Reviews for பழுப்பு நிறப் பக்கங்கள் பகுதி 1
12 reviews total
Arunaa Ramesh
★ 5/5 Jul 14, 2026மண்ணுக்குள் புதைந்துபோன இலக்கிய மாணிக்கங்களை வெளிக்கொணர்ந்து, வாசகர்களுக்கு ஓர் அழகிய மாலையாகத் தொடுத்துத் தந்திருக்கிறார் சாரு நிவேதிதா — அது ஒரு மகத்தான பணி. நவீன, பின்நவீனத்துவக் களங்களில் எத்தனையோ மாபெரும் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்; அவர்களின் எழுத்துகளையும், தமிழ் இலக்கியத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கையும் மிகுந்த சிலாகிப்புடன் இந்நூல் விவரிக்கிறது. குறிப்பாக இன்று அதிகம் கொண்டாடப்படாத தஞ்சை பிரகாஷ், ஆ. மாதவன், எஸ். சம்பத், கா. நா. சு. போன்றோரின் நாவல்களையும், அவற்றுக்குப் பின்னால் இருந்த வியப்பூட்டும் எண்ணப் போக்குகளையும் ஆராயும்போது, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் ஆற்றாமையும் கலந்து நம்மை நெகிழவைக்கிறார்.
Naren
Jul 14, 2026தமிழுக்கு உ. வே. சா. தாத்தா என்றால், க. நா. சு. பெரியப்பா — இப்படி நம் இலக்கியப் பரம்பரையின் முன்னோடிகளை நெருக்கமாக உணரவைக்கிறது இந்நூல். இத்தனை எழுத்தாளர்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தியிருப்பது வாசகனுக்குக் கிடைத்த பெரும் வரவு.