Quotes from மூன்றாம் உலகப் போர்

மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் போதும்; அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
சுவையான கதை; ஆனால் சோக முடிவு." "எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
படிச்ச மகன் பெருமையை படிக்காதவன் கொண்டாடற மாதிரி படிச்சவன் கொண்டாடறதில்ல.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம்பூச்சியை எந்தப் பறவை விசாரிக்கும்?
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
இந்த உலகத்தை பிறப்பிலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் சோகத்தில் முடிகிறான்; மரணத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் ஞானத்தில் முடிகிறான்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'