நான் தான் ஔரங்ஸேப் [Naan Thaan Aurangazeb]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நான் தான் ஔரங்ஸேப் [Naan Thaan Aurangazeb]

None

4.18/5 · 11 ratings

இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள்தான் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள். எதிர்த் திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் ஔரங்ஸேப். ஒரே மொழி, ஒரே மதம், மற்ற மதங்கள் யாவும்…

Reviews

user_18288

★ 5/5
Unique plot with Excellent narration.

user_18287

★ 4/5
ஒவ்வொரு நாவலும் அதற்கான ஒரு மனநிலையை அதுவே மெதுவாகவே வளர்த்து வரும் அதிலும் குறிப்பாக ஒரு தொள்ளாயிரம் பக்க வரலாற்று நாவலென அறியப்படும் இது இப்படி ஒன்றும் செய்யவில்லை. தீவிரமாக ரத்தம், பேராசை, கொடுங்கோல் என்று மன்னர்களைப் பற்றி பழக்கப்பட்ட நடையில் எதனையும் பேசவில்லை. ஆனாலும் இதனை ஏன் அனைவரும் வாசிக்க வேண்டும்? இது வரலாற்றை எப்படி அணுகுகிறது? என்ற பல கேள்விகள் முன்னே வந்து நிற்கும். ஔரங்ஸேபுக்கும் எழுத்தாளருக்குமான உரையாடல் வழியே தான் இந்நாவல் எல்லாவற்றையும் இழுத்து பேசுகிறது(செங்கிகாஸ்கனைப் சாடும், ஷீவாஜியை சுரண்டும், சூபியிஸத்தை தூவும்...). இப்படி பேச்சுவழக்கில் இருப்பதால் தான் என்னவோ இது ஒரு உண்மையே பேசும் வழக்கத்தில் இருந்து வெளியே வந்து விடுகிறது போல. ஏனெனில் இந்நாவல் ஆங்காங்கே சூபியிஸ கிளைக்கதைகள், பொக்கிஷமான கவிதைகள், நாடற்ற சாமான்யனுக்கு ஏற்பட்ட சிக்கல், போரின் அறிவிப்பை கேட்டதும் ஓடி ஒளிகிற மக்களின் அவலம் போன்று நிறைய சின்ன சின்ன நுட்பமான விஷயங்கள் விரிவாக பேசப்பட்டு கிடக்கிறது. ஆனாலும், என்னை வியப்பில் ஆழ்த்தியது எவை என்றால் - *முகலாயர்களின் கடைசி இரண்டாம் ஷா ஆலமுக்கு சிம்மாசனம் கூட இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு கண்கள் பிடுங்கப்பட்டு மேஜையை தடவியதை தனியே துன்பவியல் நாடகமாக எழுதலாம் போல. இது எனக்கு கீஸ்லோவ்ஸ்கியின் Three Colors:White படத்தின் இறுதி காட்சியினை தான் நினைவுப்படுத்தியது. ஷாவுக்கு கிடைத்த சிம்மாசனத்தை தக்கவைத்து கொள்ள பேராசையுடன் பாடுபட்டு பிறகு எல்லாம் பரிபோய் அதே இடத்தில் சிம்மாசனம் இல்லாது குருட்டுப் பிச்சைக்காரனை போல அலைவதற்கு வேதனைப் பட வேண்டுமா? அல்லது சரியென கடக்க வேண்டுமா? *ஔரங்ஸேப் தான் செய்த பிழைகளை, பாவப்பட்டு வழங்கிய மன்னிப்பை தவிர்த்திருந்தால் இன்று அது வரலாற்றை மாற்றியமைத்திற்கும் 'நான் அந்த ஷீவாஜீ ஓட ஓட விரட்டியிருப்பேன்' என்கிறார் இன்னொரு பக்கம் தான் இறுதிக்காலத்தில் பைத்தியம் பிடித்து இறந்த பின்பு இப்போது இந்நாவலின் வழியே 'மறுபிறவி கிடைத்தால் எனக்கு ஒரு திருவோடு போதும்' என்கிறார். ஒரு பேரரசர்க்கு காலம் கடந்த பின்பு ஏற்படும் மாற்றங்களில் அவர் தன்னையே கிடைக்கும் பல சந்தர்ப்பங்களில் மாற்றியும் பேசுகிறார்? சிலவற்றை ஒத்துக்கொள்ளவும் செய்கிறார்? - இதனை அழிந்த ஒரு அற்ப உயிர் இன்னொன்றாக வந்து வேறுமாதிரியாக உலாவிக் கொண்டே முன்பு தான் செய்த அனைத்தையும் அருகே நின்று எட்டிப்பார்ப்பதன் விளைவு என்றே நான் பார்க்கிறேன். "கல்லறையில் உறங்கும் மனிதனைப் போல இரு" என்ற வரி தான் இப்போது என்னை ஆட்கொண்டுவிட்டது.
Shelves
book Charu Nivedita

More like this


கோணல் பக்கங்கள் 2

சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின்

4.18/5 · 11 ratings

கெட்ட வார்த்தை [Ketta varthai]

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை …

4.18/5 · 11 ratings

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் [Antonin Artaud]

நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணம…

4.18/5 · 11 ratings

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட…

4.18/5 · 11 ratings

கனவுகளின் நடனம் [kanavugalin nadanam]

கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்…

4.18/5 · 11 ratings

Cinema - Alaindhu Thiribavanin Azhagiyal

சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிம…

4.18/5 · 11 ratings

ராஸ லீலா

எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு? ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்னைய…

4.18/5 · 11 ratings

அறம் பொருள் இன்பம்

கடையில் மரணம்தானே? யார் சொன்னது? சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிற…

4.18/5 · 11 ratings

Marginal Man

No description added

4.18/5 · 11 ratings

கோணல் பக்கங்கள் 3

ஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் மு…

4.18/5 · 11 ratings

ZERO DEGREE

No description added

4.18/5 · 11 ratings

Alida

No description added

4.18/5 · 11 ratings