About ரவிக்குமார் (D. Ravikumar)


பஞ்சமி நிலம் பற்றிய புரிதல்

ரவிக்குமார் அவர்களால் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பஞ்சமி நில வரலாறு எழுதப்பட்டுள்ளது. மிராசி முறை, பஞ்சமி நிலம் பற்றி விரிவான புரிதல்களை இப்புத்தகம் அளித்தது. மாவட்ட வாரியாக பஞ்சமி நில அளவை ஆதாரங்களுடன் வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. பஞ்சமி நிலம் சார்ந்த 3 உயர்நீதி மன்ற தீர்ப்புகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது பஞ்சமி நிலம் பற்றிய துல்லியமான புரிதலை ஏற்படுத்தும்.

மிகவும் எளிய நடையில் பஞ்சமி நில வரலாற்றை புரிந்துகொள்ள ஒரு முதல் படி எனும் அளவில் இப்புத்தகம் முக்கியமானது.