பேட்டி காண்பதுபோல பேட்டி காணப்படுவதும் ஒரு கலையென்றால் அதில் நான் எப்பேர்ப்பட்ட பூஜ்யம் என்பதற்கு உதாரணங்கள் இப்புத்தகத்தில் உள்ளன என்னை ஒரு மூலையில் உட்காரவைத்து எழுதச் சொல்லி விட்டு விலகி விட்டால் நான் உபத்திரவமில்லாத பிராணி, மாறாக, பொதுச்சபைகளிலும் குளிர் அலை களிலும் என்னை மடக்கி, “ஏன் எழுதுகிறாய், உன்னால் சமூகத்துக்கு என்ன லாபம், இன்றைய தேதிவரை உன்னைப் படித்து எத்தனைபேர் திருந்தியிருக்கிறார்கள்” என்றெல்லாம் கணக்குக் கேட்டால் உளறுவேன்
பின் ஏன் என்னைப் பேட்டி காண்கிறார்கள்'
என் எழுத்து அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவா? முடியாது என்று தோன்றுகிறது எழுதும் முறை, கதை விதிகள் எல்லாம் மிகவும் சொந்த விஷயம். மற்ற பேருக்கு நான் எப்போது எழுதுகிறேன், எப்படி எழுதுகிறேன், எத்தனை முறை அடித்து எழுதுவேன் போன்ற பெளதிக விவரங்கள் எல்லாம் அவசியமற்றவை என்று கருதுகிறேன். எழுதிக்கொண்டிருக்கும் போது என் மனைவியே பின்னால் வந்து என்ன எழுதுகிறேன் என்று எட்டிப் பார்த்தாலும் போட்டது போட்டபடி தோட்டத்துக்கு ஓட்டம் எடுக்கும் ஆசாமி நான் சமூகம், அரசியல், இலக்கியம், கலை, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் என்னிடம் கைவசம் திட்டவட்டமான கருத்துகள் இல்லை.
(இதிலெல்லாம் பிடிவாதமாக இருந்தால் என்னால் எழு. முடியாது என்று நினைக்கிறேன்) இருந்தும் இதை யெல்லாம் பற்றி என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள் பதிலும் சொல்லியிருக்கிறேன் எழுத்துக்கு அப்பாற்பட்ட சொந்த விஷயங்களில் ஒரு எழுத்தாளன் வேறு விதமாக இருக்கலாம். மோசமான குடிமகனாகக் கூட இருக்கலாம். நான் சந்தித்த எழுத்தாளர்கள் பலர் அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டு தன்னைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஒருவர் ராத்திரி பன்னிரண்டு மணிக்குத் தன் கதையை இரைந்து என்னைப் படிக்கச் சொல்லி கண்களில் நீர்வர கேட்டுக்கொண்டிருந்தார் சில எழுத்தாளர்கள் வேளா வேளைக்குக் குளிக்காதவர்களாக, கோபக்காரர்களாக, மோசமான கணவர்களாக, கல் நெஞ்சக்காரர்களாக, ஏமாற்று வித்தைக்காரர்களாக இருக்கிறார்கள் மற்றவர் எழுத்தை மதிக்காதவர்கள், குழந்தைகளைச் செவிட்டில் அறைபவர்கள், சோரம் போகிறவர்கள் இப்படி பல பேர். இவர்களையெல்லாம் பேட்டி கண்டு அவர்களிடமிருந்து தேங்காய் விலையி லிருந்து திருக்குறள் வரை அபிப்பிராயம் கேட்பதன் மனோதத்துவம் என்ன?
