Reviews for கயல்விழி

13 reviews total

user_15185

★ 5/5 Feb 02, 2026
கயல்விழி... திரு அகிலனின் எழுத்தும் கற்பனையும் கலந்த வரலாற்றுக் கதை. இந்தக் கதை பாண்டிய மன்னரையும் மற்றும் சுந்தரபாண்டியன் எப்படி பாண்டிய நாட்டை; அதாவது காலம் காலமாய்ச் சோழர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மதுரையை எப்படிப் போராடி மீட்டேடுக்கிறான் மற்றும் சோழபேர்ரசை எப்படி வெற்றிக் கொள்கிறான் என்பதை கூறுவது. கதையின் முற்பகுதியில் பாண்டிய நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் விழுப்பரையரின் மகனின் காதலைப் பற்றி நளினமாக எடுத்துச் சொல்லியிருக்கார். விழுப்பரையரின் மகன் (ஆலவாய் நம்பி), அவனது காதலி உய்யவந்தாளின் காதலை அழகாகச் சித்தரித்திருக்கிறார். நாயகன் பைந்தமிழ்க் குமரன் (சுந்தரபாண்டியன்), நாயகி கயல்விழி (பாணர்க் குலப் பெண்மணி). காதலை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். பைந்தமிழ்க் குமரன் தனது நாட்டு மக்களை ஒன்று சேர்த்து போர்ப் பயிற்சி கொடுத்துள்ளான். சோழபேர்ரசை வெற்றிக் கொள்கிறாரா? மதுரையை மீட்டாரா? பைந்தமிழ்க் குமரன் மற்றும் கயல்விழி என்ன ஆனார்கள்? என்பதை இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

user_15184

★ 4/5 Feb 02, 2026
சுந்தரபாண்டியன், கயல்விழி ஆகிய கதாபாத்திரங்களின் பண்புகள் மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. அகிலனின் இந்த பரிசோதனைத் தமிழ் வரலாற்று புதினம் மிகச்சிறந்தது. பாண்டிய நாட்டின் கதையை பற்றி படிக்க ஒவ்வொரு தமிழரும் ஆவலோடு காத்திருக்க வேண்டிய புதினம்.

user_15183

★ 4/5 Feb 02, 2026
ஆசிரியர்: அகிலன். கதாபாத்திரங்கள்... சுந்தரபாண்டியன், கயல்விழி, குலசேகரபாண்டியன், குலோத்துங்க சோழர், ராஜராஜன், விழுப்பரையர், ஜெயங்கொண்ட சோழ வல்லபர், பாமினி, வீர நரசிம்மர் உள்ளிட்ட பலர். பாண்டிய நாடு குலசேகரபாண்டியரின் காலத்தில் சோழசாமராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தும் சிற்றரசாய் இருக்கிறது. சுந்தரபாண்டியன் சிறந்த வீரன். குலசேகரரின் தம்பி. போரில் சுந்தரபாண்டியன் கொல்லப்படுகிறான். ஆனால் உண்மையில் விழுப்பரையர் அவனைக் காப்பாற்றி பைந்தமிழ்க் குமரனாக மாற்றுகிறார். மதுரையில் கயல்விழி என்ற பாணர் குல நாட்டியப் பெண்ணை சந்தித்து அவளைத் தற்கொலையிலிருந்து காக்கிறான். கொடுங்குன்றத்தில் பைந்தமிழ்க் குமரனாக புரட்சிக் கவிஞராக உருவாகிறான். கயல்விழியின் நடனத்துடன் பாண்டிய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறவை கூத்தாக அரங்கேற்றுகிறான். கயல்விழி சுந்தரபாண்டியனை உயிராய் காதலிக்கிறாள். இறுதியில் போர்த்தொடுத்து சோழநாட்டை வீழ்த்தி பாண்டிய நாட்டை விடுவிக்கிறான். கயல்விழி வீரசொர்க்கம் அடைகிறாள். சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டைக் கொற்றவை தெய்வமாக எண்ணி வழிபட்bடு ஆட்சி செலுத்துகிறான். போர் பயமின்றி பாண்டியநாடு அமைதியுடன் செழிப்படைகிறது.