Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காகித மலர்கள்
Kagitha Malargal
- பக்கங்கள்
- 368
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Uyirmmai Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188641284
1970களின் டெல்லியில், அரசாங்க உயரதிகாரி பசுபதியின் மேல் நடுத்தர வர்க்கப் பிராமணக் குடும்பம் வெளிப்படையான நல்லிணக்கத்தின் முகமூடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கிறது. பதவி ஆசையில் எதையும் செய்யத் தயாராகும் பசுபதி, தமிழ் நாடகங்களில் நடிக்கும் மனைவி பாக்கியம், சூழலியலை இலட்சியமாகக் கொண்ட மூத்த மகன் விசுவம், அரியர்ஸ் வைத்துக்கொண்டு வாழ்க்கையின் மீது சலிப்படைந்த செல்லப்பா, கட்டுப்பாடுகளை உடைக்கத் துடிக்க…
Appears in following lists
Genres
Quotes
செல்லப்பா தலைமயிரை விரல்களால் கோதி சரிபார்த்துக் கொண்டான். அங்கிருந்து எடை யந்திரத்தின் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனுக்கு முதன் முறையாகத் தன்னைப் பற்றி நம்பிக்கையும் ஆசுவாசமும் ஏற்பட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. தவறான கண்ணாடிகளில் அவன் தன் பிம்பத்தைப் பார்த்துவந்தான். அவ்வளவுதான். இதுதான் அவனுடைய சரியான பிம்பம். இவளைச் சார்ந்து உண்டாகிற பிம்பம். இவள்தான் அவனுக்கேற்ற கண்ணாடி. அவனைச் சிறிதாக்கவோ பெரியதாகவவோ செய்யாத கண்ணாடி.
உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.
பத்மினியும் மனதாழத்தில், அவர்களிடையேயுள்ள பந்தத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம்தான் அளித்திருக் கிறாளோ, ஒரு வேளை? அப்படியென்றால் தாய்மை அவளைக் கவர்ச்சி குறைந்தவளாக, பாதுகாப்பற்றவளாக உணரச் செய்யலாம். அதே சமயத்தில் அவனைத் தந்தையாக்கியதால் அவனுடைய சகோ சாந்தியடைந்து, அவன் அவள் மீது நன்றி பாராட்டுவானென்று அவர் எதிர்பார்க்கலாம். சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை நிரந்தரமாகச் சிறைப்படுத்திவிட்டதாகத் திருப்தியடையவும் கூடும். ஏன், அவனும் தான் குழந்தை பிறந்த பிறகு அவள் மீது அவனுடைய ஆதிக்கம் உறுதிப்பட்டுவிட்டதாகவும் சமூக நியாயங்களின்படி அவளுக்கு அவனுடைய ஆதரவு இன்றியமையாததாகிவிட்டதென்றும் சுயநலமான ஆசுவாசம் பெறக்கூடும். சே, காதல் கடைசியில் இவ்வளவுதானா? பயன்படுத்திக்கொள்ளல்தான் உண்மையா?
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
ஏழாம் உலகம்
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…
என் பெயர் ராமசேஷன்
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராமசேஷன், பெண்களின் ஆளுமையில் ஊறிய குடும்பச் சூழலிலிருந்து தப்பிக்க விடுதியில் தங்கிப் படிக்கிறான். அங்கே ராவ் என்ற நண்பன் வழியாக மேல்தட்…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது இந்தப் படைப்பு. எந்த …
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
யவன ராணி, பாகம் 1
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் வரலாற்று நுண்குறிப்புகளைக் கொண்டு பறம்பு நாட்டின் அரசனான வேள்பாரியின் கதையும், அவனது இயற்கை சார்ந்த வாழ்வியலும் இந்த நாவலில் விரிவாக…