திருக்குறள் மலிவுப்பதிப்புக்கு அப்புறம் அதிகமாகப் 'பிரபலமானவர் விலாசங்கள்' விலைபோவதற்கும் எனக்கு வரும் ஆறு கடிதங்களில் நான்கு என் புகைப் படத்தையும் கையெழுத்தையும் கேட்பதற்கும் காரணம் என்ன? காரணத்தில் லேசான சோகம் இருக்கிறது. பிரபலம் என்பதே எல்லாரும் விரும்புவது இதில் ஏதும் தப்பில்லைதான், இது ஒரு விதமான உந்துசக்தி ஆழமாக யோசித்தால் ஏதாவது ஒரு விதத்தில் நான் தனிப்பட்டவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்று நிரூபிக்க
மரணத்தை வெல்லும் ஆசைதான் பிரபலம், நான் ஒரு மனித எறும்பல்ல. கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் என்று ஏதாவது ஒரு விதத்தில் காட்ட விரும்புகிறோம். அதற்காகத்தான் ஒருவன் பின்பக்கமாக முந்நூறு மைல் நடக்கிறான்; கவிதை எழுதுகிறான். கென்னடியைக் கொல்கிறான் ஒருத்தி இருபத்து நான்கு மணி நேரம் குச்சுப்புடி ஆடுகிறான் அல்லது பாம்புடன் வாழ்கிறாள் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் மனித வாழ்வின் அத்தனை உன்னத இயக்கங்களிலும் 'நான் சற்று நேரமாவது தனிப்பட்டவன்' என்று காட்ட விருப்பம் இருப்பதை உணரலாம் இந்த ஆசையில் கிளைப்பதுதான் பிரபலமானவர்களைப் பற்றி அறிந்து கொள்ள விருப்ப மும் இவனும் என்னைப்போல் ஒருவன்தான் ஏதோ ஒரு அதிருஷ்டத்தால் தற்செயலால் இவன் மேல் வெளிச்சம் பட்டிருக்கிறது. எனக்கும் இம்மாதிரி அமைந்தால் நானும். இத்யாதி நிறைவேறாத ஆசைகளுக்கு ஒரு விதமான தார்மீகம் ஏற்படுத்தும் முயற்சிகள் இப்படி இல்லை யெனில் என் போன்ற எழுத்தாளர்களைப் பேட்டி காண வருவதற்கு வேறு நியாயமில்லை.
பேட்டி காண வந்தவர்களை என்னால் ரகம் பிரிக்க முடிந்தது பிடிவாதமாக எத்தனை சொன்னாலும் நீ சாதித்தது ஒன்றுமில்லை நீ எழுதுவதெல்லாம் குப்பை, துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டுநான் ஏதாவது கெட்டவார்த்தை உபயோகிக் கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று இரண்டாவது ரகம், தகவல் ரகம் நான் பிறந்த தேதி வயது என்ன நிறம் பிடிக்கும். என்ன தைலம், இந்த ரகம்! மூன்றாவது, அறிவுஜீவிகள் மார்க்ஸிஸம் எக்ஸிஸ்டென்ஷியஸம், சமுதாயப் பார்வை போன்ற வார்த்தைகள் அடிக்கடி
புழங்கும் (இங்கிலிஷ் வார்த்தை அடைப்புக்குள் நிறையவே வரும்) மூன்று ரகங்களுக்கும் உதாரணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
சினிமா நடிகர்களைச் சந்தித்தபேட்டிகள் நாடாவில் பதிவு செய்யப்பட்டு கூட வந்தவர்களால் எழுதப் பட்டவை சினிமா நடிகர்கள் தனிப்பிறவிகள், நடித்து நடித்து நிஜமாக இருக்க மறந்துபோளவர்கள் முகத்துக்காக வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து வேறுபட்ட யாராவது கிடைத்துவிட்டால் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டு தமக்குத் தெரிந்த அத்தனையும் பத்து நிமிஷத்தில் முத்திரை பதிக்க அவசரப்படுவார்கள் நடிகை சுஜாதாவைச் சந்தித்த பேட்டி ஒரு பாசாங்கு அந்தப் பெண்மணி என் கதைகள் எதையும் படித்திராத மலையாளப் பெண் கொண்டுவந்திருந்த கேள்விகளை அவள் படிக்கும்போது அவள் கண்களைக் கவனித்துக்கொண்டிருப்பது எனக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம். சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை ஒரு கட்டுரை ஆங்கிலத்திவிருந்து மொழிபெயர்ப்பு கார்த்திகேயன் பற்றிய கட்டுரை இரவிச்சந்திரன் எழுதியது.
இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தைவிட கொஞ்சம் பெரிசானது-இது நானல்ல, அவ்வப்போது நான்