I WANT TO READ THIS BOOK PLEASE OPEN IT.
Vairamuthu words are amazing.
Nice love story.
i want to read this book.
The introduction given by the author gave a hype. Vairamuthu at his best in very few places in the book.
Its a different Love story
He is my inspiration for writing. It was only his songs, which inspired me at first. It was his impeccable lyrics which made me to fall in love, fall in life, learn something worthy inside of me. And I expected a lot from his novel. I read this and I really wished he didnt write something like this. A too normal and boring story. Nothing more to say.
Excellent one!!!! A must read for Vairamuthu fans and lovers...
தலைப்பிலேயே இது ஓர் தெற்கத்தி காதல் கதை என்றாலும் கதைகளத்தின் எதார்த்ததாலும் அதன் கதாபாத்திரங்களின் சோபிதத்தாலும் சில பக்கங்களிலேயே கவிஞர் நம்மை ஆட்கொள்கிறார்.
வழக்கமான கதை எதிர்பாராத நகர்வுகள் சற்றே சுவாரஸ்யமாக்கினாலும் எதிர்ப்பார்த்த முடிவு பெரும் ஓர் குறைதான்!
அழுது முடித்த பின்னும் ஆறாத சில சோகங்கள் இருப்பது போல, வாசித்தபின்னும் ஓர் மென்சோகம் என் மனதில் இழையோடியது "ராஜதுரை - அம்சவல்லிக்காக"
எழுத்தின் நடை மற்றும் அதன் சுவைக்காக வாசிக்கலாம் ஒரு முறை... மதிப்பு: 3/5
இப்படைப்பில் நான் இரசித்தவை:
-------------------------------------------------------
காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையால் தண்டித்துவிட்டு இடக்கையால் ஆசிர்வதிக்கிறது. தத்துவம் அதைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீது தான்.
--------------------------------------------------------------
பலாப்பழம் உரிப்பது வரை கஷ்டம்.
ரயிலில் ஏறுவதுவரை கஷ்டம்.
முதலிரவில் அணைப்பதுவரை கஷ்டம் - அதாவது விளக்கை. (கவிஞரின் குரும்பு 😂😂)
காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
--------------------------------------------------------------
நிறைவேற்றக் கூடியவர்கள் மட்டுமே காதலிக்கலாம் என்று சட்டமிட முடியுமா?
காய்க்கிற மரங்கள் மட்டுமே பூக்கலாமென்றால் தாவரங்களுக்கு இலையுதிர்காலத்திற்குப் பிறகு இன்னொரு பருவம் இருக்க முடியாது.
--------------------------------------------------------------
குளியலின் முதல் சுகம் குளியல் அல்ல. அது கொடுக்கும் சுதந்திரம்.
ஆடைகள் என்னும் பொய் விலங்குகளைக் களைந்து, விட்டு விடுதலையாகி - நாம் நாமாகவே இருக்கும் வாய்ப்புக்கு மகிழ்ந்து - இதமான வெந்நீர் சருமங்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஓடி ஒழுகி சொல்லாமல் கொள்ளாமல் அந்தரங்கங்களில் எல்லாம் பரவுகிற போது - வாய் வழியே மூச்சுவிட்டு இமைகள் தாழும் நிமிஷமிருக்கிறதே - அதை, ஒரு மனிதன் வாழும் நிமிஷங்களுள் ஒன்றாய் வரவு வைக்கலாம்.
--------------------------------------------------------------
காதலர்களுக்கு சாவுண்டு;
காதலுக்கு சாவேது???
This book written by vairamuthu speaks about a love story between a lady who dances for prices paid for village dances and wealthy person s son. vairamuthu inbetween includes his own poetic sense and philosophical part of him. Every page was interesting and also induced eagerness in me. great read
Its a good novel which comes with its own Vairamuthu s style. Narration is really good and the rhyming sentence along with its enriched meaning behind it makes the book special. Even though it doesn t have a strong story, it has strong emotions in it.
காதலர்களுக்கு சாவுண்து !
காதலுக்கு சாவேது ??
மேல்சாதி கீழ்சாதி காதல் என ஏற்கன்வே அரைத்து புளித்து போன மாவு தான் என்றாலும் இம்முறை வைரமுத்துவின் பேனாக்கள் அரைதததால் தனிசுவையுடன் tasteஆக உள்ளது !
ராசதுரை -அம்சவல்லி <3 இவர்களின் கள்ளங்கபடமில்லாத காதலை தங்களின் கௌரவத்திற்கும் சுயநலத்திற்கும் பயன்படுத்தி , மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவை பிரிக்க முயல்கின்றனர் , இறுதியில் வென்றது காதலே !
கதையின் துவக்கத்தில் ராசதுரை மீது ஏற்படும் கோபமும் , வெறுப்பும் ,கதை நகர நகர அதுவே பரிதாபமாகவும் , பாசமாகவும் மாறுகிறது ராசதுரையின் காதல் தூய்மையானது ! அப்பழுக்கில்லாதது ! அவன் தன்னுடய காதலை வெளிப்படுத்தும் பொழுது நாம் கண்களும் கலங்குவது நியாயமே !
அம்ச வல்லி ஒப்புக்கு வந்து போகும் நாயகியாக இல்லாமல் , மனதில் பதிந்து நிற்கிறாள் ! கண்டமனூர் ஜமீனை எதிர்த்து அவள் கேட்கும் கேள்விகள் சபாஷ் போட வைக்கின்றது ! ராசதுரையிடம் தான் காதலை காட்டும் பொழுது நம் dreamgirl ஆக மாறிவிடுவது இயல்பே ! <3 :*
நடுவில் கொஞ்சம் ஜவ்வாக இழுத்தாலும் , கதையின் climaxil கண்களை கலங்க வைத்து விடுகிறார் வைரமுத்து !
ஒரு போர்களமும் , இரண்டு பூக்களும் - என்றும் நம் நினைவில் வாடாமல் இருக்கும் பூக்கள்!
பல காலத்திற்கு முன்பு இருந்த சாதி கொடுமைகளால் தீட்டப்பட்ட காதல் கதை... முன்னுரையில் வைரமுத்து கூறியதை போல.. "அழுது முடித்தும் ஆறாத சோகத்தை போல.. எழுதி முடித்தும் முடியாத சோகம்" இதை படிக்கையில் தெரிகிறது...
"ஒரு ஈட்டியில் இரு உயிர் சென்றன..
ஒரே ஈட்டியில் இரு உயிர் நின்றன... "ராசதுரை அம்சவல்லி" !
அந்த பள்ளதாக்கில் மட்டும் குயில்கள் கூவுகின்றன...
ஓடையும் பேசிகொண்டே போகின்றது...
அந்த இடத்தில மட்டும் நிலவின் கரணங்கள் விழுகின்றன..
கண்டமனூர் ஜமீனை காணவில்லை...
கடந்து செல்லும் ஜனங்கள் இரண்டு பூக்களை போட்டுவிட்டே போகிறார்கள்... காதலர்களுக்கு சாவுண்டு.. காதலுக்கு ?!"
வைரமுத்துவின் இயல்பான படைப்புகளில் ஒன்று. A must read for Vairamuthu fans and also to those who knows the meaning of love. :)