உண்மையான காதல் : unmayana kadhal

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உண்மையான காதல் : unmayana kadhal

None

3.62/5 · 21 ratings

இளம் ஜோடிகள் மற்றும் ஒரு காதல் தோல்வியடைந்தவன் ஒரு பீச் ரெஸார்டில் ஹாலிடே கழிக்க சந்தித்துக்கொள்கிறார்கள். தங்கள் காதல் கதையைப் பேசும் போது "உண்மையான காதல் என்றால் என்ன ?" என்பதற்குள் உரையாடல் நகர்ந்து விடுகிறது. மது அருந்திக்கொண்டே உரையாடுவதால் பேச்சு எல்லையற்று விரிகிறது. சிந்து என்கின்ற சிங்கிள் கடைசியில் வந்து கலந்து கொள்கிறாள். காதலா ? காமமா ? உண்மையான காதல் இருக்கிறதா ? செக்ஸ் இல்லையென்றால்…

Reviews

user_18159

★ 4/5
Conservation between living together couples. Aswath is the writer and asks some difficult questions to the couples who join with him for a get together. Is there anything called TRUE love? Or love is just a mask to reach others sex organs. Some even argue that the physical torture by their x partners also a way of expressing love but in a wrong way. The characters have spoken openly and some readers might feel it as gross. Not for all.

user_18158

an Intersting conversation.

user_18157

★ 3/5
உண்மையான காதல் என்பது என்னவாக உங்களுக்குள் இருக்கிறது என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான ஒரு விவாதத்தை இந்த நூல் தொடங்கி வைக்கிறது. காதல் என்னவாக உங்களிடத்தில் இருக்கிறது அன்பாகவா ? கேரிங்காகவா ? வெறும் ரிலேஷன்ஷிப் ? அல்லது செக்ஸாகவா ? என்னவாக இருந்தாலும் அதை அப்படியே அழைத்துக் கொள்ளுங்கள் அதன் மீது எதற்காக தெய்வீக காதல் உண்மையான காதல் என்றெல்லாம் காதலை புனித பின்பமாக மாற்றுகிறிர்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறது. திருமண உறவை புனிதப்படுத்திக்கொண்டு வாழ்நாள் முழுவதும் பிடிக்காதவரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தெய்வீக காதல் என்று சொல்லிக் கொண்டு காதல் தோல்விக்கு பிறகு குடித்துவிட்டு தெருவில் தாடி வளர்த்து கொண்டு கிடந்த காலம் மாறிவிட்டது. அன்றாடங்களில் இருந்து விடுபட்டு நடுத்தர வாழ்க்கைக்கும் அதற்கு மேல் இருக்கும் மேல்வர்க வாழ்க்கைகுல் நுழைப்பவர்கள் இன்று சர்வசாதாரணமாக காதல் தோல்விகளை சந்தித்து விடுகிறார்கள். அதில் இருந்து மிக எளிதாக வெளிவந்து அடுத்த காதலை நோக்கி மெல்ல நகர்ந்து விடுகிறார்கள் . ஏன் இங்கே குறிப்பாக மேட்டுக்குடிகளை மட்டும் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த நூல் அவ்வாறாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் அவ்வாறு நிறுவத்தான் முயன்றிருக்கிறார் உதாரணம் லௌகிகத்தில் உழலும் ( எழுத்தாளர்கள் மொழியில் பாமரன் ) பாலு மங்களா கிராமத்தில் நடக்கும் காதல் கதை. ஆனால் இதைப் போன்ற பிரச்சனைகளை மேல்வர்கம் இதை போல் பேசி தீர்த்துக் கொள்கிறார்கள் கீழே இருப்பவர்கள் தெருவில் கட்டி உருள்கிறார்கள். பிறகு நூல் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொள்கிறார்கள் ஆங்கிலம் பேசுவதால் தங்களை அவர்கள் மேட்டுக்குடி என்று வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறார்கள் திரைப்படத்தில் கௌதம் மேனன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு பார்வையாளர்களின் காதை ரம்பம் வைத்து கரகர என்று அறுப்பார் அல்லவா அதை போல் இருக்கிறது இந்த ஆங்கில உரையாடல்கள். காதலுக்காக காதை கொடுப்பதும் கைக்கு குழந்தையை கொள்வதும் என்ற இரண்டு எல்லைக்குள் இருக்கிறது காதல்.காதல் புனிதத்திற்கும் கீழ்மைக்கும் இடையே ஊசலாடுகிறது.
Shelves
அராத்து-2 Araathu book

More like this


உயிர்மெய் - 2: The Sexist Hangover Love Story

இன்றைய இளைய சமுதாயம் காதலையும் காமத்தையும் புரியாமல் குழப்பி கொண்டும், வாழ்க்கையில் சரக்கும், பெண்களும் முக்கியம் என்று எண்ணி நடைமுறை வாழ்கையில் படும் சின்ன சின்ன மன குழப்ப…

3.62/5 · 21 ratings

ஓப்பன் பண்ணா: open panna

சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தா…

3.62/5 · 21 ratings

உயிர் மெய்-1

இன்றைய நவீன கால இளைஞர்களின் மெட்ரோ லைஃப் ஸ்டைல். லிவிங்க் டுகதர் கலாச்சாரம் , ஹவுஸ் பார்ட்டி , பப் கல்ச்சர் , நவீன காதலில் ஏற்படும் சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் இவைகள் கலந்த கலவை. …

3.62/5 · 21 ratings