Collection of five essays written by Tho. Paramasivan. Although it has some repetitive information, it's still a still good read against right wing Hindutva ideology.
மதமும், கோவில்களும் , அதிகாரமும் , அரசியல் கட்சிகளும் , தலைவர்களும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன பண்ணிருக்காங்கனு ஒரு முன்னோட்டம் தந்த மாதிரி இருக்கு
தொ ப சொல்லுகிறமாதிரி "நாம் தொடுத்த போர் இன்னும் முடியவில்லை" , இதுல நாம எங்க நிக்கனும்னு புரிஞ்சுக்க வைக்கிற ஒரு புத்தகமா இருக்கு.
நான் யாரு... எப்படி.. எந்த அரசியல் எனக்கு படிப்பை என் கிட்ட வராம நான் முன்னேறாம பாத்துக்கிச்சு... எது எனக்கு எல்லாம் கிடைக்க காரணமா இருந்துது...
இது எல்லாம் இங்க பொறந்த ஒவொருத்தரும் தெரிஞ்சுக்க உதவும் .
இப்புத்தகம் ஐந்து குறுநூல்களின் தொகுப்பு, அவை முறையே - நான் இந்துவல்ல, சங்கர மடம், இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம் மற்றும் புனா ஒப்பந்தம்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதவாதம், ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்தி எழுப்பப்படும் கருத்துக்களால், வேற்றுமையில் ஒற்றுமை முற்றிலும் அழிந்து, அரசும் அரசாங்கமும் மெல்ல மெல்ல மதவாதிகளின் கைகளுக்குள் சிறைபட்டு நிற்கிறது. மதவாதக் கொள்கைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக அதிகார மையங்களின் சிந்தாந்தங்களாக மாறி, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்துவருகிறது.
இந்து என்ற சொல்லின் பிறப்பிடம், பொருள் பற்றி பாரசீகம், துருக்கி, காகாசிரியர் மொழிகளின் அகராதியில் வழிப்பறிக்காரன், அடிமை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை அறியும் போது வியப்பாகவுள்ளது. அதுவே பல மொழி ஆய்வாளர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது.
சங்கர மடத்தின் (காஞ்சி மடம்) நடைமுறைகள், அதன் அரசியல் தலையீடுகள், சிக்கல்களைப் பற்றி அடுத்த பகுதியில் அறிந்துகொள்ள முடிகிறது. வேதங்கள் வழியாக சமஸ்கிருதம், பார்ப்பானியத்தின் வளர்ச்சி, தனக்கென்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி, பிறப்பினால் உயர்வு, தாழ்வை ஏற்படுத்தி, மடங்கள் வாயிலாக ஆன்மீக அரசியல், ஊழல்கள் பற்றிய கருத்தகளைத் தெரிந்துகொள்ள முதல்படியாக அமைகிறது.
இந்திய தேசியம், திராவிட தேசியம் பற்றிய கருத்துகளும், அவற்றின் முரண்களையும், பார்ப்பானியத்திற்கு எதிரான பெரியார், திராவிடக் கருத்துகளை ஆழமாக அறிந்துகொள்ள முடிந்தது. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னுமான பார்ப்பானிய பத்திரிக்கைகளின் வளர்ச்சி, வருவாய்த் துறை, கல்வித்துறை, நீதித்துறைகளில் அவர்களின் மேலாதிக்கம் மெல்ல மெல்ல வசமாகிவிட்டதன் பின்புலத்தையும், அதன் நுட்பங்களை அறிய முடிகிறது. தேசிய அரசியலில், இந்து தேசியமும், ஆரிய மாயையும் கலந்து ஆன்மிக சாயம் பூசி வேற்றுமையை இம்மண்ணில் விதைத்து வருகிறது.
சுயமரியாதை உணர்வு கொண்டு சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் முதற்படியாகவும், பாடநூலாகவும் அமையும். புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியின் முடிவில் அடிக்குறிப்புகளும், படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.
