Reviews for விரும்பிச் சொன்ன பொய்கள் [Virumbi Sonna Poigal]

29 reviews total

user_16582

★ 4/5 Feb 02, 2026

விரும்பிச் சொன்ன பொய்கள் — படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் புத்தகத்தை மூடி வைப்பது கடினம்.

ஆவேசமான ராதாகிருஷ்ணன், ஸ்டைலான மந்தாகினி — நிறைய எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை. கடைசி சில பக்கங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கும். தலைவன் சுஜாதா தன் ஸ்டைலில் முடிச்சிருக்காரு!

மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவம்.

user_16581

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தையும் கதாபாத்திரங்களையும் நான் மறப்பது வாய்ப்பில்லாதது. கதை கோர்வையாக இருந்தது, சுவாரசியம் குறையும் தருணங்களிலும் ஏதோ ஒரு நிகழ்வு கவனத்தை இழுக்கும்.

முடிவில் வைத்த ஒரு வார்த்தைப் பதில்தான் என்னை அதிர்ச்சியடையச் செய்தது.

சுஜாதாவின் இந்தப் புத்தகத்தை அனைத்து சுஜாதா ரசிகர்களும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படிக்கப் படிக்க அனைத்து சுஜாதா கதைகளும் ஒரு விதத்தில் பிடித்துவிடுகிறது.

user_16580

★ 5/5 Feb 02, 2026

சுஜாதா ஏன் பிடிக்கும் என்ற கேள்விக்கு இன்று வரை பளிச்சென்று கூறும் பதில் என்னிடம் இல்லை. வாசகர்களிடம் கதையின் முடிவை விட்டுவிடுவது சுஜாதாவுக்கு மிகப் பிடித்த உத்திகளில் ஒன்று.

"ஆம்", "இல்லை" என்ற ஒரு வார்த்தையில் கதை முடிந்தாக வேண்டும். அந்த முடிவைத் தான் வாசகர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.

கதை இன்னது என நான் சொல்லிவிட்டால் அதன் சுவாரசியம் குன்றிவிடும். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், இரண்டே அத்தியாயங்கள், ஒரு சொல் முடிவு.

"விரும்பிச் சொன்ன பொய்கள்" தலைப்பு கதைக்கு எத்தனை பொருத்தம் என்பது கடைசி பத்துப் பக்கங்களில் தெரியும். இறுதி வரி வரை சுவாரசியம் அடங்காத சுஜாதாவின் கதை.

user_16579

★ 5/5 Feb 02, 2026

வாத்தியார் பற்றிச் சொல்லித்தான் தெரியணுமா? சிறுகதையோ, கட்டுரையோ, நாவலோ எல்லாருக்கும் புரியற மாதிரி பரிமாறுவதில் வல்லவர்.

நேத்து ரொம்ப நேரம் தூக்கம் வரல, கிண்டிலில் கொஞ்சம் பிரவுஸ் பண்ணலாம்னு உள்ள போனேன். விரும்பிச் சொன்ன பொய்கள் ஒரு புத்தகம், 80 பக்கம் வேற, சரி படிக்கலாம் முடிஞ்சா வரைக்கும்னு தான் எடுத்தேன் — முடிச்சுட்டுத்தான் வச்சேன்.

80 பக்கத்தில் ஒரு 1.30 மணி நேரம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண முடியும் அளவுக்கு ஒரு அருமையான த்ரில்லர் ஸ்டோரி.

ராதாகிருஷ்ணன் சர்க்கஸில் பணிபுரியும் வில்லாளன், அங்க நடக்குற காதல் பிரச்சனையில் காதலி மார்பில் அம்பை எறிஞ்சுட்டு சிறை சென்று திரும்பிய ஆளு. அதுக்கப்புறம் கிடைக்குற வேலையைப் பார்த்துக்கிட்டு கஷ்டப்படும் ஆளு. அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்குது, அங்க இருக்குற முதலாளி பொண்டாட்டியோட ஏற்படும் அனுபவம் — இதுக்கு மேல நான் சொல்லல, படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ராதா கேரக்டர் புத்தகம் முழுக்க ஆவேசமா சுத்துற ஒரு ஆளு. 1987-ல் வாத்தியார் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் பற்றியெல்லாம் விவரமா எழுதியிருக்காரு.

