Reviews for தண்ணீர் தேசம்

1 review total

Elankumaran

★ 4/5 Jul 06, 2026

அறிவியலும் புனைவும் கலந்து எழுதப்பட்ட ஒரு நெடுங்கவிதை — தண்ணீர் தேசத்தின் தோற்றமே ஒரு புதுமைதான். 1996ல் எழுதப்பட்ட இப்படைப்பு அக்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாய் எழுந்ததோடு, முப்பது வருடங்கள் கழித்தும் அதே புதுமையை அள்ளித் தருகிறது.

வைரமுத்துவின் எழுத்துலகில் என் முதல் பயணம் இதுதான். உள்ளே நுழைய நுழைய ஒவ்வொரு அலையும் நாம் வாழும் அறிவற்ற, அனுபவமற்ற வாழ்வையும், நாமே நமக்குப் பழக்கப்படுத்திக்கொண்ட மென்மையையும், பொய் அச்சங்களையும், மனித நியாய அநியாயங்களையும் போட்டு அலைக்கழிக்கின்றன.

வீசும் காற்று அன்பையும் காதலையும் கவிதையாய்த் தூவிச் செல்ல, கதை வாழ்வின் மீதான நம்பிக்கையில் நங்கூரமிட்டு நாளை மீதான எதிர்பார்ப்பில் இந்தத் தண்ணீர் தேசத்துப் பயணிகளை உயிர்கொள்ளச் செய்கிறது. வாழ்வின் மீதான போராட்ட அலைகளுக்கு நடுவே தனித்து நிற்கும் நம்பிக்கை வரிகள் இதை ஒரு சுயமுன்னேற்றப் படைப்பாகவும் உருக்கொள்ள வைக்கின்றன.