ஹிந்து மத போர்வையில் தமிழை/திராவிடத்தை நசுக்கியதே பார்ப்பனியத்தின் வெற்றியாக இருந்து வருகிறது. இன்று தமிழை/திராவிட கலைகளை தனதாக்கிக்கொண்டு சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியம் தான் 1940 - களில் வடமொழி திணிப்பை மிக தீவிரமாக செய்து கொண்டிருந்தது, தற்போது தமிழை சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியம்தான் அன்று வேத மொழியை புனிதமானதாகவும் தமிழை தீட்டுக்குரிய மொழியாகவும் கருதியது, அன்று பெரியாரும் பின்னர் அண்ணாவும் மக்கள் மத்தியில் தமிழ் கிளர்ச்சியை உருவாக்கி வடமொழி திணிப்பை முடியாத காரியம் ஆக்கிவிட்டார்கள். பார்ப்பனியத்தை காக்கும் சாதியத்தை தாண்டி பார்ப்பனியத்துக்கு விரல் நீட்டி சொல்லும் அளவுக்கு தனி தத்துவம் ஒன்று இருக்குமானால் அது இந்தியா என்னும் நிலப்பறப்பில்/துணை கண்டத்தில் இருக்கும் பிற மொழிகளை/நாகரீகங்களை/தத்துவங்களை ஒன்று அடிமையாக்க வேண்டும் இல்லையெனில் அழிக்க வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும்.எனவே தமிழை அழிக்க முடியாத பார்ப்பனியம் அதை ஆக்கிரமித்து அடிமையாக்கி கொண்டிருக்கிறது.
‘இந்து’ தேசியம் என்ற இப்புத்தகம் ஐந்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்து என்ற சொல் எப்படிப் பிறந்தது? அரசியல் சட்டத்தில் இந்த வார்த்தைக்கு உள்ள விளக்கம் என்ன? பிராமணர்களில் உள்ள பிரிவினர்கள்? (முக��கியமாக ஸ்மார்த்தர்கள்) ஆகமம் என்றால் என்ன? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்துகொள்ள நான் இந்துவல்ல நீங்கள்…? என்ற முதல் கட்டுரையை வாசியுங்கள். (கிடாய் வெட்டி படையலிடும் கோயிலும், புளி சாதம் தான் மெயின் பிரசாதம் என்கிற கோயிலும் எப்படி இந்து என்ற ஒரே மதத்தின் கீழ் இருக்க முடியும் என்று யோசித்து இருக்கிறீர்களா?)
சங்கர மடம், மடம் பற்றிய பொதுத்தன்மை, அவர்களுடைய சொத்து மதிப்பு மற்றும் கடைபிடிக்கும் கீழான கொள்கைகள் பலவற்றையும் வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
பார்ப்பனியம் என்ற கருத்தாக்கம், கல்வி, கோயில், அரசாங்கம், பத்திரிக்கை, வானொலி, கலைத்துறை எனப் பல்வேறு நிறுவனங்களில் குறைந்த விழுக்காடு அளவேயுள்ள பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தை நிலை படுத்திய விதம், சேரன்மகாதேவியில் இருந்த பாகுபாடு பாராட்டிய குருகுலம், குலக்கல்வி முறை எதிர்ப்பு, கோயில் நுழைவுச் சட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் கட்சி, நீதிக்கட்சி, பெரியார், ராஜாஜி மற்றும் பிற தலைவர்கள்/ நபர்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
நாம் பள்ளியில் பாடப்புத்தகங்களில் உயர்வாய் படித்த சில தலைவர்கள் (எந்த விதத்தில் இவர்கள் தலைவர்கள் என்ற ஐயம் எனக்கு இப்போது தோன்றாமல் இல்லை), கலைஞர்கள், எழுத்தாளர்களின் மறுமுகங்களை இப்புத்தகத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். காந்தியைப் பற்றிய உயர்வான கருத்துக்கள் இருந்தால் புனா ஒப்பந்தம் – ஒரு சோகக் கதை என்ற 5 -ஆவது கட்டுரையை வாசிக்கும்போது அந்தக் கருத்துக்கள் சற்று உடைவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. வட்டமேசை மாநாடு எங்கே, எப்போது நடந்தது என்று மட்டுமே பள்ளியில் கற்றிருப்போம். ஆனால் அப்போது நடந்தது என்ன என்பதை இக்கட்டுரை பேசும். அம்பேத்காருடைய அறிக்கைகள் ஆங்காங்கே 3, 4 பத்திகளில் இருந்தன. அதைத் திரும்பத் திரும்ப வாசித்தேன். அவருடைய அறிவையும், தீர்க்கமான முடிவுகளையும் இதனைப் படிப்பதன் மூலமே மட்டும் கூடத் தெரிந்து கொள்ளலாம்.
