கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் [K.P.T. SirippuRaja Chozhan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் [K.P.T. SirippuRaja Chozhan]

None

3.63/5 · 68 ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

கிரேஸியின் எழுத்தில் அட்டகாசமாக சிரிப்பு வரும் என்று நான் சொல்வது ஏ.ஸி. போட்டால் ஜில்லேன்று இருக்கும் என்று சொல்வதைப் போல! அட்லீஸ்ஙட இரண்டு பக்கத்துக்கு ஒருமுறையாவது புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அப்படிச் சிரித்தேன். தமிழக வரலாற்றில் யாருக்குத் தெரியாமல் ஒரு நகைச்சுவை மன்னன் வாழ்ந்து ஆட்சிபுரிந்திருக்கிறான் என்பதைப் பல கற்சுவடுகளையும் மட்…

Reviews

user_14735

★ 2/5
நகைச்சுவை என்ற பெயரில் வரலாற்று புதினங்களை கேலி செய்யும் spoofs வகை. தேர்தல், அதனை சுற்றி நடக்கும் கூத்துக்கள் என அரசியலையும் விட்டு வைக்கவில்லை. தேர்தலின் போது எதிர்க்கட்சி கோஷம் எழுப்ப ஒரு வாக்கியம், இன்றைக்கும் பொருந்தக் கூடியது - "சிரிப்புராஜ அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி". அப்புறம் அங்கொன்று இங்கொன்றுமாக நகைச்சுவையும், சென்னை மொழியும், ஆங்கிலமும் வந்து போகிறது. அவ்வளவுதான். இந்த நாவலுக்கு எதற்கு சோழனை இழுத்தார் என்று தெரியவில்லை. அது பிடிக்கவுமில்லை.

user_14734

★ 5/5
Maadhu +2

user_14733

★ 3/5
This is a typical crazy Mohan style book. The thought of mixing ancient days king rule with the current election is nice. It's very hard to follow the tough tamil words in the beginning but once you get the momentum it's good.

user_14732

★ 5/5
கிரேசியின் திரைப்பட வசனங்கள் ஒரு பொதுவான நகைச்சுவையை கொண்டிருக்கும். அவரது நாடகங்களில் இது சற்று குறைந்து அவருக்கே உரித்த பாணி அதிகம் வெளிப்படும். இப்புத்தகத்தில் அது இன்னும் அதிகம். அதனால் தான் அவர் கதையின் தொடக்கத்தில் கூறுவது போலவே, இது அவரது எழுத்துத் திறனை காட்டிலும் படிப்பவரின் நகைச்சுவை உணர்வினை அதிகம் சார்ந்துள்ளது. அவ்வுணர்வு இருந்தால் இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

user_14731

★ 3/5
கிரேஸி மோகன் அவர்களின் கற்பனையில் உண்டான ஒரு வரலாற்றுப் புனைவு. 'அனைத்தும் கற்பனையே'ன்ற disclaimer போட்டுத்தான் ஆரம்பிச்சுருக்காரு.பித்துப்பிடிச்சாம்பாளையம் ஊரை ஆண்ட கே. பி. டி. சிரிப்பு ராஜ சோழன் பத்தின கதை இது. Initials வச்சுக்கிட்ட முதல் குறுநில மன்னன்.தற்போதைய சூழல்ல மன்னராட்சி இருந்திருந்தா மன்னர் குடும்பங்களோட நிலைமை எப்டி இருந்திருக்கும், அவங்களோட ஆட்சி முறைகள் எப்டி இருந்திருக்கும் அப்டின்றத எதுகை மோனை plus கொஞ்சம் நக்கல் நையாண்டி கலந்து எழுதி இருக்காரு ஆசிரியர்.கீழ்கண்ட இடங்கள் எனக்கு பிடித்தவை:1. சோம்பேறி ஆண்டவருக்கு எழுப்பின கோவில்.2. கும்பகர்ணனைப் போல தூங்கும் சகலை சோழன். அவனுக்கு அப்படி பெயர் வந்ததற்கான காரணம்.3. 12ம் மாதம் பிறந்த குழந்தை அதுவும் அழாமல் சிரித்துக்கொண்டே பிறந்தது.4. கதையில் வரும் அனைவருக்கும் அடைமொழி. அமைச்சர் முன்னெச்சரிக்கை முத்தண்ணராயர், சேனாதிபதி அவசரக்குடுக்கை அரையர்.5. அரசரோடு சேர்ந்து அரசி, அமைச்சர், சேனாதிபதி, தளபதி, ஜோஸ்யர் என்று அனைவருக்கும் நினைவு தப்பும் பகுதி கலாட்டாவின் உச்சகட்டம்.நல்ல வாசிப்பனுபவம். குபீர் சிரிப்புக்கு கீழே மென் புன்னகைக்கு மேலே. படங்கள் அருமை.

