Reviews for கண்பேசும் வார்த்தைகள்

14 reviews total

user_15785

★ 4/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாருடன் சில மாலைகளை கழிப்பது போல உணரச் செய்யும் இந்த புத்தகம், அவரது பல கவிதைகளையும் விருப்பமான பாடல்களையும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வழி.

user_15784

★ 4/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு பின்னால் உள்ள அனுபவங்களையும் கதைகளையும் இந்த புத்தகம் அழகாக விதைத்து வைக்கிறது.

user_15783

★ 3/5 Feb 02, 2026

இலக்கியத்தையும் இசையையும் ஓரே தட்டில் வைத்து ரசித்த அனுபவம் தான் கண் பேசும் வார்த்தைகள். இலக்கியத்தில் மட்டும் இருந்த ஆர்வத்தை இசையின் பாலும் ஈர்த்து, பாடல்களை புதிய கோணத்தில் காண செய்துவிட்டது.

user_15782

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் வாழ்க்கையின் அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு அவர் தானமான வரிகளை எழுதியதை காட்டும் இந்த புத்தகம், அழகான தமிழ்ப் பாடல்களையும் அவற்றின் தீவிர வரிகளையும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு.

user_15781

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் வரிகள் பட்டாம்பூச்சி மீது படர்ந்த வண்ணம் போல, அது பறந்து அதன் சிறகு உதித்தாலும், நம்மை தொட்டு போன வர்ணம் விரல் ஒட்டிக்கொள்ளும். ஒவ்வொரு பாடலின் பின் ஒரு கதையும் அதன் சுவரசியமும், அதன் காதலும், அதன் அழகியலும், அதன் ரகசியமும் படிக்க படிக்க திகட்டாத தேன் சுவை.

user_15780

★ 4/5 Feb 02, 2026

இந்த வருடத்தில் வாசித்த 4-வது நா.முத்துக்குமார் புத்தகம். அணிலாடும் முன்றிலில் கண்ணீர்க் கடலில் நீந்த வைத்தார். வேடிக்கை பார்ப்பவன் மூலம் அவர் வாழ்க்கையை அவரோடு சேர்ந்து வேடிக்கை பார்த்தேன். மிக மிக எளிமையான வார்த்தைகள் தான் ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கமோ மிக கனமானது.

user_15779

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் உருவகங்களுக்கு (மெட்டாஃபோர்) தேடி தேடி வாசித்த எனக்கு, கிடைத்த புத்தகம் இது. இது புத்தகம் இல்லை, இது நா.முவின் டைரி குறிப்புகள். இதை வாசிக்கும் போது ஏதோ நானும் அவரும் ஒருவரை ஒருவர் பல நாள் தெரிந்து அறிந்து பேசிக் கொள்வது போலவே உணர்கிறேன்.

user_15778

★ 5/5 Feb 02, 2026

ஒரு பாடல் திரைப்படத்தில் எவ்வாறு எழுதப்பட்டது, அந்த வரிகளுக்கு பின்னால் உள்ள உண்மையான அனுபவம் என்ன — இவற்றை பாடலாசிரியர் நேரடியாக விளக்கும் இந்த புத்தகம் மிகச்சிறந்தது.

user_15777

★ 5/5 Feb 02, 2026

அன்பில் தொடங்கி அன்பில் முடிகிறேன் என்ற பாடலாசிரியர் தாமரையின் வரிகளைப் போல, செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான 7/G ரெயின்போ காலனி படத்தின் கண்பேசும் வார்த்தைகள் பாடலில் தொடங்கி அதே படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலில் முடியும் இந்த புத்தகம், நா.முத்துக்குமார் தேர்வு செய்த 25 பாடல்களின் வரலாறையும் அவ்வரிகள் நெஞ்சில் உதித்த கணங்களையும் பதிவு செய்த ஒரு அழகான தொகுப்பு.

user_15776

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமார் மீதான மரியாதையும் அன்பும் இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அதிகமாகிறது. ஒரு பாடலை வெறும் பாடலாக கேட்டு ரசித்து கடந்து விடுகிறோம், ஆனால் அந்த பாடலை எழுத ஒரு பாடலாசிரியர் மெனக்கெடும் விதத்தை அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது.