Quotes from மூன்றாம் உலகப் போர்
அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
இந்தியாவில் பிடித்தது?" "உழைப்பு." "பிடிக்காதது?" "ஊழல்." "ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!" "உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்." "நீ மிருகமா? தெய்வமா?" "நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள்; ஓரே நிறத்தில் இருந்தால் வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
தேவைக்கு ஆரம்பிக்கிற சம்பாத்தியம், ஆசைக்கு இழுத்துட்டுப் போகுது. ஆசை பேராசையில முடியுது. பேராசை மனவியாதியில கொண்டுபோய் விட்டுறது மனுசன.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
வாழ்வின் பல தருணங்களில் அறியாமைதான் சந்தோஷம்; அறிவு நிம்மதிக்குச சத்துரு.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதுமில்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதிலிருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல்.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'
தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி.
வைரமுத்து (Vairamuthu) — 'மூன்றாம் உலகப் போர்'