வேதபுரத்து வியாபாரிகள் [Vedapuratthu Vyabaarigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வேதபுரத்து வியாபாரிகள் [Vedapuratthu Vyabaarigal]

None

3.85/5 · 41 ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்!

இந்நாவலில் நாம் ரசித்துச் சிரிக்கக்கூடிய அத்தனை இடங்களு…

Reviews

user_12452

★ 3/5
Indira parthasarathy must be the one Tamil writer who constantly based his novels in the world of politics. And this novel is a satire which takes a dig at the Dravidian politics of 1980s. Not exactly brilliant but still a bittersweet read.

user_12451

★ 4/5
It is a Tamil novel by Indira Parthasarathy; Translated by P.K. Sreenivasan. This is a powerful satire on a political system that has lost its total identity. The ruling icons are omniscient and omnipotent, and the malevolence is everywhere. The system is based on fear and indoctrination of the worst order. People are forced to live in abject poverty and servitude. They build temples for the icons who they think have power over their tragic destiny and indulge in festivities propitiating them. The powerless Vedapuram loses its individuality in the deceptive world of cinema. The novel is on the atrocities and the system of merchandising and mind-policing. There is also a centre in Indraprastha, which instead of protecting people indulges in trading of boxes! Ministers are puppets and universities only confer doctorates on rulers. The story begins with Apurva, the main character, coming to study about Vedapuram and trace her family roots. She encounters a series of strange and incredible incidents. But she herself becomes part of the system, being anointed the queen! The theatre of the absurd in a democracy and the rot that has set in the polity of Tamil Nadu are forcefully brought out.

