் நூல். எழுத்தாளரின் மொழி எளிமையாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் ஆழமான தத்துவத்தையும் நுண்மையான உணர்வுகளையும் தாங்கி செல்கிறது. வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளுக்குள் மறைந்திருக்கும் அகத்தன்மையை வெளிச்சம் போட்டு, வாசகரை தன்னைத்தானே கேள்வி கேட்க வைக்கும் திறன் இந்த புத்தகத்தின் மிகப்பெரும் பலம். சில பக்கங்களில் அவர் மனித உணர்வுகளை அவற்றின் நுணுக்கத்துடன் படம் பிடிப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது; குறிப்பாக தன்னறிவு, ஒழுக்கம், இயற்கையின் பாங்கு ஆகியவற்றை உவமைகளின் மூலம் விளக்கும் போது எழுத்தின் பிரகாசம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், சில இடங்களில் தத்துவ சிந்தனைகள் தொடர்ச்சியாக அடர்த்தியாக வரும் காரணமாக சற்று சோர்வு ஏற்படுகிறது. புத்தகத்தின் நடையை சில அதிகாரங்களில் மிகுந்த தீவிரம் ஆக்குவதால் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. ஆனாலும், இது போன்ற குறைகள் இருந்தபோதிலும், இந்நூல் மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் அரிய முயற்சியாக திகழ்கிறது. வாழ்க்கையின் பொருள் என்ன, நாமெதற்காக பயணிக்கிறோம், எதைப் பெற்றால் நிறைவு எனும் கேள்விகளுக்கான பதிலை நம் மனதின் ஆழத்தில் கண்டுபிடிக்க உதவும் அமைதியான ஆன்மிகச் சொற்சுருக்கம் போன்ற ஒன்றாக மாறுகிறது.

