Reviews for இந்து தேசியம் [Hindu Desiyam]

14 reviews total

user_14867

★ 5/5 Feb 02, 2026
தொ.ப. பரமசிவன் எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இது. சில தகவல்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்றாலும், வலதுபுற திரும்பல் இந்துடுவாதைக்கு எதிராகப் போராட இது மிகச்சிறந்த வாசிப்பாகும்.

user_14866

★ 5/5 Feb 02, 2026
மதமும், கோவில்களும், அதிகாரமும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன பண்ணிருக்காங்கனு ஒரு முன்னோட்டம் தந்த மாதிரி இருக்கு. தொ.ப சொல்லுகிறமாதிரி 'நாம் தொடுத்த போர் இன்னும் முடியவில்லை', இதுல நாம எங்க நிக்கனும்னு புரிஞ்சுக்க வைக்கிற ஒரு புத்தகமா இருக்கு. நான் யாரு..., எப்படி..., எந்த அரசியல் எனக்கு படிப்பை என் கிட்ட வராம நான் முன்னேறாம பாத்துக்கிச்சு..., எது எனக்கு எல்லாம் கிடைக்க காரணமா இருந்துது..., இது எல்லாம் இங்க பொறந்த ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்க உதவும்.

user_14865

★ 5/5 Feb 02, 2026
இப்புத்தகம் ஐந்து குறுநூல்களின் தொகுப்பு — முறையே 'நான் இந்துவல்ல', 'சங்கர மடம்', 'இந்து தேசியம்', 'இதுதான் பார்ப்பனியம்' மற்றும் 'புனா ஒப்பந்தம்'. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதவாதம், ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்தி எழுப்பப்படும் கருத்துக்களால், வேற்றுமையில் ஒற்றுமை முற்றிலும் அழிந்து, அரசும் அரசாங்கமும் மெல்ல மதவாதிகளின் கைகளுக்குள் சிறைபட்டு நிற்கிறது. 'இந்து' என்ற சொல்லின் பிறப்பிடம், பொருள் பற்றி பாரசீகம், துருக்கி, காகாசிரியர் மொழிகளின் அகராதியில் வழிப்பறிக்காரன், அடிமை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறியும் போது வியப்பாகவுள்ளது. சங்கர மடத்தின் (காஞ்சி மடம்) நடைமுறைகள், அதன் அரசியல் தலையீடுகள், வேதங்கள் வழியாக சமஸ்கிருதம், பார்ப்பானியத்தின் வளர்ச்சி, பிறப்பினால் உயர்வு, தாழ்வை ஏற்படுத்தி, மடங்கள் வாயிலாக ஆன்மீக அரசியல், ஊழல்கள் பற்றிய கருத்தகளைத் தெரிந்துகொள்ள முதல்படியாக அமைகிறது. சுயமரியாதை உணர்வு கொண்டு சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் முதற்படியாகவும், பாடநூலாகவும் அமையும். தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.

user_14864

Feb 02, 2026
ஹிந்து மத போர்வையில் தமிழை/திராவிடத்தை நசுக்கியதே பார்ப்பனியத்தின் வெற்றியாக இருந்து வருகிறது. இன்று தமிழை/திராவிட கலைகளை தனதாக்கிக்கொண்டு சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியம் தான் 1940-களில் வடமொழி திணிப்பை மிக தீவிரமாக செய்து கொண்டிருந்தது. தற்போது தமிழை சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியம்தான் அன்று வேத மொழியை புனிதமானதாகவும் தமிழை தீட்டுக்குரிய மொழியாகவும் கருதியது. அன்று பெரியாரும் பின்னர் அண்ணாவும் மக்கள் மத்தியில் தமிழ் கிளர்ச்சியை உருவாக்கி வடமொழி திணிப்பை முடியாத காரியம் ஆக்கிவிட்டார்கள். பார்ப்பனியத்தை காக்கும் சாதியத்தை தாண்டி பார்ப்பனியத்துக்கு விரல் நீட்டி சொல்லும் அளவுக்கு தனி தத்துவம் ஒன்று இருக்குமானால் அது இந்தியா என்னும் நிலப்பரப்பில்/துணைக் கண்டத்தில் இருக்கும் பிற மொழிகளை/நாகரீகங்களை/தத்துவங்களை ஒன்று அடிமையாக்க வேண்டும் இல்லையெனில் அழிக்க வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். எனவே தமிழை அழிக்க முடியாத பார்ப்பனியம் அதை ஆக்கிரமித்து அடிமையாக்கி கொண்டிருக்கிறது.

