காடு
Share:

காடு

Kaadu

Check Price on Amazon
4.23/5 · 700+ ratings

காடு

Kaadu

4.23/5 · 700+ ratings
பக்கங்கள்
474
வடிவம்
Hardcover
பதிப்பகம்
தமிழினி
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
First Edition
ASIN
B00H6ZU8H2

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். இயற்கை அன்னையின் மடியில் தவழும் குறிஞ்சி நிலக் காடுகளின் அழகையும், அது எவ்விதம் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விரிவாகக் கூறுகிறது.

மனித உறவுகளின் நுட்பமான உணர்வுகளையும், காமத்தின் பலவிதமான வண்ண பேதங்களையும் இக்கதை ஆராய்கிறது. தேர்ந்த வாசகர்களுக்கு மட்டுமே எட்டும் வகைய…

Interested in this book? Check Price on Amazon
Quotes

சிமிண்ட் குழைவதைப் பார்க்கையில் ஓர் இதம். மென்மையான குழைவுகள். மண்வெட்டியால் அரியப்படும்போது உருவாகும் சிறு சமப்பரப்புகள். நீர் ஊற்றப்படும்போது நுரைக்கும் கொழும்பால். கருங்கற்கள் அடுக்கப்படுவதைச் சலிப்பின்றிப் பார்த்து நிற்கலாம். தனித்தனியாகக் கிடக்கையில் எவ்வித வடிவமும் இல்லாத சாம்பல் நீலமொத்தைகள். ஒரு கல் மீது ஒரு கல்லைத் தூக்கி கொத்தன் சிவனாண்டி வைக்கும்போது ஒன்றின் புடைப்பு பிறிதின் குழிவில் கச்சிதமாகப் போய் அமர்கிறது. ஒன்று பிறிதை நிரப்பி இணைந்து ஒற்றைக் கற்சுவராக மாறுகின்றன. கொத்தனாரின் கண்களுக்கு மட்டும் அவை தனிக்கற்கள் அல்ல. கட்டப்படாத ஒரு சுவரிலிருந்து பிரிந்து கிடப்பவை. குண்டு தொங்கும் நூல், ரசமட்டம், மரச்சட்டம். மெல்ல மெல்ல அவற்றினால் வகுக்கப்பட்டு சீரான, நேரான வடிவங்கள் எழுந்து வருகின்றன. சுற்றிலும் சீரற்ற பூமி. மண்ணின் வடிவ ஒழுங்கற்ற அலைகள். நடுவே அந்தச் சீரான வடிவம் மனிதனின் இச்சைபோல. மனிதன், அவனால் முடிந்தால் பூமியை முழுக்க இப்படிச் சீரான வடிவங்களாக மாற்றி விடுவான். அதற்கான ஒரு தொடக்கம் இந்தச் சுவர். இந்தக் கல்வெர்ட். இந்த ஓடைக்கரை. அப்பால் பிரம்மாண்டமாக எழுந்த சிற்றாறு அணை.

வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம். மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன. ஏறி ஏறி உச்சியில் கால் வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்துவிடுகிறது. ஏறும்போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.

ஆனால் தொலைவில் ஓங்கி எழுந்து நிற்கின்றன மலைகள். அவற்றின் பச்சைப்பசும் குவியல் மீது குளிர்ந்த கரிய பாறை முகடுகள். அவற்றின் மௌனம் தனக்குள் சிரித்துக்கொள்வது போலிருக்கிறது. மலைமுகடுகளைப் பார்க்கும்போது மனதில் ஓடும் எண்ணங்கள் வேகம் குறைந்து கனத்து அசைய ஆரம்பித்துவிடும். சில கணங்களில் காட்டையும் மலைச்சரிவுகளையும் அம்மலை முகடு மீதிருந்து பார்ப்பதுபோல ஒட்டு மொத்தமாகப் பார்க்க முடியும். அந்த விரிவில் காடு ஒன்றுமே நிகழாத வெளியாக விரிந்து கிடக்கும். மரங்கள் குலுங்குகின்றன. தொலைவில் ஒரு புள்ளிமான் மட்டும் குனிந்து மேய்கிறது. கல்வெர்ட் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. சிறிய அசைவுகள். அசையாது படுத்திருக்கும் பசு மீது உண்ணிகள் நகர்வதுபோல. வேலை என்று ஒன்றுமில்லை. மலைகளின் அடியில் அப்படி சும்மா இருப்பது சாதாரண விஷயமல்ல. ஒரு தருணம் மலையளவு பெருத்து விரிந்தும், மறுதருணம் மலைகளுக்கு முன் தூசியாக உணர்ந்தும் மனம் அங்குமிங்கும் பெருகி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏராளமான சொற்கள். எல்லாச் சொற்களும் சற்று அசைந்தால் கூட கைபட்ட தடாகத்து மீன்கள்போல மறைந்துவிடுகின்றன.

More Quotes...
Shelves
புனைவு காதல் இயற்கை Tamil Literature தமிழ் இலக்கியம் Romance Nature நாவல் சூழலியல் Fiction நாவல்கள் Novel Novels Ecology

More like this


அறம்

அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…

4.42/5 · 2K+ ratings

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…

4.6/5 · 1K+ ratings

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings

மோகமுள்

மோகமுள் ஒரு உன்னதமான சிருஷ்டியாகும். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல், வாழ்க்கையின் சிக்கல்களையும் மனித மனத்தின் நுட்பமான உணர்வு…

4.17/5 · 900+ ratings

ஏழாம் உலகம்

சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…

4.16/5 · 600+ ratings

இரவு

பகல் முழுவதும் உறங்கி, இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்தினுள் நுழையும் ஒருவனின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஒரு குறுநாவல் இது. பெரிய மிருகங்கள் அனைத்து…

4.05/5 · 300+ ratings

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

அஸ்தினபுரி அரண்மனையின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதையோடு தொடங்கும் இந்நாவல், மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தை நவீனத் தமிழ் உரைநடையில் மீட்டுருவாக்கம் ச…

4.56/5 · 200+ ratings

ரப்பர்

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடுகள் அழிந்து ரப்பர் தோட்டங்களாக மாறிய சூழலை மையமாகக் கொண்டு விரியும் இந்நாவல், வணிகமயமாதலும் சுற்றுச்சூழல் அழிவும் ஒரு நில…

3.94/5 · 200+ ratings

விசும்பு

தமிழ்ச் சூழலில் வேரூன்றிய அறிவியல் புனைகதை வடிவத்தைத் தேடும் சிறுகதைத் தொகுப்பு இது. ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்து அக்காலத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட அறிவியல் சிறு…

3.97/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …

4.72/5 · 3K+ ratings