Reviews for சிவ ரகசியம்

20 reviews total

user_14897

Feb 02, 2026

எதார்த்தமாக என் கண்ணில் பட்ட நாவல். நிறைய ஆழமான கருத்துக்கள், சித்தர்கள் பற்றிய சில உண்மைகள் இடம்பெறுகின்றன. எனது முதல் சித்தர் நாவல் இது. படிக்கும்போது என்னையே மறந்துவிட்டேன்.

user_14896

★ 3/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தில் ஏதோ ஒரு மர்மம் மறைந்திருப்பதாக உணர்கிறேன், அதை அறிய படிக்க விரும்புகிறேன்.

user_14895

★ 4/5 Feb 02, 2026

சுமாரான வாசிப்பு அனுபவம். கதை ஓரளவு ஈடுபாட்டுடன் செல்கிறது, ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

user_14894

★ 5/5 Feb 02, 2026

அருமையான கதை — திருப்பங்கள் நிறைந்தது. சித்தர்கள் பற்றிய ஆன்மீகத் தகவல்கள் ஏராளம் இடம்பெற்றுள்ளன. பூமிகாத்தான் பட்டி பற்றி படிக்கும்போது அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. சித்தர்களை நேசிப்பவர்களும் நம்புபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_14893

★ 4/5 Feb 02, 2026

ஆசிரியரின் மற்றொரு அமானுஷ்ய த்ரில்லர் நாவல். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சித்தர்கள் தொடர்பான சுவாரசியமான கேள்விகளுக்கு பதில்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக கதைக்களம் நன்றாக இருக்கிறது, ஆனால் க்ளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

user_14892

★ 1/5 Feb 02, 2026

இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கலாம். கதை நிறைய சஸ்பென்ஸ்களுடன் ஈர்க்கும் வகையில் இருந்தது, ஆனால் க்ளைமாக்ஸ் திருப்திகரமாக இல்லை.

காட்சி விவரிப்பில் சில தவறுகள் உள்ளன — உதாரணமாக, ராமண்ணா சிறையில் தற்கொலை செய்தாரா அல்லது தூக்கிலிடப்பட்டாரா என்ற குழப்பம். டாக்டர் வில்சனுக்கு என்ன ஆனது? கபாலி ஏன் தண்டிக்கப்படவில்லை? இது போன்ற கேள்விகள் பதிலின்றி நிற்கின்றன.

user_14891

★ 3/5 Feb 02, 2026

இந்த நாவல் 2015-ல் வெளியானது. இப்போது தான் படிக்க நேர்ந்தது. படிக்கும் போது முழுவதும் ஈடுபாட்டோடு இருந்தேன். ஒவ்வொரு நாளும் புத்தகத்தைத் திறந்து தொடர்ந்து படிக்க ஆவலாக காத்திருந்தேன். புத்தகத்தின் பெயரோ அல்லது கதைக் களமோ, எதுவென்று தெரியவில்லை — ஒரு அமைதியான மனநிலையை உணர்ந்தேன்.

கதை மிக நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது, முதல் பக்கத்திலிருந்தே வேகமாக செல்கிறது. சித்தர்கள் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன, அத்தியாயங்களுக்கு இடையில் கேள்வி-பதில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திரா சௌந்தரராஜன் எப்போதும் தெய்வீக வழியில் கதை சொல்வார், ஆனால் பழைய பாணியில் இருக்காது.

க்ளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும், ஏமாற்றம் தரவில்லை. வேலைப்பளுவில் சிக்கி மனதை திசை திருப்ப ஏதாவது தேடும்போது, இந்தப் புத்தகம் நிச்சயம் ஈடுபாட்டோடு வாசிக்க வைக்கும்.

user_14890

★ 5/5 Feb 02, 2026

சித்தர்களின் சித்து விளையாட்டு சம்பவங்களை கதை நெடுகிலும் பயன்படுத்தி புனையப்பட்ட கதைக்களத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல். 536 பக்கங்களை கொண்ட இப்புத்தகம் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

சிவரகசியம் என்ற தலைப்பை ஒட்டி, முழுவதும் இந்து சமய கோட்பாடுகளால் மட்டும் நிறைந்ததாக இல்லாமல், சித்தர்கள் குறித்த தகவல்கள், ஆன்மீக தத்துவங்கள், ஆன்மீக இலக்கியங்களிலிருந்து பாடல் குறிப்புகள் என நாவல் நெடுகிலும் அறிய வேண்டிய விடயங்களை கூறிச் செல்கிறது. மேலும் சுவாரசியம் கூட்டும் விதமான கதைமாந்தர்களின் விவாதங்கள், அமானுஷ்யங்கள் மூலமாக ஜனரஞ்சகமாகவும் செல்கிறது.

