About வண்ணதாசன் (Vannadasan)


86 Followers

வண்ணதாசன் (இயற்பெயர் சிவ கல்யாணசுந்தரம்) 1946-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார்; புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் தி.க. சிவசங்கரனின் மகன். வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், 1962-இல் 'தீபம்' இதழில் எழுதத் தொடங்கி, 1976-இல் 'கலைக்க முடியாத ஒப்பனைகள்' என்ற தனது முதல் நூலை வெளியிட்டார். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் 'வண்ணதாசன்' எனும் புனைப்பெயரிலும், கவிதைகளை 'கல்யாண்ஜி' எனும் பெயரிலும் எழுதுகிறார்.

'ஒரு சிறு இசை' சிறுகதைத் தொகுப்பிற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதையும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றார். கலைமாமணி, இலக்கிய சிந்தனை, பாவலர், சிற்பி உள்ளிட்ட பல விருதுகளும் இவரைத் தேடி வந்துள்ளன. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வையும் அவர்களது மனவோட்டங்களையும் நுட்பமாகப் பேசும் கதைசொல்லியாக வண்ணதாசன் அறியப்படுகிறார்.