user_12450

★ 4/5
இபாவை வாசிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு பதிவுகள் எழுதியவுடன் அவருடைய நிறைய புத்தகங்களைப் படிக்குமாறு நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். அடுத்ததாக நான் தேர்ந்தெடுத்த அற்புதம் ”வேதபுரத்து வியாபாரிகள்” அங்கதமாக அரசியலைச் சொல்லவேண்டும் என்று கல்கியில் 1994ல் தொடராக வெளிவந்ததாம். வேதபுரம் என்று பாண்டிச்சேரிக்கு ஒரு பெயர் இருப்பதாகச் சொல்கிறார் இபா. ”வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது” என்று பாரதியும் எழுதியிருக்கிறானாம். அபூர்வா என்ற வெளிநாட்டுப் பெண் தன் வேர்களைத் தேடி வேதபுரம் வருகிறாள். எதற்காக என்றால் ஒரு புத்தகம் எழுதுவதான் அவளது இலக்கு. இறுதியில் அவள் வேதபுரத்து மகாராணி ஆகிவிடுகிறாள். மதிநுட்பம் மற்றும் சுறுசுறுப்பான பெண்களைப் பற்றி எழுதும்போது அந்தக் கதை நம் இதயத்தினுள் சுலபமாகச் சென்று தங்கிவிடுகிறது. திஜா, பாலகுமாரன் ஆகியோரது நாவல்களில் வரும் பெண்களுக்கு இந்த ராக்கெட் வேகத் துடிப்போட்டம் இருக்கும். படிப்பவர்களுக்கு இனம்புரியாத ஒரு கிக். அரசியலை வியாபாரமாக ஸ்தாபனமாகச் செய்பவர்கள் வேதபுரத்து அரசியல்வாதிகள். அதுதான் வேதபுரத்து வியாபாரிகள் நாவலின் மூலக்கரு. எதையும் அறிவார்ந்து யோசிக்காமல் தலைவனை நேரில் கூடப் பார்க்காமல் அங்கிருந்து வரும் கட்டளைகளுக்கு ஆடுபவர்கள் இந்தக் கோமாளிகள் என்று சொல்லாமல் சொல்கிறார் இபா. இது கத்தி மேல் நடக்கிற சமாசாரம். கரணம் தப்பினால் மரணம் என்று கயிறு மேல் நடந்திருக்கிறார். அரசியல் களத்தில் எழுதும்போது யாருடைய ஜாடையும் தெரியாமல் எழுதுவது என்பது கலை. ஆனால் அதுபோல யாராவது ஒரு நிகழ்கால அரசியல்வாதியை நாம் ஒப்பிட்டு பார்க்குமளவிற்கு இருந்தால்தான் சுவாரஸ்யம். இது இரண்டையும் தராசின் இரு பக்கத்திலும் வைத்து நிறுத்துக் கொடுத்திருக்கிறார் இபா. >>>>>>>>> ஏழையின் இதயத் தெய்வம்’னு அவருக்கு ஒரு பட்டமிருக்கு , அது தெரியுமா உங்களுக்கு . . . ? ” “ அந்தப் பட்டம் நிரந்தரமா இருக்கணும்னுதான் அவர் வறுமையை ஒழிக்கறது பத்தி யோசிக்கலியா ?” <<<<<<<<<<<< மேலே கோடிட்டுக் காட்டியிருக்கும் ”சுளீர்” ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு. ஒரு அத்தியாயத்தினை இப்படி ஆரம்பிக்கிறார். >>>>>>>>>>>>>> ‘ இந்திரபிரஸ்த நாட்டுத் தலைவருக்கு பதிமூன்று மொழிகளில் மவுனம் சாதிக்கத் தெரியும் ; எட்டு மொழிகளில் புன்னகை பூக்கத் தெரியும் ’ ( இந்திர பிரஸ்த வரலாறு ஆசிரியர் : சுரேந்திர பிரஸாத் , பக் . 376 ) <<<<<<<<<<<<<<<< இந்திரபிரஸ்தம் என்று அவர் இங்கே சொல்வது டில்லியை என்பது புரிந்துவிடுகிறது. வேதபுரம் என்று அவரால் அழைக்கப்பட்ட தென்னிந்தியாவிலிருந்து அபூர்வா இந்திரபிரஸ்தத்திற்குச் செல்கிறார். அந்த இந்திரபிரஸ்தத்தில் அரசாளும் கட்சிக்கு வேதபுரத்திலும் சகாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் 23 பேர். ஆனால் 23 பேரும் இருபத்து மூன்று கட்சிகள் போல் இருக்கிறார்கள். இதற்கு விளக்கமெல்லாம் தேவையில்லை. ஆனால் நம்மால் சிலவற்றை யூகித்துக்கொள்ள முடிகிறது. >>>>>>>>>>>>>>>>>>>>>> வேதபுரத்து வியாபாரிகள் மணலைக் கயிறாகத் திரிக்கக் கூடியவர்கள் என்றால் , இந்திர பிரஸ்தத்து வியாபாரிகள் அக்கயிற்றை , கார்ப்பெட்டாக்கி விற்று விடக்கூடிய சாமர்த்தியசாலிகள் என்பது வாஸ்தவந்தான் . <<<<<<<<<<<<<<<<<<<<<<<< வேதபுர அரசியல்வாதிகள் பொதேர் பொதேர் என்று காலில் விழுகிறார்கள். ஒரு அரசனுக்கு கொடுக்க வேண்டிய பட்டங்களெல்லாம் வேதபுரத்தில் அரசாள்பவனுக்குக் கொடுக்கப்படுகிறது. இது குடியாட்சி அல்ல முடியாட்சிதான் என்று நிறுவவதற்காகக் கொடுக்கப்படும் பட்டங்கள் அவை என்று அங்கதம் பேசுகிறார். நஞ்சுண்டன் என்கிற பாத்திரம் அபூர்வா என்னும் பிரதான நாயகி பாத்திரத்தில் வரும் பெண்ணிடம் அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடாது என்று வரும் தர்மசங்கடமான நிலையில் ஒரு வசனம் பேசுகிறது. இரண்டு வரியில் அற்புதம் அது. >>>>>>>>>>>>>> “ கேள்விகள் கேட்காமலிருந்தால் , பொய்கள் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது ” என்று சிரித்துக் கொண்டே சொல்லியவாறு எழுந்தான் நஞ்சுண்டன் . <<<<<<<<<<<<<<< இப்படி நறுக்குகளை சொல்லிக்கொண்டே போகலாம். வாங்கிப் படியுங்கள் இந்த அபாரமான நாவலை. பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பு! இந்த வருஷத்தின் (2021) நான்காவது புத்தகம் இது! மொத்தம் ஐம்பது புத்தகங்கள் இவ்வருடத்தின் வாசிப்பு இலக்காக வைத்திருக்கிறேன். <3 #இபா #வேதபுரத்து_வியாபாரிகள் #கிழக்கு

