சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகள்

149 books · Updated March 27, 2026

தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளின் தொகுப்பு. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய விரிவான பட்டியல். புதிதாகத் தமிழ் இலக்கியம் படிக்க விரும்புவோருக்கும், ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ரசிக்கவும் ஏற்ற தேர்வு.

Share:
அபிதா #25

அபிதா

லா. ச. ராமாமிருதம்

தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா? கவித்துவம் ததும்பும் தனித்துவமான அவரது படைப்புமொழி உரைநடைக்குக் காப்பியத் தன்மையை அளிக்கிறது. வாழ்வுவரமா? சாபமா? வரம் …
Check Price
கோபல்லபுரத்து மக்கள் #26

கோபல்லபுரத்து மக்கள்

கி. ராஜநாராயணன்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்' நாவலின் தொடர்ச்சியாக அமைந்த இந்நூல், ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தின் கரிசல் மண்ணில் குடியேறிய மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் சமூக மாற்றங்களை வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்துக் …
Check Price
தேசாந்திரி #27

தேசாந்திரி

எஸ். ராமகிருஷ்ணன்

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.
Check Price
புயலிலே ஒரு தோணி #28

புயலிலே ஒரு தோணி

ப. சிங்காரம்

இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் தென்கிழக்கு ஆசியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை இந்தப் புதினம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. போரின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனப்போராட்டங்களையும், பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்த இடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஒரு காவியத் தன்மையுடன் இது விவரிக்கிறது. தமிழ்ப் புனைகதை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் …
Check Price
யாமம் #29

யாமம்

எஸ். ராமகிருஷ்ணன்

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் …
Check Price
உறுபசி #30

உறுபசி

எஸ். ராமகிருஷ்ணன்

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க …
Check Price
சோளகர் தொட்டி #31

சோளகர் தொட்டி

பாலமுருகன்

2004-ஆம் ஆண்டு வெளியான இந்நாவல், பழங்குடியின மக்கள் மீது அரசு எந்திரம் ஏவிய வன்முறையைச் சமரசமின்றிப் பதிவு செய்த மிக முக்கியமான நாவலாகும். சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக சோளகர் பழங்குடி இனம் எதிர்கொண்ட சித்திரவதைகளை ஒரு வரலாற்று ஆவணமாகப் புனைவின் வடிவில் முன்வைக்கிறது.
Check Price
வெக்கை #32

வெக்கை

பூமணி

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் …
Check Price
சோலைமலை இளவரசி #33

சோலைமலை இளவரசி

கல்கி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஒரு வீரனின் தற்போதைய வாழ்க்கையையும், அவனது முற்பிறவி நினைவுகளையும் இணைக்கும் வகையில் இதன் கதைக்களம் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. தேசப்பற்று மற்றும் மர்மம் நிறைந்த இந்தச் சிறிய நாவல், வாசகர்களைக் …
Check Price
ஜே.ஜே. சில குறிப்புகள் #34

ஜே.ஜே. சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி

'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடி நிலைகளில் ஒரே திராவகம்தான ஓடிக்கொண்டிருக்கிறது.
Check Price
வெட்டுப்புலி #35

வெட்டுப்புலி

தமிழ்மகன்

ஏறத்தாழ நூறு வயது பயணம். கடந்த நூற்றாண்டின் கதாபாத்திரங்களோடு கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்துவிட்டு வந்தமாதிரி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டில் இந்தியச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதை விமர்சிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது. மத, மொழி, இன ரீதியான பல பிரிவினரும் பாரதக் குடையின் கீழ் சேர்ந்து இருப்பதில் …
Check Price
கதா விலாசம் #36

கதா விலாசம்

எஸ். ராமகிருஷ்ணன்

தமிழின் ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைப் புதிய கோணத்தில் அறிமுகம் செய்யும் ஒரு உன்னதமான பயணமே இந்த நூல். பாரதியார் முதல் தற்கால எழுத்தாளர்கள் வரை பல ஆளுமைகளின் படைப்புகளைத் தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்து ஒரு கலைக்களஞ்சியம் போல ஆசிரியர் இதில் தொகுத்துள்ளார். கதைகளின் வழியாக வாழ்வின் ஆழத்தையும், சமூகத்தின் பன்முகத்தன்மையையும் நுட்பமாகப் பதிவு செய்யும் …
Check Price