About தொப்பில் முஹம்மது மீரான் (Thoppil Mohamed Meeran)


13 Followers

தோப்பில் முஹம்மது மீரான் (செப்டம்பர் 26, 1944 – மே 10, 2019) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முக்கியமான தமிழ் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலையும் பண்பாட்டையும் முதன்முதலாக ஆழமாகப் பதிவு செய்த எழுத்தாளராக அவர் அறியப்படுகிறார். தன் சொந்த ஊரையே களமாகக் கொண்டு "ஒரு கடலோர கிராமத்தின் கதை" போன்ற நாவல்களைப் படைத்தார்.

ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும் எழுதிய மீரான், 1997ஆம் ஆண்டு "சாய்வு நாற்காலி" நாவலுக்காக இந்திய அரசின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.