user_14730

★ 5/5
Crazy Mohan is popular for his hilarious cinema scripts and stage comedy dramas. This is the first book of his, that I read. The spontaneity and the flow of comedy script is amazing. There are very few people like Mouli who could match such flow and spontaneity. Very creative, hilarious and witty story. That too involving a fictional history of characters along with a creative footnote of references that appear so real. At many places, the dialogues were so hilarious that I laughed my heart out. Unfortunately, Crazy Mohan is no more and will be missed for such scripts.

user_14729

★ 4/5
பொன்னியின் செல்வன் நாவலை படு ஜாலியாக parody செய்திருக்கிறார் கிரேஸி மோகன். பல இடங்களில் வாய்விட்டு சிரிக்கும் படியான அளவிற்கு நகைச்சுவை நதி நாவல் முழுக்க பாய்ந்தோடுகிறது. வானில் தோன்றும் குட்டைவால் நட்சத்திரத்திற்கு பயந்து மரணப்படுக்கையில் விழும் கேணக்கிறுக்க சிம்மன் அடுத்ததாக அரியணை ஏறப் போகும் தன் புதல்வன் அஞ்சா நெஞ்சனாக இல்லாமல் கஞ்சா நெஞ்சனாக இருப்பதைக் கண்டு வருந்துகிறான். தந்தை இறந்த பின் அரியணை ஏறுவதற்கு வரும் தடைகளை உடைத்து தன் தந்தையின் பரம விரோதியான குதர்க்க தேசத்து மன்னன் வக்ரசேனனை சிரிப்புராஜ சோழன் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதே கே.பி.டி.சிரிப்புராஜ சோழன். வல்லவரையனுக்கு பதிலாக சிரிப்புராஜ சோழனோடு கூடவே செல்லும் அவசரக்குடுக்கை அரையர், அநிருத்த பிரம்மராயருக்கு பதிலாக சேனாதிபதி முத்தன்னராயர், குன்ஸாபுரி ஜோசியர், சிரிப்புராஜ சோழன் காதல் கொள்ளும் வக்ரசேனனின் மகள் ஸரஸரஸவாங்கி, கோட்டைத்தளபதி கொத்தன்னராயர் என்று பேர் வைப்பதில்லையே தன் குறும்புத்தனத்தை காட்டுகிறார். நாவல் முழுக்க கிரேஸி மோகனின் வார்த்தை விளையாட்டு நிரம்பி வழிகிறது. ஜாலியாக வாய்விட்டு சிரித்தபடியே ஒரே சிட்டிங்கில் படித்து முடித்துவிடலாம்.

user_14728

★ 3/5
It was a laughing riot. Being a fan of Crazy Mohan's dialogues, I thoroughly enjoyed it. This historical plot is satiristical attempt on current politics. Needless to say, there was stomach-hurting laughter throughout.
Shelves
Crazy Mohan Fiction book Humor

More like this


Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

3.63/5 · 68 ratings

மீண்டும் ஜீனோ [Meendum Jeeno]

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

3.63/5 · 68 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.63/5 · 68 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.63/5 · 68 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.63/5 · 68 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.63/5 · 68 ratings

கடல் புறா 2 [Kadal Pura]

Author: Sandilyan

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.63/5 · 68 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.63/5 · 68 ratings

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.63/5 · 68 ratings

Kallikaattu Ithigaasam

Author: Vairamuthu

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

3.63/5 · 68 ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

3.63/5 · 68 ratings

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.63/5 · 68 ratings