ஒரு கதை படிக்கும்போது வாசகனை நம்பி முடிவைக் கொடுக்கும் பழக்கம் எனக்கு எப்போவுமே பிடிக்கும். நம்ம சுஜாதா சில கதைகளில் முடிவை நம்மிடம் ஒப்படைப்பார் — அதே தான் இதிலும்.

நிஜமாக நல்ல ஒரு த்ரில்லர். வாத்தியாரை அந்தக் காலத்தில் வாரா வாரம் படிச்சவங்களை நெனச்சா பொறாமையா இருக்கு தலைவரே.

user_16578

★ 5/5 Feb 02, 2026

1987-ல் ஒரு பெண் கதாபாத்திரத்தை இப்படி தைரியமாகச் சித்தரிப்பதற்கு ஒரு தனித் துணிச்சல் தேவை. கதையின் முக்கிய முடிவை வாசகர்கள் கையில் ஒப்படைப்பது என்பது மிகக் கொடூரமான செயல் வாத்தியாரே!

user_16577

★ 4/5 Feb 02, 2026

படிக்க ஆரம்பித்தது முதலே சுவாரசியத்திற்குக் குறைவில்லை. இந்தக் கதையின் முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறார் சுஜாதா. ஆம், இல்லை எனும் வார்த்தைத் தேர்வில் கதை முடிகிறது.

user_16576

★ 2/5 Feb 02, 2026

விரும்பிச் சொன்ன பொய்கள் — அழகான தலைப்பு! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்தத் தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் நாவல் இது.

நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் போக்கும் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. அந்த வார்த்தையை வாசகர்களான நாம் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

கதையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு வயது வந்தோருக்கான காதல் கதை. கோபத்திலும் காமத்திலும் எப்போதும் வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்கும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையைச் சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார்.

கொஞ்சம் வித்தியாசமாக நடந்துகொள்ளும் மந்தாகினியிடம் இவன் மயங்கிவிடுகிறான். மந்தாகினி மீது பைத்தியம் பிடித்த ராதாகிருஷ்ணன் அவளைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது.

இந்த 80 பக்கக் கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமான காதலில் விழுந்த மனிதனின் உளவியல் பயணமாகப் போய்விட்டு, கடைசி 2 பக்கங்களில் திடீரென வேறு தளத்தில் முடிகிறது.

user_16575

★ 4/5 Feb 02, 2026

சுஜாதாவுக்கு என்றுமே வாசகர் கையில் கதையின் முடிவை விடுவது பிடித்தமான ஒன்று. கொலையுதிர் காலம் புத்தகத்தைப் படித்தபோதே அதைப் புரிந்துகொண்டேன்.

முன்னுக்குப் பின் முரணான மந்தாகினி, மிகவும் ஆவேசமான ராதாகிருஷ்ணன், அலட்சியமான புருஷோத்தமன். இந்த மூவருக்குள் நடக்கும் நாடகமே இக்கதை.

ஆம் இல்லை என்ற இரு முடிவுகளைக் கொண்டு நாடித்துடிப்பை எகிறவைத்து வேடிக்கை பார்க்கும் திறமை உள்ள எழுத்தாளர் சுஜாதாவைத் தாண்டி இன்னொருவர் இல்லை! விரும்பிச் சொன்ன பொய்கள் வாசகரால் விரும்பத் தகுந்த புத்தகம்.

user_16574

★ 4/5 Feb 02, 2026

மூன்றே கதாபாத்திரங்கள், இரண்டே அத்தியாயங்கள், ஒற்றை வார்த்தை முடிவு.

1987-ல் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இன்றும் நானும் எனது நண்பனும் அதன் முடிவிற்காக கலந்துரையாடுகிறோம் என்றால் அது தான் சுஜாதாவின் மாயாஜாலம்.

ஒற்றை வார்த்தை முடிவு — ஒற்றை வார்த்தையில் வாசிப்பாளனை கட்டிப்போடும் வித்தையில் திறமை பெற்றவர் சுஜாதா.

ஆவேசமான ராதாகிருஷ்ணன், முன்னுக்குப் பின் முரணான மந்தாகினி, அலட்சியமான கணவன் புருஷோத்தமன் என்று மூன்று விசித்திரமான குணம் கொண்ட கதாபாத்திரங்களின் கதை.

இவையெல்லாம் தவிர முக்கியமான கதாபாத்திரம், குழம்பிய நிலையில் முடிவெடுக்கும் பொறுப்புடன் இருக்கும் வாசிப்பாளன்.