Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதை விடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்?
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
முடிக்கமுடியாத ஆட்டத்தை யார் தொடங்கினால் என்ன?” என்றார் கபிலர். “ஆட்டம் என்றால் அது முடியத்தான் வேண்டுமா?” எனக் கேட்டான் காலம்பன்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச்சொல்கூட ஒருவரைக் காட்டிக்கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
கதைகள் உருவாக்கி வைத்திருக்கும் பகை ஒருபோதும் அழியாது
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
காலத்துடனும் காதலுடன் விளையாடிப் பார்க்க விருப்பமில்லா மனிதன் யார்? மனிதனின் அடிப்படையான விருப்பம் இவை இரண்டும் தானே.  அதனால்தான் எல்லோருக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'