ஆனால் சித்தர்களின் ஆற்றலையும் சித்து விளையாட்டுகளையும் ஆழ்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இல்லாது, மிகவும் மேலோட்டமாக சொல்லிச் செல்கிறது. பெருவாரியான இடங்களில் தத்துவார்த்த விளக்கங்களும் இடம்பெற்று, படிக்கும்போதே நம்மை சிந்தனையில் ஆழ்த்திவிடுகிறது.

சித்தர் பெருமக்களை கதைமாந்தர்களாகக் கொண்டு, அவர்கள் குறித்து அறிமுகம் ஏற்படும் வகையில் எழுதப்பட்ட சுவாரசியமான புனைவு. மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்த கதைபோக்கு கொண்ட இந்நாவலை மதபேதங்கள் பார்க்காமல் வாசிக்கலாம். ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் ஆன்மிகத் தகவல்களும், முடிவில் வாசகர்களின் கேள்வி-பதிலும் இடம்பெற்றுள்ளன.

user_14889

★ 4/5 Feb 02, 2026

இந்த நாவலை நான்கு வருடங்களுக்கு முன் நள்ளிரவில் படித்தேன்! அருமையான வேகமான நாவல்! படிக்கும்போது சில பகுதிகளில் வியர்க்க ஆரம்பித்தது. ஒரு விதமான பயம் என்னைப் பிடித்துக்கொண்டது! அன்று இரவு தூக்கமே வரவில்லை!

த்ரில்லர் நாவல்களை விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்!

user_14888

★ 4/5 Feb 02, 2026

மிகப்பெரிய பரப்பளவை கொண்ட பூமியிலே ஏதோ ஓர் இடம் மையப்புள்ளியாக அமைந்து நடக்கும் செயல் அனைத்திற்கும் பின்புலமாக இருந்து நல்ல வகைகளாகத் தொடர்ந்து நடைபெற துணைபுரியும். அந்த சூட்சுமத்தை அறிய அனைவராலும் முடியாது. மெய்ஞானிகள் ஏற்கனவே உணர்ந்து கண்டுபிடித்ததைத் தான் விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டுகொண்டு பாமர மக்களுக்கும் பயன்படும் வகையில் பரப்புகின்றனர்.

இயற்கைகள் இம்மி அளவு மீறாமல் சித்தர்களின் முயற்சியால் காக்கப்படும் கிராமம் பூமிகாத்தான் பட்டி. கொலை குற்றம் மற்றும் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று குற்றச்சாட்டப்பட்ட ராமண்ணாவிற்குத் தூக்கு உறுதியாகி, அதை நிறைவேற்றும் முன்னால் சிறையில் தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். அவர் வணங்கும் சித்தரால் பல மாய வித்தைகள் மூலம் உயிர்தெழுந்து அவரும் சித்தராகிறார்.

பூமிகாத்தான் பட்டியில் சுகர் மில் கட்ட வரும் அர்ஜுனுக்கு அந்த ஊரில் இருக்கும் கட்டுப்பாடுகள் வியப்பளிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்பதால் எதுவும் நம்பாமல் இருப்பவன், அங்கே பார்த்த ரஞ்சனிக்காக ஊர் மக்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறான்.

துரோகங்கள், ஜோசியம், நம்பிக்கை, காரணக் காரியங்கள் அனைத்தும் இறுதியில் ஒரு சேர புள்ளியில் வந்தடைகிறது. நிறையக் கதாபாத்திரங்கள் தனித்தனியே தொடங்கி அவர்கள் வாழ்வின் நிகழ்வோடு பூமிகாத்தான் பட்டியில் முடிகிறது. அந்தச் சின்னக் கிராமத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம், அனைத்து சித்தர்களும் ஒன்றுகூடி அங்கே காவல் காக்கும் காரணம் எது என்பது தான் கதையின் மையம்.

இரகசியம் என்பது எதுவுமே இல்லை — ஆராய்ந்து பார்த்தால் மிச்ச மீதி ஒட்டிக் கொண்டிருப்பதிலிருந்து விடுபடவே ஏற்பட்ட செயலாகும். எந்த ஒரு செயலை செய்வதானாலும் தன்னிலையில் இருந்து இறங்கினால் முடிவு இழிவே.