Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

எது சரி, எது தவறு, என்று ஏன்  வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்?
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
படைவீரர்கள் தாம்  தோற்றவுடன் வீழ்வார்கள் . குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள் ; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள், வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'
தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு'