Quotes from வாசிப்பது எப்படி?

தகவல்களை ஒன்றோடு ஒன்றை தொடர்புப்படுத்தி நமக்குள் நாமே அடுக்கிக்கொள்கிறோம். இது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. உதாரணமாக ‘போரும் அமைதியும்’ (டால்ஸ்டாய்) வாசித்துவிட்ட ஒருவனின் மூளைக்குள் அனிச்சையாகவே ரஷ்யா மற்றும் பிரான்ஸின் வரலாறு இன்ஸ்டால் ஆகிவிடுகிறது. பிறகு உலக வரலாற்றின் மையப்புள்ளியாக அந்நாவலை வைத்துக்கொண்டே முன்னும் பின்னும் ஊஞ்சலாட முடியும்.
செல்வேந்திரன் (Selvendiran) — 'வாசிப்பது எப்படி?'
நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள். வாசித்ததைச் சொல்லுங்கள். போதும்.
செல்வேந்திரன் (Selvendiran) — 'வாசிப்பது எப்படி?'
செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய். எல்லாம் செய்தவனாவாய். இருக்கும் எல்லாவற்றையும் செய்ய நினைத்தால் அந்த ஒன்றையும் இழந்திடுவாய். பூக்களும் பழங்களும் தேவையெனில் நீ நீருற்ற வேண்டியது வேருக்கே.[
செல்வேந்திரன் (Selvendiran) — 'வாசிப்பது எப்படி?'
உய்த்துணரும்
செல்வேந்திரன் (Selvendiran) — 'வாசிப்பது எப்படி?'