கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal

None

4.34/5 · 100+ ratings

அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன. 'கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா!' என்று முதல் முறையாக நம் தோள் மீது கைபோட்டு ஜாலியாக (சத்தியம், சத்தியம்!) விவாதிக்கிறார் சுஜாதா. …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16105

★ 5/5
Collection of 25 brilliant, brilliant essays on Science. He holds the reader's attention and delivers great essays on scientific concepts. He can talk about big bang and God and noses with equal ease. Genius!

user_16104

★ 4/5
கற்பனைக்கும் அப்பால் சுஜாதா எழுதிய முதல் முழவதும் அருவியில் சார்ந்த புத்தகம். 25 அற்புதமான அறிவியல் கட்டுரைகளை கொண்டது. நாம் எடுத்தவுடன் பிக் பங் தியரி பற்றியெல்லாம் பேசினால் புத்தகத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் என்று நன்கு நம்மக்களை பற்றி தெரிந்ததால் .. வாயை பிளக்கும் மனித அறிவியலை பற்றி பேசிவிட்டு, அறிவியலின் வெளிச்சத்தை ஆசையாக மேலும் கேட்கவும் படிக்கவும் தூண்டுகிறார். சொன்னது போல உலகம் எப்பிடி தோன்றியது முதல் மனிதன் தொட்டு அடுத்த 50 ஆண்டுகள் அறிவியல் உலகம் எப்படி உருமாறி இருக்கும் என ஆழமான அறிவை வழங்கியிருக்கிறது புத்தகம்.

user_16103

★ 4/5
Fantastic book not only scientific concepts even irk from home is predicted.

user_16102

★ 5/5
நல்லதொரு புத்தகம். பூமியில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய, ஆயிரமாயிரம் பள்ளிகள், ஆசிரியர்கள் அல்லது நண்பர்கள் செய்ய முடியாததை செய்யும் ஒரே ஒரு புத்தகம். சுஜாதாவுக்கு கோடி கோடி நன்றிகள்.

user_16101

★ 5/5
Writer Sujatha nevers ceases to amaze me with his writings on many subjects that includes science, philosophy, religion, literature, humour etc. It is no wonder why the Tamil readers miss him so much. He had the magic of simplifying complex science concepts that laymen can understand easily. This book is one such work. Read it and be amazed!

user_16100

★ 5/5
Always a fan of Sujatha’s writing. The concepts described in the book are way ahead of time and the way he explained things are very easy to understand and opens a whole new world to the readers. Universe, Galaxies , work from Home options everything are predicted

user_16099

★ 5/5
#286 Book 47 of 2024-கற்பனைக்கும் அப்பால் Author-சுஜாதா நான் பொதுவாக “non fiction” genre-இல் அதிக புத்தகங்கள் படிக்க மாட்டேன். அதில் ஒரு சில authors exception. அதில் சுஜாதாவும் ஒன்று. சுஜாதாவின் கதைகள் மற்றும் தகவல் சார்ந்த எழுத்துக்கள் இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். சுஜாதா என்ற பெயர் இருந்தாலே போதும்,எந்த புத்தகத்தையும் வாசிப்பேன்.அவரது எழுத்துக்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு, ஈர்ப்பு,ஆர்வம் மிக அதிகம். "கற்பனைக்கும் அப்லால்" என்பது சுஜாதாவின் மிகப் பிரபலமான அறிவியல் நூல்களில் ஒன்று. இந்த நூலில், சுஜாதா அறிவியல் மற்றும் மனிதகுலத்தின் பல்வேறு அசாதாரணமான மற்றும் சுவாரஸ்யமான கேள்விகளை எதிர்கொண்டு, அவற்றிற்கு அறிவியல் மற்றும் தத்துவத்தால் விளக்கமளிக்கிறார். உலகின் உருவாக்கம், மனித வாழ்வின் தோற்றம், கடவுளின் இருப்பு போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளின் பதிலை அவருடைய தனித்துவமான எழுத்து பாணியில் பதிலளிக்கிறார். நம்மில் பலருக்கு பள்ளியில் அறிவியல் பாடம் கடினமாக இருந்திருக்கலாம்.அதற்குக் காரணம் அறிவியல் கடினமானது என்பது அல்ல, அது சொல்லி கொடுக்கப்பட்ட விதம் தான் காரணம்.பள்ளியில் நான் இயற்பியல் பாடத்தை வெறுத்தேன்,ஆனால் சுஜாதாவால் நான் இயற்பியலை விரும்ப ஆரம்பித்தேன். கற்றல் எவ்வாறு விருப்பமாக மாறுகிறது என்பதே முக்கியம். இந்த புத்தகம் அதைக் குறிப்பிடுகிறது. உலகம் எவ்வாறு உருவானது, மனிதர்கள் எவ்வாறு பிறந்தார்கள், கடவுள் உண்டா, நாம் வாழும் உலகைப் பற்றிய அற்புதமான கேள்விகள் அனைத்தையும் மிகவும் சுவாரஸ்யமான முறையில் விவரிக்கிறார் சுஜாதா. சுஜாதா 2002-ஆம் ஆண்டிலேயே 'வீட்டில் இருந்து வேலை' (work from home) பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இன்று நடைமுறையில் பார்க்கும் பல விஷயங்கள் சுஜாதா அவரது புத்தகங்களில் முன்பே கூறிவிட்டார்.அவர் ஒரு முன்னோடி! இந்த படைப்பு எல்லாருக்கும் எளிதாகப் புரியக்கூடியது. எல்லாரையும் ஆர்வமாக விரும்பி படிக்கவும் தூண்டும். அறிவியலுக்கான தேடலை விதைக்கும்.

