இந்தி எதிர்ப்பு ஏன்?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தி எதிர்ப்பு ஏன்?

None

4.4/5 · 89 ratings

1938-ல் இந்தி எதிர்ப்பு முதற்போரில் மூல முழக்கமிட்ட முப்பெருந்துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் தலைமையிலே திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய முழக்கத்தை இப்போது வெளியிட வேண்டி இருக்கிறது. இந்தப் பேச்சைப் படித்த பிறகு நீறு பூத்த நெருப்பாய் இருக்கும் நம் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரியட்டும்.'' இந்தியை இடையிலே உள்ள மும்மொழிப் பல…

Reviews

user_12604

★ 5/5
இந்த நூல் 1957 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் அருணகிரி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா பேசிய உரை. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட இந்த உரையை இன்றைக்கு வாசிக்கும் பொழுதும் அப்படியே நம்மால் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஏனெனில் இன்றைக்கும் இந்தி திணிப்பை நாம் எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இரு தினங்களுக்கு முன்பு கூட ஒரு ஒன்றிய அரசின் பிரதிநிதி ஆங்கிலம் கற்பதற்கு பதில் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று கூறினார். ஆகவே ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு கொள்கை இன்று வரையிலும் தமிழ்நாட்டின் மீது இருக்கவே செய்கிறது. அதை தமிழ்நாடு இன்றும் எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறது. வருங்காலத்திலும் எதிர்த்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் இங்கு மொழி ஒரு மொழியாக மட்டுமல்லாமல் நம் கலாச்சாரத்தோடும், நம் அடையாளத்தோடும், ஒன்றாக பின்னி இருப்பதினால் ஒரு மொழியை திணிப்பது என்பது நம்முடைய கலாசாரத்தையும் நம்முடைய வாழ்வியலையும் வேறு ஒரு கலாச்சாரத்தை கொண்டு அடக்குவது போல ஆகும். அதனால் எப்பொழுது எந்த இடத்தில் இருந்து மொழி திணிப்பு வந்தாலும் அதை தமிழகம் எதிர்த்து நிற்கும். புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் மும்மொழிகளில் கொள்கையும் ஒருவகையில் இந்தி திணிப்பு தான் அதையும் தமிழ்நாடு எதிர்க்கவே செய்கிறது. ஹிந்தி எதிர்ப்பை பற்றியும் ஒன்றிய அரசு தமிழகத்தை போன்ற தென்னிந்திய மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் அரசியலையும் இந்த உரையின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அண்ணாவின் உரைகளை யூட்யூபில் கேட்டதால் இந்த நூலை வாசிக்கும் பொழுது அண்ணாவின் குரல் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அண்ணாவின் மொழி வளமையும், அவரின் எடுத்துக்காட்டுகளையும் பார்க்கும் பொழுது அவர் ஏன் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டார் என்பது புரிகிறது. ஒரு உதாரணம், " திரௌபதை துகில் கட்டுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவன் துச்சாதனன் என்றால் திரௌபதிக்கு என்றைய தினம் துணி கிடைக்கும்? அதேபோல் தமிழனுக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பதை வட நாட்டுக்காரன் தீர்மானிப்பது என்றால் நம்முடைய தாய்மொழி எப்படி தப்பும்? திரௌபதிக்கு எந்த துகில் தேவை என்பதை தருமன் சொன்னால், ஏதோ கொஞ்சம் நாட்டு சேலையாவது வாங்கித்தந்து இருப்பான். அர்ஜுனன் சொன்னால், கொஞ்சம் அலங்கார சேலை வாங்கி கொடுத்திருப்பான். துரியோதனனும் துச்சாதனனும் சொன்னால் எந்த சேலை கிடைத்திருக்கும்? இருக்கிற சேலையையும் உருவி விடுவார்கள் அல்லவா அவர்கள்? அதுபோன்று, இருக்கின்ற அரசியலை பறித்துக் கொள்ளும் வட நாட்டுக்காரன் உங்களுக்கு எந்த மொழி தேவை என்று கேட்பது துச்சாதனனை பார்த்து திரௌபதிக்கு எந்த சேலை வாங்கலாம் என்று கேட்கின்ற அத்தகைய வெட்கங்கெட்ட கதையை போன்றதுதான். ஆகவே தான் அப்படிப்பட்ட விதி, ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்த தீர்மானத்தை நான் உங்களிடத்தில் எடுத்து சொன்னேன்." நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் தேவைப்படும் ஒரு சித்தாந்தத்தை 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்த ஒரு தலைவர் இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது வியப்பும், பெருமிதமும் வருகிறது.