கொளத்தூர் தா.செ. மணி அவர்கள் எழுதிய அணிந்துரையில் நிறைய செய்திகள் உள்ளன. எனவே அதையும் விட்டு விடாமல் வாசியுங்கள். தொ.ப -வின் இப்புத்தகம் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு சூட்டப்பட்டது என்று கூறி, அதை பாரத் என்று மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம் என்று தன் தேச பக்தியை நிறுவ முயலும் அரசியல் நாடகங்களுக்கு இடையில், “இந்து”என்ற பெயரும் வெளிநாட்டவர்கள் வைத்தது என்று தெரிந்தால் என்ன செய்வார்கள் ?
தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வார்களா?
இல்லை அதன் பெயரை மாற்றிக் கொள்வார்களா?
அந்த பெயர் இல்லாமல் அரசியல் செய்வது எப்படி?
அவர்களுக்கு இந்த வரலாற்று உண்மைகள் தெரியாதா?
இல்லை, தெரிந்தாலும் அந்த வார்த்தை இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் அது குறித்து பேசாமல் இருக்கிறார்களா?
என்ற எண்ணம் இந்த புத்தகம் வாசித்த போது எனக்கு சிரிப்பை வரவழைத்தது.
கிறிஸ்தவரல்லாத, இசுலாமியரல்லாத மக்களை ஐரோப்பியர்கள் அழைக்க பயன்படுத்திய சொல்லே ‘இந்து’ என்பதாகும். ஆனால் அந்த சொல்லையும் அதிலிருந்தனு பிறந்த ‘இந்துத்வா’ போன்றவைகளையும் வைத்து தான் நம் நாட்டில் அரசியல் நடக்கிறது.
சாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு கல்வி,அதிகாரம் எல்லாவற்றையும் தன் கைக்குள் வைத்துக் காலனிய அரசின் காலத்தில் ஆங்கிலக் கல்வி என்று தனக்கான ஒரு வட்டத்தை வரைந்து கொண்ட பார்ப்பனர்கள் இந்திய தேசியத்திற்குள் தன் கைகளை நீட்டிய போதெல்லாம் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அதன் காரணமாகவே தமிழின உணர்வு மேலோங்கிவிடாதபடி பார்ப்பனியம் காலந்தோறும் கவனமாக இருந்திருக்கிறது. எண்ணிக்கையில் குறைவானவர்கள் பிறரை ஆட்டி வைப்பது எவ்வாறு?
அதற்கான அடையாளமாகவே மதம், ஜாதி போன்ற அனைத்தும் என்ற புரிதல் சில காலமாக எனக்கு இருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரியன், தமிழன், திராவிடம் ,இந்து போன்ற சொற்களின் பயன்பாடுகள் பக்தி இலக்கியம், பாரதியின் கவிதைகளில் இடம்பெற்றது.
திராவிடம் என்பது ஒரு காலத்தில் தென் மாநிலங்கள் முழுவதுமாக குறிக்கும் சொல்லாகவே இருந்திருக்கிறது. பின்னர் மொழி வாரியாக நிலங்கள் பிரிக்கப்பட்ட போது ,மெல்ல அது தமிழ் நிலத்தை குறிப்பிடும் சொல்லாக மாறியிருக்கிறது.
இந்திய தேசியத்தின் வெவ்வேறு காலகட்ட வளர்ச்சியையும் அதற்கு எழுந்த எதிர்ப்புகளையும், பூசல்களையும், அதில் இருந்த தலைவர்கள் குறித்தும் இந்த சிறிய புத்தகம் விரிவாக விளக்குகிறது.
இதில் அரசியல் குறித்த தகவல்களால் நிறைந்திருப்பதாலோ என்னவோ எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
வழக்கமாக நான் விரும்பும் தொ.ப புத்தக வாசிப்பாக இல்லாமல் இது வேறு விதமாக இருந்தது.
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், அரிஜன், செடியூல்டு என்று பிறராலும் சட்டத்தாலும் இடப்பட்ட பெயர்கள் வலுவிழந்து போய்க்கொண்டிருக்கின்றன. 'தலித்' (மண் சார்ந்தவர். மண்ணோடு சார்ந்தவர். மண்ணின் மக்கள்) என்று ஒடுக்கப் பட்டோர் தங்கள் பெயரைத் தாங்களே இட்டுக்கொண்டுள்ளனர்.