user_14863

★ 5/5 Feb 02, 2026
இந்து தேசியம் என்ற இப்புத்தகம் ஐந்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 'இந்து' என்ற சொல் எப்படிப் பிறந்தது? அரசியல் சட்டத்தில் இந்த வார்த்தைக்கு உள்ள விளக்கம் என்ன? பிராமணர்களில் உள்ள பிரிவினர்கள்? ஆகமம் என்றால் என்ன? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்துகொள்ள நான் இந்துவல்ல நீங்கள்...? என்ற முதல் கட்டுரையை வாசியுங்கள். சங்கர மடம், மடம் பற்றிய பொதுத்தன்மை, அவர்களுடைய சொத்து மதிப்பு மற்றும் கடைபிடிக்கும் கீழான கொள்கைகள் பலவற்றையும் வாசித்து தெரிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனியம் என்ற கருத்தாக்கம், கல்வி, கோயில், அரசாங்கம், பத்திரிக்கை, வானொலி, கலைத்துறை எனப் பல்வேறு நிறுவனங்களில் குறைந்த விழுக்காடு அளவேயுள்ள பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தை நிலை படுத்திய விதம், குலக்கல்வி முறை எதிர்ப்பு, கோயில் நுழைவுச் சட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் கட்சி, நீதிக்கட்சி, பெரியார், ராஜாஜி மற்றும் பிற தலைவர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. காந்தியைப் பற்றிய உயர்வான கருத்துக்கள் இருந்தால் புனா ஒப்பந்தம் என்ற 5-ஆவது கட்டுரையை வாசிக்கும்போது அந்தக் கருத்துக்கள் சற்று உடைவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. கொளத்தூர் தா.செ. மணி அவர்கள் எழுதிய அணிந்துரையில் நிறைய செய்திகள் உள்ளன. தொ.ப-வின் இப்புத்தகம் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

user_14862

★ 2/5 Feb 02, 2026
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு சூட்டப்பட்டது என்று கூறி, அதை பாரத் என்று மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம் என்று தன் தேசபக்தியை நிறுவ முயலும் அரசியல் நாடகங்களுக்கு இடையில், 'இந்து' என்ற பெயரும் வெளிநாட்டவர்கள் வைத்தது என்று தெரிந்தால் என்ன செய்வார்கள்? கிறிஸ்தவரல்லாத, இசுலாமியரல்லாத மக்களை ஐரோப்பியர்கள் அழைக்க பயன்படுத்திய சொல்லே 'இந்து' என்பதாகும். ஆனால் அந்த சொல்லையும் அதிலிருந்து பிறந்த 'இந்துத்வா' போன்றவைகளையும் வைத்து தான் நம் நாட்டில் அரசியல் நடக்கிறது. சாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு கல்வி, அதிகாரம் எல்லாவற்றையும் தன் கைக்குள் வைத்துக் காலனிய அரசின் காலத்தில் ஆங்கிலக் கல்வி என்று தனக்கான ஒரு வட்டத்தை வரைந்து கொண்ட பார்ப்பனர்கள் இந்திய தேசியத்திற்குள் தன் கைகளை நீட்டிய போதெல்லாம் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்திய தேசியத்தின் வெவ்வேறு காலகட்ட வளர்ச்சியையும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளையும், பூசல்களையும், அதில் இருந்த தலைவர்கள் குறித்தும் இந்த சிறிய புத்தகம் விரிவாக விளக்குகிறது. இதில் அரசியல் குறித்த தகவல்களால் நிறைந்திருப்பதால் எனக்கு அவ்வளாக பிடிக்கவில்லை. வழக்கமாக நான் விரும்பும் தொ.ப புத்தக வாசிப்பாக இல்லாமல் இது வேறு விதமாக இருந்தது.

user_14861

★ 5/5 Feb 02, 2026
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், அரிஜன், செடியூல்டு என்று பிறராலும் சட்டத்தாலும் இடப்பட்ட பெயர்கள் வலுவிழந்து போய்க்கொண்டிருக்கின்றன. 'தலித்' (மண் சார்ந்தவர்) என்று ஒடுக்கப்பட்டோர் தங்கள் பெயரைத் தாங்களே இட்டுக்கொண்டுள்ளனர். ஒரு சாதி என்பது ஒரு திருமண உள்வட்டமாகும். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் 'இந்து' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லே கிடையாது. 'இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல்' என்பதுதான். 'இந்து' என்று வெள்ளைக்காரன் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும்தான். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் அறத்தினைப் பார்ப்பனியம் ஒருபோதும் ஏற்க இயலாது. தமிழ் மக்கள் தொகையில் பார்ப்பனர் 3% உள்ளனர். பெரியார் ஒருவரே!