user_16098

2002 ஆம் ஆண்டு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பே 'கற்பனைக்கும் அப்பால்'. இப்புத்தகத்தில் மொத்தம் 25 அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. எது அறிவியல், எது அறிவியல் இல்லை, என்பது தொடங்கி கடவுளுக்கும் அறிவியலிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சம்பந்தம் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறார். முதலில் அறிவியல் எது? எது அறிவியல் இல்லை? என்பதை விளக்குகிறார் சுஜாதா. நம் முன்னே நடக்கும் சில அசைவுகளை உற்றுப் பார்த்து அதற்காக ஒரு hypothesis அமைத்து அந்த hypothesis வேறு வேறு சூழலில் சரியாக இருக்கிறதா என்பதை அறிவதே அறிவியல். எடுத்துக்காட்டாக நியூட்டன், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் அமைத்த விதிமுறைகள் என்பது அறிவியல். அறிவியல் இல்லாததற்கு எடுத்துக்காட்டாக ஜோசியம், வாரபலன் இதனையெல்லாம் பொய்யான விஞ்ஞானம் என்று சுஜாதாவே கூறினாலும், இன்று வரையிலும் நம் ஊடகங்களில் தினசரி ராசிபலன் நிகழ்ச்சிகள் ஒன்றும் குறைந்தபாடில்லை. மூக்கு, அதில் இருக்கும் Olfactory receptors பற்றிய கட்டுரை எனக்கு பிடித்தமான ஒரு கட்டுரையாக அமைந்தது. மனிதர்களிடம் மோப்ப சக்தி எனும் ஆற்றல் Evolution processல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதும் விலங்குகளிடம் இன்னும் மோப்ப சக்தி conservedஆக பாதுகாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று சுஜாதா கூறுவதை உணர முடிந்தது. இயற்பியல் ஆராய்ச்சி, கணிப்பொறி ஆராய்ச்சி, உயிரியல் ஆராய்ச்சி என்று அறிவியலில் எந்தப் பிரிவை எடுத்தாலும் சுஜாதாவிற்கு எழுதுவதற்கு நிறைய விடயங்கள் தெரிந்திருக்கிறது, அதுவும் அந்தந்த துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டில் அவர் எவ்வளவு updatedஆக இருந்திருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் போது தெரியவரும். எப்படி ஒரு நபரால் அறிவியலின் எல்லாப் பிரிவுகளிலும் ஆர்வங்கொண்டு அவற்றின் எதிர்கால விளைவுகளைக் கனிக்க முடியுமென்பதை இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்பொழுது ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக 'Homeoffice is the future', 'Effects of Artificial Intelligence' போன்ற நிகழ்கால நிகழ்வுகளை 2000களிலே கனித்து நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது. அறிவியல் காரணங்களில் சில போதாமைகளையும், அறிவியலின் அபார வளர்ச்சியின் விளைவாக மனிதச் சமூகத்திற்கு ஏற்படும் விபரீதங்களையும் கடவுள் மற்றும் கடவுள் கோட்பாட்டிற்கு எதிரானது என்று ஆத்திகவாதிகள் விவாதங்கள் பல செய்வதைக் கூறியும் "கடவுள் இருக்கிறாரா என்பது பிரச்சனை இல்லை. கடவுள் தேவைப்படுகிறார்" என்று சொல்லி இத்தொகுப்பை நிறைவு செய்கிறார் எழுத்தாளர் சுஜாதா.
Genres
Shelves
Sujatha book சுஜாதா Science

More like this


கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.34/5 · 100+ ratings
Check Price

வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]

Thriller Based Fiction Written By Sujatha

4.34/5 · 100+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.34/5 · 100+ ratings
Check Price

விரும்பிச் சொன்ன பொய்கள் [Virumbi Sonna Poigal]

வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோ…

4.34/5 · 100+ ratings
Check Price

நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]

‘நில், கவனி, தாக்கு!’ 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படு…

4.34/5 · 100+ ratings
Check Price

ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பா…

4.34/5 · 100+ ratings
Check Price

திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என்…

4.34/5 · 100+ ratings
Check Price

சுஜாதாவின் சிறுகதைகள் [Sujathavin sirukathaigal

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.

4.34/5 · 100+ ratings
Check Price

மலை மாளிகை [Malai Maaligai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் 'மலை மாளிகை' ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்…

4.34/5 · 100+ ratings
Check Price

கி.மு கி.பி

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…

4.34/5 · 100+ ratings
Check Price