சஞ்சாரம்
Share:

சஞ்சாரம்

Sancharam

Check Price on Amazon
4.1/5 · 70 reviews

சஞ்சாரம்

Sancharam

4.1/5 · 70 reviews
பக்கங்கள்
376
வடிவம்
Hardcover
பதிப்பகம்
தேசாந்திரி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381975701
ASIN
B07BDKKKTG

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வ…

Interested in this book? Check Price on Amazon
Quotes

வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது. வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன. வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.

சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும். வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா? ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது. அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.

More Quotes...
Shelves
நாட்டுப்புற கலை Social Novel நாதஸ்வரம் தமிழ் இலக்கியம் Tamil Literature சமூக நாவல் சாதி ஒடுக்குமுறை கரிசல் காடு Novel நாவல் சாகித்ய அகாடமி விருது Historical Fiction வரலாற்றுப் புனைகதை

More like this


உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

3.9/5 · 49 reviews

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

4.2/5 · 39 reviews

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …

2.8/5 · 17 reviews

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…

3.7/5 · 29 reviews

மலைகள் சப்தமிடுவதில்லை

எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள்…

நெடுங்குருதி

குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்…

உப பாண்டவம்

மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்…

3.7/5 · 21 reviews

அக்கடா

மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உண…

என்றார் போர்ஹே

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்…

துயில்

தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழு…

சிரிக்கும் வகுப்பறை

நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்லிச் செய்கிறது இந்நாவல்.

பதின்

ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.