user_12449

★ 3/5
'നേതാവെന്നാൽ നാട്. നാട് എന്നാൽ ജനം, ജനമെന്നാൽ നേതാവ്. " വേദപുരത്തെ രാഷ്ട്രീയച്ചോല്ല് 📗 വേദപുരത്തെ വ്യാപാരികൾ ✒️ഇന്ദിരാ പാർത്ഥസാരഥി വിവ പി കെ ശ്രീനിവാസൻ ✳️ഭാരതീയ ഭാഷ പരിഷത്ത് അവാർഡ് നേടിയ, പ്രസിദ്ധീകരിച്ച കാലത്ത് തമിഴ്നാട്ടിൽ ഏറെ വിവാദങ്ങൾ സൃഷ്‌ടിച്ച നോവൽ. വേദപുരം : സ്വന്തം വേരുകളുടെ പ്രസക്തിയോ പ്രധാന്യമോ, മനസിലാക്കാനാകാതെ ഇരുട്ടിൽ കഴിയുന്ന സമൂഹം. രാഷ്ട്രീയത്തിന്റെ അതിപ്രസരത്തിൽ സത്വം നഷ്ടപെട്ട ഒരു രാജ്യത്തിന്റെ കഥ. ഭരണാധികാരികളുടെ ഭരണരാഹിത്യത്തിൽ കുടുങ്ങി, സിനിമയുടെ അതിപ്രസരത്തിൽ രാഷ്ട്രീയ ഭാവി കളഞ്ഞുകുളിച്ച, സമസ്തദുരിതങ്ങളും ഏറ്റുവാങ്ങുന്ന നൂറ്റാണ്ടുകളുടെ പാരമ്പര്യം അവകാശപ്പെടുന്ന നാട്. ഈ ദുരിതത്തിൽ നിന്നും ഒരിക്കലും മോചനമില്ലെന്ന് അറിഞ്ഞുകൊണ്ടുതന്നെ അവർ നേതാവിനുവേണ്ടി ക്ഷേത്രങ്ങൾ പണിയുന്നു, അന്നം മുടക്കിയും ഉത്സവങ്ങളും കുംഭാഭിഷേകങ്ങളും നടത്തുന്നു. വേദപുരത്തെക്കുറിച്ചും അവിടുത്തെ ജനങ്ങളെ കുറിച്ചു പഠിക്കാനും നേരിട്ടുള്ള അനുഭവങ്ങൾ വഴി ഒരു നോവൽ എഴുതാനും വിദേശത്തുനിന്നും വന്ന അപൂർവ എന്ന യുവതിയിലൂടെയാണ് കഥ പുരോഗമിക്കുന്നത്. വേദപുരത്തു വന്നിറങ്ങിയതുമുതൽ അവിടുത്തെ രാഷ്ട്രീയ നിലപാടുകൾ അവളെ അമ്പരപ്പിക്കുന്നു. ജനാധിപത്യമെന്ന പേരിൽ അവിടെ അരങ്ങേറുന്ന പാവക്കൂത്തുകൾ അവളെ അത്ഭുതപെടുത്തുകയും അതിൽ അവൾ പെട്ടുപോകയും ചെയ്യുന്നു. പാവപെട്ടവർക്കും തെരുപട്ടികൾക്കും വെവ്വേറെ എച്ചിൽത്തൊട്ടികൾ സ്ഥാപിച്ച് പട്ടികളും മനുഷ്യരും തമ്മിലുള്ള കടിപിടി ഒഴിവാക്കുന്ന ഭരണപരിഷ്കാരം. ഒരിക്കലും വേദപുരത്തെ ഭരണത്തലവനെ ആരും കണ്ടിട്ടില്ല എന്ന യാഥാർഥ്യം അപൂർവ അറിയുന്നു. ഒരു ദിവസം ഭരണത്തലവനായ നേതാവ് ആവിയായി ആകാശത്തേക്ക് ലയിക്കുന്നു എന്ന വിചിത്രമായ വിളംബരം വിഡ്ഢികളായ ജനങ്ങൾ അംഗീകരിക്കുകയും അപൂർവ അവിടെ അപൂർവദേവി ആയി മാറുകയും ചെയ്യുന്നു. 🍁തികച്ചും ഒരു രാഷ്ട്രീയ നോവലാണിത്. തമിഴ്നാട് രാഷ്ട്രീയവുമായി കൂട്ടിയിണക്കി വായിച്ചാൽ ഒരുപാട് അർത്ഥതലങ്ങൾ ഉണ്ടാകുന്ന നോവൽ. ജയലളിതയുടെ ഭരണകാലത്താണ് ഇത്തരം ഒരുനോവൽ എഴുതാൻ ആശയം എഴുത്തുകാരന് ലഭിച്ചതെന്നു പറയുന്നു. നോവലിലെ അപൂർവ ജയലളിതയായും കൂട്ടുകാരി വനിത ജയലളിതയുടെ കൂട്ടുകാരി ശശികല ആയും നമുക്ക് കാണാം.
Genres
Shelves
Indira Parthasarathy book Fiction

More like this


Thanthira boomi

“நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உன்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லையென்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மையில்லையென்றால் மனிதம் இல்லை. ந…

3.85/5 · 41 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

3.85/5 · 41 ratings

பொய்மான் கரடு [Poimaan Karadu]

இந்தப் 'பொய் மான்' கரடு என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது, ஆனாலும் யாரும் சாகவில்லை! ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை!…

3.85/5 · 41 ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.85/5 · 41 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.85/5 · 41 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.85/5 · 41 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.85/5 · 41 ratings

வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]

Author: Akilan

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan வேங்கையின் மைந்தன் புதினம் கற்…

3.85/5 · 41 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.85/5 · 41 ratings

நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.85/5 · 41 ratings

கிருஷ்ணா கிருஷ்ணா

இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா , மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. கிருஷ்ணர் என்கிற கடவுள் அல்லது கதாநாயகன் அல்லது படிமத்தை நாம் நீருடன் ஒப்பி…

3.85/5 · 41 ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.85/5 · 41 ratings