user_12603

★ 5/5
Chad. N. Annadurai 🤜

user_12602

★ 5/5
It was like listening Anna's fiercely speech in front of us. A must read book for Tamils and non Hindi speakers to know the real reason why we shouldn't allow imposing hindi language.

user_12601

★ 5/5
This book covers speech given by Arignar Anna, who was one of the pivotal leaders from Tamilnadu, in making sure that Hindi imposition was strongly opposed. One can't thank enough for such leaders who safeguarded our mother language and we must be proud that we still are able to read, write and think in Tamil. இப்போ வரைக்கும் நம்ம ஊருக்குள்ள ஹிந்தி நுழைய முடியலயே அதுக்கு பின்னாடி நெறைய தலைவர்கள் இருந்திருக்காங்க. என்னதான் ideology படி வேற வேறையா இருந்தாலும், இந்தி னு வரும்போது மொத்தமா எதிர்த்திருக்காங்க. இந்த புத்தகம் அறிஞர் அண்ணா 1957 ல ஆற்றிய ஒரு சொற்பொழிவு. அதுவும் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு அப்போ! அவரு சொல்ற references வேடிக்கையா இருந்தாலும், சராசரி மனுசனுக்கு புறியுற மாறி ரொம்ப எளிமையா இருக்கு. இந்த மனிதன் பேசியதை நேரில் கேட்ட மக்களை நினைத்தால் தான் லைட் ah பொறாமை ah இருக்கு. தமிழ் மக்கள் கிட்ட ஓட்டு எடுக்காம, எந்த மொழி நமக்கு வேணும்னு முடிவு எடுக்குற உரிமை எவனுக்கும் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக பதிவு செய்யும் அருமையான பேச்சு. தமிழைப் படிப்போம்! தமிழ் மொழியைப் போற்றுவோம்! முக்கியமாக ஹிந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம்!

user_12600

★ 4/5
A short read on Annadurai's speech at a 1957 conference at the Arcot region of Tamilnadu against the Hindi language dumping by the central government of India.

user_12599

★ 5/5
The book presents a speech of C. N. Annaduarai in a DMK meeting during 1957. The speech is more relevant in the present situation proving him as a visionary leader.

user_12598

★ 5/5
A guide to understand Hindi Imposition As always Anna points out with perfection on the fact why Hindi Imposition is need to opposed. The facts mentioned are justified and will make everyone understand the impacts of Hindi Imposition on Tamils both economically and Socially.

user_12597

★ 4/5
Anna's examples to describe a situation is very attractive. No doubt his speeches were a crowd puller. And this speech given in 1957 is still relevant in 2021. This is a typical politician speech on a stage and not a well researched article on Why to Oppose Hindi Imposition.
Shelves
C.N. Annadurai book

More like this


Sivaji Kanda Hindu Rajiyam | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (Tamil)

*** சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்.- நாடகம். வைர வாள்வீச்சு வசனங்கள் உள்ளே!.... *** ஆண்டி : குளத்துலதான் குளிச்சேன் அது புண்ணிய தீர்த்தமாம். அடிச்சே கொல்றாங்க! பச்சை : குளத்…

4.4/5 · 89 ratings

வெள்ளை மாளிகையில்

அமெரிக்கா அதிபர் பதவியில் கறுப்பு இனத்தவர் ஒருவர் அமர்ந்தால், என்ன நிகழும் என்று விசாலமாகக் கற்பனை செய்து 'மனிதன்' என்ற பெயரில் ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதிய நூலி…

4.4/5 · 89 ratings

கம்பரசம்

நாடகாஆசிரிய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் வா…

4.4/5 · 89 ratings

ஏ, தாழ்ந்த தமிழகமே! மற்றும் நிலையும் நினைப்பும்: சொற்பொழிவுகள்

அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் சார்பில் பட்டமளிப்பு விழாவில் “நிலையும் நினைப்பும்” என்ற தலைப்பில் 23-00-1947ல் ஆற்றிய சொற்பொழிவு மற்றும் ஏ, தா…

4.4/5 · 89 ratings

ஆரிய மாயை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிட…

4.4/5 · 89 ratings

ஓர் இரவு [Or Iravu]

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு ஓர் இரவில் ஏற்படும் சம்பவங்களும், திருப்பங்களுமே கதை. பல வருடங்களாக மறைக்கப்பட்ட இரகசியத்தால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கிறது…

4.4/5 · 89 ratings