Quotes from பாரதியார் கவிதைகள்

“தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய் வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர் நரகத் துழலுவதோ? கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி!”
பாரதியார் (Subramania Bharati) — 'பாரதியார் கவிதைகள்'
“akkini kunjondru kanden.adhai angoru kaatidai pondhidai vaithen. vendhu thanindhadhu kaadu.thazal veerathil kunjendrum moopendrum unndo”
பாரதியார் (Subramania Bharati) — 'பாரதியார் கவிதைகள்'
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே!”
பாரதியார் (Subramania Bharati) — 'பாரதியார் கவிதைகள்'
“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்”
பாரதியார் (Subramania Bharati) — 'பாரதியார் கவிதைகள்'
“திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டி யடிக்குது மின்னல்,-கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்;-கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா! அண்டம் குலுங்குது,தம்பி!-தலை ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்! கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!”
பாரதியார் (Subramania Bharati) — 'பாரதியார் கவிதைகள்'