Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இராஜராஜேச்சரம்
Rajarajecharam
- பக்கங்கள்
- 548
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- அன்னம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- Latest edition March 2020
- ASIN
- B0DM2HCJC6
இராஜராஜேச்சரம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாற்றினை இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்ட பல ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல்.
இந்நூல் ஒன்பது பகுதிகளையும், பின்னிணைப்பும் கொண்டு அமைந்துள்ளது.
தஞ்சை இராஜராஜேச்சரம் எனப்படுகின்ற பெரிய கோயிலைப் பற்றிய இந்நூலில் தஞ்சாவூர், இராஜராஜ சோழன், கோயிலின் தத்துவங்கள், சிற்பங்கள், இசை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றி வரலாற்று நோக்கில் இ…
Genres
Quotes
சுவார்ட்ஸ் என்ற பாதிரியாரால் வளர்க்கப் பெற்று தஞ்சை அரசராக முடிசூடிய இரண்டாம் சரபோஜி 1798இல் பதவி ஏற்றபோதும், ஓராண்டுக் காலத்திற்குள்ளேயே ஆங்கில அரசு அவர்தம் பதவியைக் கைப்பற்றி ரெசிடெண்ட் என்ற அதிகாரிகள் வசம் ஒப்புவித்தது. இருப்பினும் சரபோஜி மன்னர் தஞ்சைப் பெரியகோயிலுக்கு பல திருப்பணிகளைச் செய்ததோடு புதிய கணபதியார் ஆலயத்தையும் கட்டுவித்தார். பல அறக்கட்டளைகளைத் தோற்றுவித்தார். காலச்சூழல் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வைத்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட சுவார்ட்ஸ் பாதிரியார் பெரிய கோயிலின் தீர்த்தக்குளமான சிவகங்கை குளக்கரையில் சிப்பாய்கள் வழிபாடு செய்ய புதிய கிறித்துவ தேவாலயத்தைக் கட்டுவித்தார். தஞ்சைக் கோயிலில் சரபோஜி மன்னர் வெட்டுவித்த போன்ஸ்லே வம்ச வரலாறு என்ற பெரிய கல்வெட்டுத் தொடரில் சுவார்ட்ஸ் பாதிரியாரின் புகழும் இடம்பெறுமாறு செய்தார்.
கி.பி.1773 முதல் 1776 வரை ஆர்க்காட்டு நவாப்பின் படையினரும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியப் படையினரும் தங்கள் பாடி வீடாக பெருவுடையார் கோயிலைப் பயன்படுத்தினர். பெருவுடையார் லிங்கம் உள்ள கருவறையோடு மகாமண்டபமும், முருகன் ஆலயமும், திருச்சுற்று மாளிகையும் படையினர் தங்குமிடமாக இருந்தன. முகலாய, கிறித்துவ வீரர்கள் அங்கு தங்கியமையால் திருமேனிகளின் கைகளும் கால்களும் உடைக்கப்பெற்றன. அவர்கள் தங்கி இருந்ததற்குச் சான்றாக முருகன் ஆலயத்தின் அர்த்தமண்டபத்தில் "Shelter For 36 Persons" என்ற எழுத்துக் குறிப்பும், கருவறை அர்த்த மண்டப வாயிலில் ARP பாதுகாப்பிடம் என்ற குறிப்பும், திருச்சுற்று மாளிகையில் வடபகுதியில் ARP WARD III என்ற பெயர்க் குறிப்பும் இன்றும் இருப்பதைக் காணலாம்.
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
Shelves
More like this
வந்தார்கள்... வென்றார்கள்!
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்
"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் க…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…
முதல் உலகப்போர்
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம்…
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…
கங்கை கொண்ட சோழன் பாகம் 4
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கங்கை கொண்ட சோழன் பாகம் 3
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கங்கை கொண்ட சோழன் பாகம் 2
ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…