Reviews for சாமிகளின் பிறப்பும் இறப்பும்
20 reviews total
user_14765
★ 3/5 Feb 02, 202625 வயதிலேயே மனதை உலுக்கும் கதைகள் — குழந்தைகளுக்கு கட்டாயம் பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் பெரியவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.
user_14764
★ 4/5 Feb 02, 2026பள்ளிகளில் கட்டாயமாகப் படிக்க வைக்க வேண்டிய நூல். குழந்தைகளின் சிந்தனையை விரிவுபடுத்தும் திறன் கொண்டது.
user_14763
★ 5/5 Feb 02, 2026தமிழ் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தால், நாத்திகர் என்றால் — யோசிக்காமல் இதைப் படியுங்கள். கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.
user_14762
★ 5/5 Feb 02, 2026விரைவாகப் படித்து முடிக்கக்கூடிய அருமையான நூல். எளிமையான நடை மிகவும் பிடித்திருந்தது.
user_14761
★ 4/5 Feb 02, 202613-வது அத்தியாயம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அந்த அத்தியாயம் மட்டுமே இந்நூலைப் படிக்க வேண்டிய காரணம் தரும்.
user_14760
★ 5/5 Feb 02, 2026கிராம தெய்வங்களின் பின்னணிக் கதைகள் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளன. படிக்க ஆர்வமூட்டும் நூல்.
user_14759
★ 4/5 Feb 02, 2026தமிழ்நாட்டின் இந்து மத நம்பிக்கைகளை எளிமையாக விளக்கும் நூல். நாட்டார் தெய்வங்களின் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள உதவுகிறது.
user_14758
★ 5/5 Feb 02, 202650-60 வருஷங்களுக்கு முன் இங்கே வாழ்ந்து இறந்து போன, தற்கொலை செய்துகொண்ட அல்லது கொலை செய்யப்பட்ட சாதாரண மனிதர்கள் தான் இந்த சிறு தெய்வங்களாகவும் நாட்டார் தெய்வங்களாகவும் இருக்கிறார்கள்.
சிறு தெய்வங்களை மறக்க வைக்க சின்ன கோட்டுக்குப் பக்கத்தில் போட்ட பெரிய கோடு தான் பணக்கார தெய்வங்கள். குழந்தைகளுக்கும் கூட புரியும்படி விளக்கம் உள்ள ஒரு கட்டுரைத் தொகுப்பு. கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
user_14757
★ 3/5 Feb 02, 2026சாமிகள் எதற்காக உருவானது, நாட்டார் தெய்வத்துக்கும் சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன, சாமிகளுக்குள் உள்ள சாதிப் பாகுபாடு, ஏன் நாட்டார் தெய்வங்களை செல்வந்தர்கள் வணங்குவதில்லை — போன்ற பல கேள்விகளை இப்புத்தகம் எழுப்புகிறது.
சாதி, மதம், கடவுள் போன்றவற்றை உருவாக்கியதன் மூலம் நடக்கும் விளைவுகளை தற்போது நாம் பார்க்க முடிகிறது. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்து முடிக்கும் எவரும் கடவுள் ஏன், எதற்கு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
user_14756
★ 5/5 Feb 02, 2026கடவுளின் இருப்பைப் பற்றிய கேள்வியோடு இந்த சிறிய நூல் தொடங்குகிறது. தெய்வங்களை ஆசிரியர் இரு வகையாகப் பிரிக்கிறார் — ஏழைகள் வழிபடும் ஏழை தெய்வங்கள், பணக்காரர்கள் வழிபடும் பணக்கார தெய்வங்கள்.
இந்த ஏழை தெய்வங்கள் எல்லாம் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்கள் என்றும், ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக தெய்வமாக்கப்பட்டார்கள் எனும் உண்மையை பல சான்றுகளின் படி நிறுவுகிறார். இளவரசியால் காதலிக்கப்பட்டு மன்னனால் கொல்லப்பட்ட மதுரை வீரன், சாதிக் கொடுமையால் காதல் பிரிக்கப்பட்டு கொல்லப்பட்ட முத்தாலம்மன், கணவனின் உடலை எரித்து துக்கம் தாங்காது உயிர் நீத்த மாலையம்மனும் மலட்டம்மனும், பிறசாதி மகனோடு நட்பாய்ப் பழகியதால் இழிவுபட்டு செங்கற் சூலையில் புகுந்து உயிர்விட்ட சீலையம்மா — இவர்கள் அனைவரும் இன்றும் வணங்கப்படுகிறார்கள்.
குடும்ப சாமிகள், பிடிமண் சாமிகள், குலச்சாமிகள், கும்பிடாத சாமிகள் என பல்வேறு வகைகளை அழகாய் விளக்குகிறார். ஏழைகள் கும்பிடும் சாமிகளின் பெயர்களை உயர்சாதியினர் தம் பிள்ளைகளுக்கு இடுவதில்லை என்ற கசப்பான உண்மை புலனாகிறது.
மக்களுக்கு பெருமளவில் உதவிய ரோண்டோ எனும் பாதிரியாரின் கல்லறை நெல்லை மாவட்டத்தில் இன்றும் வணங்கப்படுவதும், தஞ்சையில் ஒரு பிராமண பெண்ணின் உயிர் காக்க உயிர் நீக்கிய இஸ்லாமிய பக்கீர் பற்றிய கதையும் மனதைத் தொடுகின்றன. அனைத்து சாமிகளின் பிறப்பையும் ஆய்ந்து பார்த்தால், குற்ற உணர்வும் அச்சமும் அன்பும் தான் இவர்களை தெய்வமாக்கின என்ற முடிவுக்கு வரலாம்.