ஒரு சாதி என்பது ஒரு திருமண உள்வட்டமாகும் ( Endogamous group ). அதாவது ஒருவன் திருமணம் செய்யக் கூடிய எல்லையே அவனுடைய சாதியின் எல்லையாகும்.
இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் 'இந்து' என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது. 'இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல்' என்பதுதான்.
'இந்து' என்று வெள்ளைக்காரன் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள் மட்டும்தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக் காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே "வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம்" என்று சொல்கிறார்.
'இந்து' என்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தைப் பெற்ற சொல்தான். அது ஒரு 'சமயச் சார்புடைய' (religious utterance) சொல் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்படக் கூடிய 'இந்து' என்ற சொல்லுக்கு நேரிடையான வரைவிலக்கணம் (Positive definition) கிடையாது. 'கிறிஸ்துவரல்லாத, இசுலாமியரல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள்' என்று எதிர்மறையான வரைவிலக்கணம்தான் உண்டு.
சைவத்திலே நந்தனார் சோதியாகத் தான் சிதம்பரம் கோயிலுக்குள்ளே போக முடிந்தது. வைணவத்திலே திருப்பாணாழ்வாரை தோளிலே தூக்கிக் கொண்டு ஒருவர் திருவரங்கம் கோயிலுக்குள்ளே செல்கிறார்.
பெரும்பாலான மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறையாகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் அறத்தினைப் பார்ப்பனியம் ஒருபோதும் ஏற்க இயலாது. பிறப்பினால் பார்ப்பனர் ஆனவர்கள் இன்னனும் தங்களை ஆகமேல்சாதி என்றே உணர்கின்றனர். நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் மறுபக்கமானது மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதாகும். நாடு விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகாலமான பின்னரும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இந்த உணர்வினை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.
தமிழ் மக்கள் தொகையில் பார்ப்பனர் 3% உள்ளனர்.
அறிஞர்கள் தமிழ்நாட்டு மக்களைச் சாதி வாரியாகப் பகுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஒன்றரை நூற்றாண்டுக் காலமாகிறது. இருப்பினும் பெருமளவு கல்வி வசதி பெற்ற பார்ப்பனச் சாதியாரைப் பற்றிய ஆய்வு நூல்கள் ஒன்று கூட இல்லை.
தமிழர்களின் கலாச்சாரத் சொத்தைப் பிடுங்கிக்கொண்டு அது பரம்பரையாகத் தங்களுடையதே என்று சாதிக்கும் மேல்சாதி ஏமாற்று வேலை இது. சேர, சோழ, பாண்டிய, விசயநகர அரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடினாள்? ஏன் இன்னும் திராவிடர் இசை நாகரிகத்தைக் காட்டும் பெருவங்கியமும் (நாதசுரமும்) தவிலும் வாசிக்கப் பார்ப்பனர்கள் முன் வருவதில்லை? இசை வேளாளர் வகுப்புச் சகோதரிகள் ஆடிவந்த சதிர் என்னும் தமிழர் நடனத்தைக் காலனிய ஆட்சி வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பனப் பெண் மேடையேறி ஆடத் தொடங்கினாள். அதற்கு பரதநாட்டியம் என்று பெயர் சூட்டப் பெற்றது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழுகிற தமிழன் கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு என்றும் காலங்காலமாக அவற்றை அவர்களே வளர்த்தனர் என்றும் நம்புகிறான். இந்த ஏமாளித்தனத்தைப் எப்படி மாற்றுவது?
நீதிக்கட்சி அரசில் டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள் கொண்டு வந்த தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை எதிர்த்து சத்தியமூர்த்தி ஐயர் 'இனிமேல் இறைவனுக்குத் தேவதாசித் தொண்டு செய்வது யார்? என்று கேட்க அதற்கு முத்துலெட்சுமி, ஏன் இனிமேல் உங்கள் இனப்பெண்கள் இத்தொண்டைத் செய்யட்டுமே' என்றார், அதன் பிறகும் சத்தியமூர்த்தி ஐயர் ‘நான் சட்டத்தை மீறி சென்றாலும் செல்வனே தவிரச் சாத்திரத்தை மீறி நரகத்திற்குப் போக மாட்டேன்’ என்று பேசினார்.