user_18872

★ 3/5
புத்தக வாசிப்பு எண்: 2/2025எழுத்தாளர்: எம்.வி.வெங்கட்ராம்பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்வருடம்: 1958பக்கங்கள்: 79விலை:  ₹100வாசிக்கத் தொடங்கிய நாள்: 02/01/2025வாசித்து முடித்த நாள்: 18/01/2025கதைச்சுருக்கம்:-"உயிரின் யாத்திரை" என்னும் குறுநாவல் இந்த 2025 ஆம் ஆண்டின் என்னுடைய இரண்டாம் வாசிப்பு. இந்த நாவலின் கதாபாத்திரங்கள் சதாசிவம்,ராஜா,ராணி,கோபு,மீனா ஆகிய ஐவர் தான் இதில் ராஜா மற்றும் சதாசிவம் இரு வரை மிக முக்கிய கதாபாத்திரங்கள்இந்த குறுநாவல் முன் ஜென்மத்தை பற்றிய கதையாகும் ராணி தான் இறக்கும் தருவாயில் படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் அவளைக் காப்பாற்ற ஏதும் வழியில்லாமல் நிராயுதபாணியாக இருக்கிறான். ராஜா அனைத்து கடவுள்களையும் வேண்டி புண்ணியம் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்ற வழி இல்லாமல் நிர்கதியாய் தன் வீட்டில் அழுது கொண்டு ஒரு மூளையில் அமர்ந்து இருக்கிறான். அந்நேரத்தில் ராஜாவின் நண்பன் கோபு வருகிறான் கோபுவின் இல்லத்திற்கு அருகில் ஒருவர் ராணிக்கு உயிர் காப்பாற்றும் மருந்து வைத்திருப்பதாகவும் உடனே உன்னை கூட்டி வரும்படி கட்டளையிட்டு இருக்கிறார் நீ உடனே வா என அழைக்கிறான். ராணியின் நிலை கண்டு ராஜா அங்கிருந்து கிளம்ப தாமதிக்கிறான் பின்ன அவனை சமாதானம் செய்து கோபு கூட்டி செல்கிறான். ராஜாவை அழைத்தவரின் வீட்டில் முன் இருவரும் நிற்கின்றனர் அந்த மனிதரும் வருகிறார் அவரைப் பார்த்ததும் ராஜாவுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மாற்றம் வருகிறது ஒரு ஆன்மீக நிலைக்கு செல்கிறான் அந்த மனிதர் ராஜாவிடம் மருந்தை கொடுத்து அவனை வீட்டிற்கு உடனடியாக செல்ல கட்டளை இடுகிறார். ராஜா வீட்டிற்கு வந்தது மிகவும் பயம் கொள்கிறான் ராணி உயிருடன்தான் இருக்கிறாளா இல்லையா என தெரியாமல் புலம்புகிறான் அவள் அருகில் சென்று அவளை அழைக்கிறான் அவள் உடலில் சிறிய அசைவு தெரிகிறது உடனே அவன் அந்த மனிதர் கொடுத்த கடுகளவு உள்ள மருந்தை ராணிக்கு கொடுக்கிறான் பின் பின்னே வந்து வருத்தத்துடன் அமர்கிறான் அப்படியே சோகத்தில் உறங்கியும் விடுகிறான். திடீரென கண் விழித்துப் பார்க்கிறான் ராணி எழுந்து அமர்ந்து இருக்கிறாள் இதனைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறான் மரணத்தருவாயில் இருந்தவளை மீட்ட அந்த மனிதரை உடனடியாக பார்க்க வேண்டும் என எண்ணுகிறான். கோபுவும் இவன் வீட்டில் தான் இருக்கிறான் அவனிடம் ராஜா கேட்கிறான் பிறகு இருவரும் அவர் வீட்டிற்கு செல்கின்றான். இதன் இடையில் ராஜா தூங்கும் போது அவன் கனவில் அந்த மனிதர் வருகிறார் சில விஷயங்களை பற்றி கூறுகிறார் ராஜாவுக்கு அதைப்பற்றியும் கேட்க வேண்டும் என அவர் வீட்டிற்கு செல்கிறான் அவர் வீட்டின் முன் இருவரும் நிற்கிறார்கள் ராஜாவை பெயர் சொல்லி அழைக்கிறார் கனவைப் பற்றி கேள்வி கேட்க போகிறாயா? என வினா எழுப்புகிறார் ராஜா மிகுந்த ஆச்சரியம் அடைகிறான். எப்படி இவருக்கு தெரிந்தது?யார் சொல்லி இருப்பார்கள்?இவர் யார்?என்னை எப்படி இவருக்கு தெரியும்?என பல கேள்விகள் ராஜாவின் தலைக்குள் ஓடுகிறது. அவர் ராஜாவின் முகத்தைப் பார்த்து அவனிடம் உன்னுள் இருக்கும் கேள்விகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் உன் முன் ஜென்மத்தை பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ராஜா மீண்டும் ஆச்சரியமடைகிறான் யார் இந்த மனிதர் என்ற கேள்வி அவனுள் ஆழமாக எழுகிறது. ராஜா அவரைப் பற்றி தெரிந்து கொண்டானா?ராஜா யார்? ராஜாவுக்கு ஏன் இவர் உதவினார்? என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக மீதி கதை நகர்கிறது. திருமூலரின் பாடல்களை மேற்கோள் காட்டி கதையின் காட்சிகளை எழுத்தாளர் நன்கு விளக்கியிருந்தார் முன் ஜென்மம் என்ற ஒரு விஷயத்தை வைத்து கதையில் பல கேள்விகளை எழுப்பியிருந்தார் இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் மிகவும் ஆன்மீகத்தை உணர்த்துவதாக இருந்தது.
Shelves
book M.V. Venkatram

More like this


என் இலக்கிய நண்பர்கள்

எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று…

3.69/5 · 13 ratings

நித்யகன்னி

நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூ…

3.69/5 · 13 ratings

வேள்வித் தீ

ஒரு நெசவாளியின் கஷ்ட ஜவணத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஓன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, ப…

3.69/5 · 13 ratings

பனிமுடி மீது ஒரு கண்ணகி

“எம். வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோ…

3.69/5 · 13 ratings

காதுகள்

எம்.வி.வி தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம் அவர்தான். மகாலிங்கத்தின் மத்திய வயதில் (36, 3…

3.69/5 · 13 ratings