Quotes from ஜே ஜே சில குறிப்புகள்

மன மாற்றம் நிகழாத தலைமை, நேற்றைய சரித்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்தி, அதன் மூலமே நற்பெயர் பெற்று அதே கொடுமையை இன்று செய்து, பதவியை உறிஞ்சிக்கொண்டு கிடக்கும்
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
விடைகளைத் தேடிப் போகலாம். தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கலாம். நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவை வெளிப்பட்டு நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடும். ஆனால் முன்தீர்மானங்கள் பயணத்தைத் தொடர விடுவதில்லை. காத்திருக்க விடுவதில்லை. தேட விடுவதில்லை.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
போதையில் அல்ல; மயக்கங்களில் அல்ல; சுய விருப்பம் சார்ந்த கற்பனைகளில் அல்ல; தன்னை முற்றாக அழித்துக்கொண்டு சிந்திக்கத் திராணி கொண்ட மூளைகளே உண்மைகளை ஸ்பரிசித்துக்கொண்டுவந்திருக்கின்றன.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
நீ ஏற்கலாம். அல்லது மறுக்கலாம். அது உன் பார்வையைப் பொறுத்தது. சரியைச் சொல்வது அல்ல, என் மனம் சரியென்று நம்புவதைச் சொல்லிவிடுவது. இதுதான் எழுத்தின் அடிப்படை.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடே உன் பாதையை உருவாக்குகிறது
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
வர்ணத்தை வீசிவிட்ட ஓவியன் இங்கு வார்த்தைகளால் வரைகிறான்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
நெருக்கடியில் எப்படி எழுதினான் ஜே. ஜே. என்று கேட்டால், நெருக்கடியால் எழுதினான் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
இவை இப்படியிருக்க, என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக் கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக்கூடும். காகங்கள் சிரிக்கக்கூடும் சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புத்தான். அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'
சகல மேன்மைகளும் இதிலிருந்து தோன்றுபவைதாம். இல்லாத இந்த 'இல்லை'யை, இல்லை என்று மனிதன் எப்போது யோசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று மனிதன் மிருகங்களுக்குச் சமானமாகிவிடுகிறான்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ஜே ஜே சில குறிப்புகள்'