பெரியார் ஒருவரே!
பார்ப்பனர்கள் மட்டுமல்ல, ஜெயகாந்தன், வலம்புரி ஜான் போன்ற எழுத்தாளர்கள் கூட சங்கராச்சாரியாரைப் பற்றி எழுதியே தீரவேண்டும். பகுத்தறிவுப் பரம்பரையில் வந்த குங்குமம் போன்ற இதழ்கள் கூட இந்த சாமியாரின் படத்தைப் போட்டே ஆக வேண்டும். இந்த உண்மையான அதிகார மையத்தின் பெருமையினை கலைமகள், ஆனந்த விகடன், குமுதம், ஜூனியர் விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து ஆகிய பத்திரிகைகளும் தொடர்ந்து பரப்பி வரும். ஆனால் அதை மறைமுகமாகச் செய்யும். ஒட்டுமொத்த விளைவாகப் பார்ப்பனர் வாசனையே படாத குக்கிராமத்தின் கருப்புசாமி கோவில் திருவிழாப் பத்திரிக்கைகூட 'காஞ்சி ஜகத்குரு அருளாணைப்படி' என்று தான் அச்சடிக்கப்படுகிறது.
எங்கிருந்தோ வந்த ஒரு இனம் நமக்கு சொந்தமான எல்லாத்தயும் எடுத்துட்டாங்க, நம்மோட வழக்கங்கள ஒன்னு அழிக்கப்படுது இல்லனா அவங்களுக்கு வேணும்ன்ற மாதிரி மாற்றப்படுது,
அவங்களோட ஒரே குறிக்கோள் நாம எல்லாரும் அவனுகளுக்கு கீழதான்னு எப்பவும் சொல்லிட்டே இருக்கானுக,
இப்பவும் நாம கேள்வி கேக்கலனா எப்பவுமே அவனுகளுக்கு ஏதோ ஒரு வகைல அடிமையாக இருக்க வேண்டி வரும்...
நம்ம வரலாறு இந்து என்ற பொது வட்டத்துக்குள்ள இல்ல. என்னதான் நாம எல்லாம் ஒன்னுன்னு சொன்னாலும் அப்டி இல்லன்றது அடிக்கடி குத்தி காட்டுவானுக...
சைவம், வைணவம், சமணம், இத பத்தி இன்னும் படிக்க தூண்டுது.
நாம இளைய தலைமுறையவும், குழந்தைகளயும் பள்ளிபடிப்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள ஆரம்பத்துலயே சொல்லிகுடுக்குறது நல்லது, நான் இப்ப இந்த புத்தக்த் படிச்சதுக்கு பதிலா 10ஆண்டு முன்னாடி படிச்சிருந்தா வாழ்கை பயணம் வேற ஒன்னா இருந்திருக்கும்...
ஐயா பரமசிவன் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை தோலுரித்து காண்பித்திருக்கிறார்.
பலவிதமான மதங்களையும், மொழிகளையும் கொண்டு பன்முகத்தன்மை வாய்ந்த நம் நாட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அவர்கள் பேணும் மதத்தையும், அவர்கள் பேசும் மொழியையும் வைத்துக் குறிப்பிடுவதே இந்து தேசியம் என்ற கருத்தியல்.
சமத்துவத்திற்கு எதிரான இக்கருத்தியலை நாட்டுப்பற்று என்றும், தேசபக்தி என்றும் தமிழர்களை எப்படி நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நெற்றிப் பொட்டில் அடித்தவாறு இப்புத்தகத்தின் முன்னுரையிலேயே உணர்த்தி இருக்கிறார் ஐயா தொ.ப. பரமசிவன்
இந்து தேசியம் எனும் இச்சிறிய நூல் இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு மற்றும் இந்திய தேசியமும் திராவிட தேசியமும் உறவுகளும் முரண்களும் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
சர். வில்லியம் ஜோன்ஸ் எனும் ஐரோப்பியர் உள்நாட்டு வங்காளத்தில் உள்ள நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் 'Hindu law' எனும் என்ற சட்டத்தை இயற்றியிருக்கிறார். அச்சமயத்தில் கிறித்தவரல்லாத இஸ்லாமியரல்லாத மக்களைக் குறிக்க இந்து எனும் சொல் பயன்பாட்டிற்கு வந்து முதன்முதலாக அதிகார அங்கீகாரமும் அச்சொல்லிற்குக் கிடைத்திருப்பதை நாம் அறிய முடிகிறது.
