Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

“அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண் கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண் கொண்டு பார்த்தேன்.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்திற்கு உண்டு.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“எழுதக் கற்கும் வரை சொற்களின் வழியாக உலகைப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக் கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள்.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒருவிதமான கலைதான்.”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது?”
'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'