user_14860

★ 5/5 Feb 02, 2026
எங்கிருந்தோ வந்த ஒரு இனம் நமக்கு சொந்தமான எல்லாத் தயும் எடுத்துட்டாங்க, நம்மோட வழக்கங்கள ஒன்னு அழிக்கப்படுது இல்லனா அவங்களுக்கு வேணும்ன்ற மாதிரி மாற்றப்படுது. அவங்களோட ஒரே குறிக்கோள் நாம எல்லாரும் அவனுகளுக்கு கீழதான்னு எப்பவும் சொல்லிட்டே இருக்கானுக. இப்பவும் நாம கேள்வி கேக்கலனா எப்பவுமே அவனுகளுக்கு ஏதோ ஒரு வகைல அடிமையாக இருக்க வேண்டி வரும். நம்ம வரலாறு இந்து என்ற பொது வட்டத்துக்குள்ள இல்ல. சைவம், வைணவம், சமணம் இத பத்தி இன்னும் படிக்க தூண்டுது. நாம இளைய தலைமுறையவும், குழந்தைகளயும் பள்ளிப்படிப்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள ஆரம்பத்துலயே சொல்லிகுடுக்குறது நல்லது.

user_14859

★ 4/5 Feb 02, 2026
ஐயா பரமசிவன் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை தோலுரித்து காண்பித்திருக்கிறார். பலரும் அறியாத வரலாற்று அம்சங்களை இந்தப் புத்தகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

user_14858

★ 4/5 Feb 02, 2026
பலவிதமான மதங்களையும், மொழிகளையும் கொண்டு பன்முகத்தன்மை வாய்ந்த நம் நாட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், அவர்கள் பேணும் மதத்தையும், அவர்கள் பேசும் மொழியையும் வைத்துக் குறிப்பிடுவதே இந்து தேசியம் என்ற கருத்தியல். சமத்துவத்திற்கு எதிரான இக்கருத்தியலை நாட்டுப்பற்று என்றும், தேசபக்தி என்றும் தமிழர்களை எப்படி நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நெற்றிப் பொட்டில் அடித்தவாறு இப்புத்தகத்தின் முன்னுரையிலேயே உணர்த்தி இருக்கிறார் ஐயா தொ.ப. பரமசிவன். இந்து தேசியம் எனும் இச்சிறிய நூல் இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு மற்றும் இந்திய தேசியமும் திராவிட தேசியமும் உறவுகளும் முரண்களும் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1850இல் தோன்றிய மெட்ராஸ் மகா ஜன சபாவானது தமிழ்நாட்டில் முளைத்த முதல் இந்தியத் தேசிய அமைப்பாகும். அந்த அமைப்பானது காலனிய ஆட்சி 1884இல் சென்னையில் காலூன்றுவதற்கு எப்படி உதவி செய்தது என்பதை வாசிக்க நேர்ந்தது. 1881இல் பிரம்மஞான சபையை உருவாக்கிய ஆங்கிலேயர் கர்னல் ஆல்காட் ஒரு கூட்டத்தில் மலை மீது கட்டப்பட்ட கோட்டை போல இந்திய நாகரீகம் என்பது வேதங்களின் மீதும் புனித நூல்களின் மீதும் கால் கொண்டு நிற்கின்றது என்ற கருத்தொன்றை முன்வைக்கிறார். அச்சமயத்தில் தான் ஆரியன் என்ற கருத்தாக்கமும் இந்து என்ற கருத்தாக்கமும் இந்திய தேசியத்திற்குள் புகுந்து கொண்டன. பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு மற்ற மதங்களை நிராகரிக்கும் கருத்தியலான இந்திய தேசியத்திற்கு எதிர்ப்புகள் தமிழ்நாட்டிலிருந்து பெரியார், அயோத்திதாச பண்டிதர், மறைமலை அடிகள் போன்ற திராவிட இயக்கத் தாரர்களால் வெகுண்டெழுந்ததை நாம் தெரிந்து கொள்ள இயலும். திராவிட தேசியம் தமிழ்த் தேசியம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் அரசியல் வரலாறு மீது ஆர்வம் உள்ளோரும், இக்கால அரசியலைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் வாசிக்க வேண்டிய ஓர் அடிப்படையான புத்தகம் இது.