பிரசாந்த் வே Books
About பிரசாந்த் வே (Prashanth Vae)
நகர்வாழ் மனிதர்களாலும், அதிகாரிகளாலும், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் காட்டு விலங்குகள் படும் அவஸ்தைகளை சிறுகதைகள் மூலமாக மிக ஆழமாக பதிவிடுகிறார் பிரசாந்த் வே. செய்யும் தவறுகள் எல்லாம் படித்த நகர்புற மக்கள் மீதும், அரசாங்கம் மீதும் இருக்க, காட்டு வாழ் மக்களையும், காட்டு விலங்குகளையுமே காட்டை அழிக்கும் குற்றவாளிகளாய் காண்பிக்கும் உண்மையை அறியும் போது வேதைனையே மிஞ்சுகிறது. குறிப்பாக "காட்டு மாதா கி ஜே" சிறுகதை காட்டின் அழிவையும், அதோடு இணைந்து நாட்டின் அரசியல் அவலங்களையும் நெற்றி பொட்டில் அடித்தார் போல் கூறுகிறது. "வலசை தொலைத்த யானை" சிறுகதையில் சுயநலமாக மனிதர்கள் அழித்த தன் அடையாளத்தை தேடி அலையும் காப்பக யானை இறுதியில் தோற்று வேறு வழியில்லாமல் மனிதனிடமே திரும்பும் அவலம் நெஞ்சைப் பிழிகிறது. மனிதமே இல்லாத மனிதர்களை நினைத்து வெட்கப்பட வைக்கிறது.
நல்ல எழுத்து நடை, எளிமையான உரையாடல்கள், ஆழமான கருத்துக் கள்.. நல்ல சமூக நலம் சார்ந்த வாசிப்பு.