Reviews for தாயுமானவன்

18 reviews total

user_16713

★ 5/5 Feb 02, 2026

பாலகுமாரனின் முதல் புத்தகமாக இதைப் படித்தேன், அவர் அபாரமாக எழுதியிருக்கிறார். இதுவரை நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. ஒரு தந்தை தாயாக மாறுவதற்கான அழகான கதை.

user_16712

★ 3/5 Feb 02, 2026

பரமு என்ற தொழிற்சாலை ஊழியர், தான் எடுத்த ஒரு முடிவால் வேலையை இழந்து ஒரு வருடம் வீட்டில் இருக்க நேரிடுகிறது. அந்த ஒரு வருடத்தில் அவன் கடந்த கால நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஊசலாடுவது, குடும்பம் அவனுக்கு ஆதரவாக நிற்பது, சாதாரண விருப்பங்களைக்கூட நிறைவேற்ற முடியாத சூழல் என அனைத்தும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

user_16711

★ 5/5 Feb 02, 2026

இந்த ஓட்டம் அநாவசியம். இந்த உழப்பல் அநாவசியம். நான் யாரையும் தாங்கவில்லை. எவரும் என்னைத் தாங்கவில்லை. அவரவரை அவரவர் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் — வாழ்க்கையின் நோக்கத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாது.

பாலகுமாரனின் சிறந்த நாவல்களில் ஒன்று. உடையார் நான்கு பாகங்களுக்குப் பிறகு அவரது மற்ற படைப்புகளைத் தேடிய எனக்கு, இந்தப் புத்தகம் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை விரிவுபடுத்தியது. கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_16710

★ 5/5 Feb 02, 2026

தொழிற்சாலையில் நிகழும் அரசியல் மாற்றங்களால் தொழிற்சங்கத் தலைவன் பரமு வேலையை இழந்து வீட்டில் தாயுமாய் தந்தையுமாய் அல்லாடும் கதை. இப்படி சொல்லிவிட்டானே, சோகக் கதையாக இருக்குமோ என்று பயந்துவிட்டீர்கள் என்றால், ஒரு நல்ல மனதுக்கு இதமான புத்தகம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

வேலையை இழந்த பரமு அடுத்த வேலை கிடைக்கும் வரை வீட்டில் அல்லாடுவதை அவனது பார்வையில் விரிக்கிறார் பாலகுமாரன். தொழிற்சாலையில் கம்பீரமாகச் சிங்கம்போல் வேலை வாங்கியவன், வேலைபோன பின் எப்படி நாட்களைத் தள்ளுகிறான் என்று போகிறது கதை.

மகள் பருவம் எய்திய செய்தி பள்ளியிலிருந்து வரும்போது அனைவரும் அம்மா எங்கே என்று கேட்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்படும் சிக்கல்கள், அதனைப் பார்த்து சந்தேகப்படும் மனைவி, அடுத்த வேலைக்கு அலைந்து திரிவது என்று காட்சிகள் தத்ரூபமாக விரிகின்றன.

user_16709

★ 5/5 Feb 02, 2026

கடைசி மூன்று அத்தியாயங்கள் அபாரம். பாலகுமாரனின் எந்த புத்தகமும் படிக்காதவர்கள் நிச்சயம் ஏதோ ஒன்றை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உறுதி.

user_16708

★ 4/5 Feb 02, 2026

தகப்பன் தாயாக மாற வேண்டும். அம்மா என்கிற பதவி எப்படிப் பெண்ணுக்கு மட்டும் சொந்தமாகும்? அது எனக்கும் உண்டு, எல்லா உயிருக்குள்ளும் உண்டு. தாய்மை என்பது பாலினத்தைத் தாண்டிய உணர்வு என்பதை உணர்த்தும் நாவல்.

user_16707

★ 5/5 Feb 02, 2026

கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்தான் தாயைப் படைத்தார் என்று சொல்வதுண்டு. ஆனால் தந்தையை மறந்துவிடுகிறோம் சில சமயங்களில்.

ஒரு குழந்தை பிறக்கும்போதுதான் தாயும் பிறக்கிறாள். ஆனால் மனைவி கர்ப்பமானதுமே இளம் கணவன் தந்தை பொறுப்பை ஆசையாய் ஏற்கிறான். அங்கே ஆரம்பிக்கிறது ஒரு தந்தையின் கடமை. குழந்தை வளர வளர அவனுடைய பொறுப்பும் அதிகமாகிறது. சான்றோனாக்கும் கடமையை நிறைவேற்ற ஒரு அப்பா படும் கஷ்டம் சொல்லி மாளாது.

பரமு என்ற நடுத்தர மனநிலை ஆணின் பார்வையில் விரியும் இக்கதை, ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையில் தொழிலாளியாகவும் தொழிற்சங்கத் தலைவனாகவும் இருக்கும் அவன், நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் பிரச்சினையில் வேலையை இழக்கிறான். அதிலிருந்து ஒரு வருடம் வீட்டில் அல்லாடும் அவனின் நிலையை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்கிறார் பாலகுமாரன்.

குடும்பத்திற்காக மெழுகாய் உருகும் தாயுமானவனாய் இருக்கும் அப்பாக்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

user_16706

★ 4/5 Feb 02, 2026

ஒரு சிறு பொறியாய் ஆரம்பித்து பெரு நெருப்பாய் நெஞ்சைக் கவர்ந்துவிடும் எழுத்து. போதையில் இது என்ன வகை என்று புரியாத நிலையில் படித்து முடித்த பின் எழும் உணர்வு. இதுதான் பாலகுமாரன் எழுத்து.

சட்டென்று விளங்கும் வகையில் பிரித்து விளக்கி உள்ளிழுக்கும் கலைக்குச் சொந்தக்காரர். இந்த முறை தேர்ந்தெடுத்த களம் இயந்திரங்களின் இடையே என்றாலும், மானுடத்தை அதன் வழியே ஆராதித்து, அதையும் தாண்டி கைபிடித்து அழைத்துப்போக முயல்கிறார்.