Reviews for கறுப்பர் நகரம் [Karuppar nagaram]
18 reviews total
user_14132
★ 3/5 Feb 02, 2026சற்று அலுப்பூட்டும் வாசிப்பாக இருந்தாலும், தகவல்கள் நிரம்பிய புத்தகம்.
user_14131
★ 4/5 Feb 02, 2026மெட்ராஸைப் பற்றிய குறிப்புகளுக்காக உங்கள் புத்தக அலமாரியில் வைத்திருக்க வேண்டிய அருமையான புத்தகம். 70களின் வட சென்னையை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. செங்கேணி ஒரு உயிர்ப்பான கதாபாத்திரம்!
வட சென்னைப் பகுதி படிக்காத மக்களின் பேச்சில் ஏன் அதிக ஆங்கில வார்த்தைகள் புகுந்துவிட்டன என்று எப்போதும் ஆச்சரியப்படுவேன். அதற்கான பதில்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களிடம் "Man" என்று பேசியதே மருவி "மே" என்றானது — "வாமே", "போமே" என்ற சென்னைப் பேச்சு வழக்காக மாறியது. கதைக்குள் நுழைய சிறிது நேரம் ஆகும், ஆனால் ஒருமுறை நுழைந்தால் அருமையான வாசிப்பு அனுபவம்.
user_14130
★ 5/5 Feb 02, 2026பெரும்பாலும் வரலாற்றுப் புனைவுகள் பேரரசுகளையும் ஆட்சி அதிகாரத்தையும் மட்டுமே சார்ந்து புகழும். ஆனால் இந்நாவல் வேறு. கிராமங்களில் சாதிக் கொடுமையிலிருந்து உயிர்பிழைத்து வாழ வழிதேடி வந்த பெரும் கூட்டமே மெட்ராஸின் முகவரி என்பதை இதைவிட எளிதில் புரியவைக்க முடியாது.
ஆங்கிலேயர்களிடம் பட்லர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் எப்படி அரைகுறை ஆங்கிலத்துடன் பட்லர் இங்கிலிஷ் பேசினார்கள் என்பதும், ஆங்கிலேயன் பேசிய அரைகுறை தமிழ் பின்னாளில் சென்னை பேச்சு வழக்காக மாறியது என்ற சான்றுகளும் மிகப்பெரும் வியப்பே.
மெட்ராஸின் பூர்வகுடிகளின் பேச்சு வழக்கை நூறாண்டு காலமாக கொச்சைப்படுத்திவரும் மேல் சாதி வன்ம மனங்களைக் காட்சிப்படுத்துவது நிச்சயம் உதவுகிறது. செங்கேணி-ஆராயியின் இப்பிரபஞ்சத்தின் அப்பாற்பட்ட காதல் கதை இது.
user_14129
★ 5/5 Feb 02, 2026இந்நூலில் வரும் சோகங்கள், காதல், அரசியல் அனைத்தும் என் மனதை ஒரு வருடிவிட்டன. கடைசி 50 பக்கங்கள் படிக்கும்போது சோகம் தொட்டுக்கொள்ளும். சென்னை முழுவதும் சுற்றிவிட்டு வந்ததைப் போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது.
user_14128
★ 4/5 Feb 02, 2026நேசிக்கும் மனிதர்களின் அற்ற வாழ்வு எத்தகைய நரகம்! அதை நான்கு சுவர்களுக்குள் வாழ்வது இன்னும் கொடுமை! இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது சென்னையின் வெளித் தோற்றம் மட்டும்தான் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் வாசித்த பின் அது முற்றிலும் மாறிவிட்டது.
அரசியல், வாழ்வு, சொல்லாடல், கதைக்களம் எல்லாவற்றிலும் நேர்த்தி! செங்கேணியும் ஆராயியும் என்றுமே அன்பு குறையா ஊற்றுகள். அம்மாவைப் பற்றிய பக்கங்கள் நிலை குலையச் செய்யும். எங்கும் மெட்ராஸ் வாசம் நம்மை அங்கே கொண்டு செல்லும்! 70களில் இப்படி இருந்த ஊரை என் கண் முன்னால் ஒரு கோட்டை கட்டி காட்டிவிட்டார் ஆசிரியர்.
user_14127
★ 5/5 Feb 02, 2026வடசென்னை மாநகரத்தின் புனையப்பட்ட கதைகளில் சிறப்பான புதினம். சென்னையைப் பற்றி அறிய விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறந்த ஏடு. கரன் கார்க்கியின் எழுத்துக்கள் படிக்கத் தூண்டும் விதத்தில் உள்ளன. அவரின் மற்ற படைப்புகளையும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
user_14126
★ 4/5 Feb 02, 2026இரட்டை ஆயுள் தண்டனையாக 35 வருடங்களை சென்னை மத்திய சிறையில் கழித்துவிட்டு வெளியே வரும் கிழவர் சர்சர்ரென விரையும் வண்டிகளையும் அவசர அவசரமாக அலுவலகம் விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் ஆச்சர்யமாய் பார்க்கிறார். புது வேஷ்டி சட்டை அணிந்திருந்தாலும் மனபிறழ்வு அடைந்தவனைப் போல எல்லோரையும் உற்றுப் பார்க்கும் கிழவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிச் செல்கிறார்கள்.
கைவண்டி இழுத்துப் பிழைக்கும் அம்மா அப்பா யாருமற்ற செங்கேணி, அதே குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆராயியை விரும்புகிறான். இவர்களின் காதல் வாழ்க்கை தான் கதையின் ஆதாரமாக தோன்றினாலும் அதன் வழியே பெரியாரும் திராவிடக் கட்சிகளும் மக்களின் வாழ்க்கையில் கொண்டு வந்த மாற்றங்கள், மெட்ராஸ் பாஷையின் வரலாறு, சேரியில் வாழும் மனிதர்களின் மன நிலை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.
ஆரம்பம் முதலே நிதானமானவனாக வரும் செங்கேணி ஏன் சிறைக்குப் போனான் என்பதற்கான காரணம் நாவலின் இறுதியில் தெரிய வந்தபோது நிஜமாகவே கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. 1970-களின் சென்னையை கற்பனையில் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்.
user_14125
★ 4/5 Feb 02, 2026இது நம் காலத்தின் மிக முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. சில இடங்களில் கதை இழுபடுவதாகவும் திரும்பத் திரும்ப வருவதாகவும் தோன்றினாலும் அதனால் சோர்வடைய வேண்டாம். சென்னையின் குடிசைப் பகுதி மக்களின் அறிக்கையிடப்படாத, வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட, திரிக்கப்பட்ட சமூகப் பிரச்சனைகள் குறித்த உண்மையான முத்துக்கள் கதையோட்டத்தில் பதிந்துள்ளன.