கங்கை கொண்ட சோழன் பாகம் 2
Share:

கங்கை கொண்ட சோழன் பாகம் 2

Gangai Konda Cholan Part 2

Check Price on Amazon
4.1/5 · 21 reviews

கங்கை கொண்ட சோழன் பாகம் 2

Gangai Konda Cholan Part 2

4.1/5 · 21 reviews
பக்கங்கள்
568
பதிப்பகம்
விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகி…

Interested in this book? Check Price on Amazon
Quotes

தொண்டை தேசத்தை விட்டு சோழ தேசம் போகப் போகிறேன். இங்கு இருக்கின்ற நிலங்களை விட்டு அல்லது விற்றுவிட்டு, என் மனைவியோடும், மகளோடும், குடும்பத்திற்கான சில பொருள்களோடும் நான் சோழ தேசம் நோக்கிப் போகப் போகிறேன். மனைவியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். மகளின் மானத்தை காப்பாற்ற வேண்டும். அவளை ஒருவனிடம் கை பிடித்து கொடுக்க வேண்டும். மகனை என்னை விட மேம்பட்டவனாக, ஞானமுள்ளவனாக தயார் செய்ய வேண்டும். இதற்காக பொருள் அவசியம். நான் துறவறம் கொள்ள முடியாது. இவளை விட்டு விலக முடியாது. எனவே, இவர்களோடு நிலம் விற்ற சிறிய பொருள்களோடு நான் சோழதேசம் நோக்கி போகப் போகிறேன். மறுபடியும் ஒற்றை புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப் போகிறேன். சுண்ணத்திலிருந்து மறுபடியும் ஒன்று, இரண்டு என்று போகப் போகிறேன். முடிந்த வரை என்னை ஏதுமில்லாதவனாக வைத்திருக்க முயற்சி செய்யப் போகிறேன். இன்னும் சீரான வாழ்க்கை வாழப்போகிறேன். தொண்டை தேசத்து அந்தணர்களுக்கு சோழ தேசத்தில் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தொண்டை தேசத்து அந்தணர்கள் தஞ்சைக்கு சென்று அங்கு இருந்து ஜெயங்கொண்டத்திற்கு திரும்பிவிட்டார்கள். ஜெயங் கொண்டத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. அது அரசர் இருக்கும் இடம். அரசியல் ரீதியான இடம். இப்பொழுது தஞ்சை அமைதியாகிவிட்டது. மிகப்பெரிய கோவில் இருக்கிறது. தினசரி சிவ தரிசனம். காவேரி வாய்க்கால் குளியல் என்று நான் அமைதியாக இருக்க முயற்சி செய்வேன். அரசருடைய தயவில் மந்திரிமார் சேனாதிபதி தயவில் பெரும் வணிகர் தயவில் என் வாழ்வை துவக்குவேன்.

More Quotes...
Shelves
வரலாற்று நாவல் வரலாறு தமிழ் புனைவு History Tamil Fiction War Fiction போர்ப் புனைகதை Historical Novel

More like this


கங்கை கொண்ட சோழன் பாகம் 4

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

3.9/5 · 9 reviews

கங்கை கொண்ட சோழன் பாகம் 3

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.2/5 · 9 reviews

கர்ணனின் கதை

திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…

4.0/5 · 20 reviews

உடையார் - பாகம் 2

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

உடையார் பாகம் - 3

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

உடையார் பாகம் - 4

தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரை…

உடையார் பாகம் - 5

தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…

உடையார் பாகம் - 6

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

கங்கை கொண்ட சோழன் பாகம் 1

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

தனிமைத் தவம்

'தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை, தங்கள் மூலம் படித்த நேர்ந்தது. இதில் தவம் பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்.

3.5/5 · 4 reviews