1850இல் தோன்றிய 'மெட்ராஸ் மகா ஜன சபா'வானது தமிழ்நாட்டில் முளைத்த முதல் இந்தியத் தேசிய அமைப்பாகும். அந்த அமைப்பானது காலனிய ஆட்சி 1884இல் சென்னையில் காலூன்றுவதற்கு எப்படி உதவி செய்தது என்பதை வாசிக்க நேர்ந்தது.
1881இல் பிரம்மஞான சபையை உருவாக்கிய ஆங்கிலேயர் கர்னல் ஆல்காட் ஒரு கூட்டத்தில் "மலை மீது கட்டப்பட்ட கோட்டை போல இந்திய நாகரீகம் என்பது வேதங்களின் மீதும் புனித நூல்களின் மீதும் கால் கொண்டு நிற்கின்றது" என்ற கருத்தொன்றை முன்வைக்கிறார். அச்சமயத்தில் தான் ஆரியன் என்ற கருத்தாக்கமும் இந்து என்ற கருத்தாக்கமும் இந்திய தேசியத்திற்குள் புகுந்து கொண்டன. இதற்கு நம் தலைவர்களான காந்தியடிகள், திலகர், ரானடே, பண்டித மன்மோகன் மாலவியா, அன்னி பேசன்ட்ஸ் சென்ட் ஆகியோர் இக்கருத்தாக்கங்களை ஆதரித்து பேசியதே பெரியாரை தேசிய இயக்கத்திலிருந்து விடுவித்தது.
பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு மற்ற மதங்களை நிராகரிக்கும் கருத்தியலான இந்திய தேசியத்திற்கு எதிர்ப்புகள் தமிழ்நாட்டிலிருந்து பெரியார் அயோத்திதாச பண்டிதர் மறைமலை அடிகள் போன்ற திராவிட இயக்கத் தாரர்களால் வெகுண்டெழுந்ததை நாம் தெரிந்து கொள்ள இயலும் இப்புத்தகத்தின் வாயிலாக.
இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் 'ஆரியன்' 'திராவிடம்' போன்ற சொற்களுக்கு உண்மையான அர்த்தமும். ஆரியன்× தமிழன், ஆரியம்× திராவிடம், இந்து× தமிழர் போன்ற எதிர்நிலைச் சொற்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களால் எப்படி அறியப்பட்டது என்பதையும் நாம் அறியலாம்.
திராவிட தேசியம் தமிழ்த் தேசியம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய தேசியம் , திராவிட தேசியம், தமிழ்த் தேசியம், என்று ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துகளை மக்களிடம் சென்றடையச்செய்வதற்குப் பத்திரிக்கை ஊடகங்களும், அக்காலத்தில் வெளிவந்த அரசியல் சார்ந்த இதழ்களும் செய்த முயற்சிகளை வாசிக்க முடிந்தது.
நம் நாட்டின் அரசியல் வரலாறு மீது ஆர்வம் உள்ளோரும், இக்கால அரசியலைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் வாசிக்க வேண்டிய ஓர் அடிப்படையான புத்தகம் 'இந்து தேசியம்'.
Read and reread this book to understand the 20th century Tamilnadu politics. The form of the fight has changed, but the fight still has to go on.
தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
One more re-read of the year. And I have re-read all works of Ayyan Tho.Pa this year to augment my knowledge/understanding of Anthropology, Tamil History. This is an essential toolkit to combat right-wing Hindutva ideology.
இரண்டாயிரம் ஆண்டு வரலாற்று பின்புலம் கொண்ட தமிழ் அடையாளங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்துள்ளது. தற்போது ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேசியம் என்று நிறுவ முயற்சிக்கும் ஒரு அசாதாரண சூழலில், தொ.ப வை படித்தல் மிக அவசியம். கட்டுக்கதைகளை மீறி, நம் பண்பாடு என்ன என்று அறிந்துக்கொள்ள உதவும்.