Reviews for ஆலம்
14 reviews total
user_13718
★ 4/5 Feb 02, 2026user_13717
★ 4/5 Feb 02, 2026மனித உளவியலுக்குள் படிந்து கிடக்கும் வன்மத்தைத் தொடுகிறது இந்தப் புதினம் — அது உணரப்படாமலேயே பல சமயங்களில் நம்மைச் சுற்றி எழுகிறது.
மனிதர்கள் கேவலமானவர்கள். கேவலம் தான் மனிதநேயம்.
user_13716
★ 4/5 Feb 02, 2026user_13715
★ 2/5 Feb 02, 2026மிகவும் சுமார்.
ஒரு சிறுகதையைச் சுற்றி சுற்றி இழுத்து நாவலாகத் தந்துள்ளார். மனதில் நிற்கவும் இல்லை, மனதைத் தொடவும் இல்லை.
user_13714
★ 5/5 Feb 02, 2026user_13713
★ 2/5 Feb 02, 2026ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களில் ஒரு சாதாரணமான புத்தகமாகவே பார்க்கிறேன். திரில்லர் பிடித்தவர்களுக்கு இந்தப் புத்தகம் பிடிக்கலாம். தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் வன்மத்தினால் நடக்கும் பிரச்சனைகளே கருப்பொருள்.
user_13712
★ 3/5 Feb 02, 2026இது ஒரு குற்ற மர்மப் புதினம். பரபரப்பான கதைப் பின்னணி. கதையின் நாயகன் ஒரு இளம் வழக்கறிஞர். அவரது மூத்த வழக்கறிஞருடன் பழைய வழக்கை எடுப்பதில் தான் கதை ஆரம்பிக்கிறது. தொடர்ந்து கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு வம்சத்தையே அழிக்க முயற்சி பண்ணுகிறார்கள். யார், ஏன், எதற்காக என்பதே மீதி கதை.
நாய்களுக்குப் பரவும் பூஞ்சைத் தொற்றையும், மனிதர்களுக்கு ஏற்படும் பழிவாங்கும் குணத்தையும் ஒப்பிட்டு எழுதின விதம் அற்புதம். ஒரு குடும்பச் சண்டையில் தான் கொலைகள் நடக்கின்றன என்று நினைக்கும்போது, அப்படியே திருப்பிச் சொன்ன விதம் அருமை. பல ஆண்டுகளாக தீர்ப்பு வராமல் இருப்பது, சாட்சிகளை அலைக்கழிப்பது, கொலை செய்தவர்களுக்கு உடனே ஜாமீன் கிடைப்பது ஆகிய உண்மை நிலைமையைப் புரிய வச்சிருக்கார் ஆசிரியர்.
இந்தக் கதையில் வரும் முக்கால்வாசி ஆண்கள் இரத்தவெறியில் இருக்கிறார்கள். எல்லாப் பெண்களுமே மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறார்கள்.
user_13711
★ 5/5 Feb 02, 2026இதுவரை படித்தவற்றில் ஆலம் மிகச்சிறந்த தமிழ் திருப்புமுனை நாவல். கதை, திருநெல்வேலியில் நடக்கிறது. பல ஆண்டுகளாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே பழிக்குப் பழியாக பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. அந்த இரத்தவெறியாட்டத்தில் ஒரு அப்பாவியின் உயிர் தவறுதலாகப் பறிபோகிறது. அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அடுத்தடுத்த கொலைகளுக்கு நகர்கின்றன அக்குடும்பங்கள். ஆனால் இரத்தவெறி பிடித்த அந்தக் கூட்டமே பயந்து அலறும் வகையில், அந்த அப்பாவியின் சாவுக்குக் காரணமான அத்தனை பேரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு ஒரு வம்சமே அழிக்கப்படுகிறது.
பகைக்கு நடுவில் வாழும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் அல்லாமல், அதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வழக்கறிஞரின் பார்வையில் கதையைச் சொல்லியிருப்பது கூடுதல் சுவாரசியம். ஒரு பொழுதுபோக்கு நாவலுக்குத் தேவையான அனைத்தும் இதில் உள்ளன — பரபரப்பான கதையோட்டம், திடீர் திருப்பங்கள், மிரட்டும் மர்மம்.
user_13710
★ 4/5 Feb 02, 2026படித்ததில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு. இந்தப் படைப்பில் எழுத்தாளர் வன்மத்தைப் பூஞ்சைகளோடு ஒப்பிடுகிறார். ஒரு தந்தை தன் மகன் மீது கொண்ட பாசம், மகனை இழந்த தவிப்பு, அதனால் கொண்ட வன்மம்…. அந்த வன்மத்தால் 17 வருடங்களாக அவர் செய்யும் கொலைகள் என நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். இறுதிவரை பரபரப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார்.
user_13709
★ 4/5 Feb 02, 2026பழிவாங்கும் உணர்வு ஒரு பூஞ்சை தொற்றுபோல் மெதுவாகப் பரவி, தன் பாதிப்பை ஒவ்வொருவருக்கும் பரப்புகிறது. ஜெயமோகன் கதைகளை ஆழமான உருவகங்களுடன் அடுக்குவதில் தனித்துவமான திறன் கொண்டவர். மனித உணர்வுகள் மற்றும் சமூக நடத்தை பற்றிய நுட்பமான கருத்துக்களைப் பின்னிப் பிணைந்த ஒரு கவர்ச்சியான கதையை உருவாக்குகிறார்.
இயற்கையான ஒன்றையும் உணர்ச்சிபூர்வமானதையும் இணைத்து இரண்டும் எவ்வாறு சிதைந்து கட்டுப்பாட்டை மீறி பரவுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் அதன் சுமையை உணரலாம்.