கண்டேன் இலங்கையை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்டேன் இலங்கையை

None

4.1/5 · 29 ratings

இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக 'மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்கு அமரர் கல்கி பயணம் செய்த அனுபவங்களை "கண்டேன் இலங்கையை" எனும் தலைப்பிலான பயணக்கட்டுரைத் தொகுப்பாக வெளியானது. இந்த கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த சிலோன், இப்போதைய ஸ்ரீலங்கா, பலவிதங்களில் மாற்றம் கண்டுள்ளது எனினும் அடிப்படையான பண்பாடும் சுவைகளும் மரபுகளும் அப்படியேதான் உள்ளன என்று தோன்றுகிறது. கல்கிய…

Reviews

user_18281

★ 5/5
புத்தகம் : கண்டேன் இலங்கையை ஆசிரியர் : கல்கி பக்கங்கள் :180 பதிப்பகம் : Audible கதை ஓசை வாசித்தவர் : தீபிகா அருண் கேட்கும் நேரம் : 3 மணி 31 நிமிடம் அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புத்தகம் எழுதும் முன் பல முறை இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அந்த பயணத்தின் குறிப்புகள் விகடனில் வெளிவந்தது புத்தகமாக இருக்கிறது என்பது தெரியாது. இதுவரை அவரின் கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். கட்டுரைத் தொகுப்பு கேட்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமரர் கல்கி மற்றும் கார்ட்டூன் மேதை மாலி அவர்கள் மேற்கொண்ட பயணத்தை கல்கியின் அழகான வர்ணனைகளோடும் நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்ட பன்னிரண்டு கட்டுரைகள். கல்கியின் வார்த்தைகளில் கண்ட இலங்கை போல் நிஜத்தில் அது இருக்குமா என்று தெரியாது, ஆனால் வாசித்தபின் கண்டிப்பாக அவர் சென்ற இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 30 களில் இருந்த இலங்கை மரகதத்தீவாய் கண் முன் விரிகிறது. தனிவிமானத்தில் பயணம் தொடங்குகிறது . இலங்கை பற்றிய முன்னறிவை புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டு பயணம் தொடங்கியதாக அவர் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார், பின்னாளில் அவர் புத்தகமும் அந்த வகையில் சேர்ந்து கொண்டது. அவர் விவரித்திருக்கும் இலங்கையில் பசுமை. அங்குள்ள தமிழர்கள் என்பதற்கு பதில் இந்தியர்கள் என்றே புத்தகம் முழுவதும் சொல்லியிருப்பது குறிப்படத்தக்கது. அங்கு அவர் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என அவருடன் நாமும் பயணிக்கிறோம். அங்குள்ள அரசியலை இலை மறைவு காய் மறைவாக காட்சிப்படுத்தயிருக்கிறார். அங்கு பரவியிருக்கும் தமிழ், இயற்கை, புத்த சிலைகள், கலை, இலக்கியம், வாழ்க்கை முறை, அவர் மீதும், தமிழ் மீதும் அங்குள்ளவர்கள் கொண்ட அன்பு, பெண் கல்வி போன்றவற்றை சிலாகித்து எழுதியுள்ளார். நம் நாட்டிலிருந்து அங்கு சென்று கஷ்டப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலார்கள் படும் கஷ்டம், அவர்களின் உரிமைக்காக போராடுபவர்கள் குறித்து விவரமாக எழுதியுள்ளார். இந்திய விடுதலை போராட்டக்காலத்தில் எழுதப்பட்ட புத்தகமாதலால், காந்தியம், கதர், தேசிப்பற்று, இலங்கை விடுதலை முயற்சி போன்றவற்றின் குறிப்புகளை காண முடிகிறது. மாலி அவர்கள் அங்குள்ள மனிதர்களை வரைந்த கார்ட்டூன்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது. அதோடு கல்கி சுற்றித்திரிந்த நுவரேலியா, கண்டி, அநுராதபுரம்,சிகிரியா மலை, பொலோனருவா, யாழ்ப்பாணம்,தம்புல்லா , தேயிலைத் தோட்டங்கள், கடைவீதிகள், விதவிதமாக அவர் விவரித்த புத்தர் சிலைகள், பசுமை நிறைந்த நிலப்பரப்புகள் எல்லாம் நேரில் சென்று பார்க்கும் வரை மறக்காத அளவுக்கு உயிரோட்டமாக எழுதியுள்ளார். பயண விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_18280

★ 4/5
A nice non fictional piece covering different aspects of Srilanka in the early part of 20th century. Draggy but still ok.

user_18279

★ 4/5
Small trip to srilanka.

user_18278

★ 5/5
அன்றிருந்த இலங்கையைக் காண்! இன்று இலங்கையை ஆராய்.
Shelves
Kalki Travelogue கல்கி-1 book

More like this


மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.1/5 · 29 ratings

Kalki's Ponniyin Selvan Comics - Book 4 (in TAMIL) Nadunisi Kootam Sirippum Kothippum: Pudhu Vellam

Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…

4.1/5 · 29 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.1/5 · 29 ratings

Kalki's Ponniyin Selvan Comics- Book 1 (in TAMIL) Aadi Thirunaal & Vinnagara Kovil: Pudhu Vellam

Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor an…

4.1/5 · 29 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

4.1/5 · 29 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

4.1/5 · 29 ratings

பொன்னியின் செல்வன் : பாகம் 4 Ponniyin Selvan : Part 4: மணிமகுடம்

எழுத்தாளர் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர நாவல். பாகம் 4 - மணிமகுடம்

4.1/5 · 29 ratings

குடகு

குடகு மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஒற்றுமையைப் படம்பிடிக்கும் பயணக்கட்டுரை

4.1/5 · 29 ratings

நாம் தந்தையர்கள் செய்த வின்தைகள்

பண்டைய காலத் தமிழகத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றையும், நம் முன்னோர்கள் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிட…

4.1/5 · 29 ratings